எந்த சின்னத்துல ஓட்டு போட்டாலும் “தாமரை”க்கு லைட் எரியுதா? பரபரத்த சென்னை.. ஆய்வு செய்த அதிகாரிகள்!
சென்னை: சென்னை வியாசர்பாடியில் எந்த சின்னத்திற்கு வாக்களித்தாலும் பாஜகவின் தாமரை சின்னத்திற்கு நேராக லைட் எரிவதாக புகார் எழுந்தது. இதனால் அங்கு எதிர்க்கட்சிகள் தர்ணாவில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் அங்கு மீண்டும் வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது. நடந்தது என்ன?
தமிழ்நாட்டில் மக்களவை தேர்தல் ஒரேகட்டமாக 39 தொகுதிகளுக்கும் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. காலையில் இருந்து விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினர் வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்னதாகவே வரிசையில் காத்திருந்து வாக்களித்தனர்.

சில இடங்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு உள்ளிட்ட பிரச்சனைகள் சிறிய அளவில் இருந்தாலும், பெரும்பாலும் வாக்குப்பதிவு தடைபடாமல் நடந்தது. இந்நிலையில், வடசென்னை மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட வியாசர்பாடியில் புதிய பிரச்சனை எழுந்துள்ளது.
வியாசர்பாடி எம்.கே.பி நகர் பகுதியில் உள்ள மாநகராட்சி பள்ளியின் 150வது வாக்குச்சாவடியில் எந்த சின்னத்துக்கு நேராக உள்ள பட்டனை அழுத்தினாலும் தாமரை சின்னத்துக்கு அருகில் உள்ள லைட் எரிவதாக எழுந்த புகாரையடுத்து திமுக, அதிமுக பூத் முகவர்கள் தர்ணாவில் ஈடுபட்டுள்ளனர்.
வாக்காளர்கள் சிலர் தாங்கள் வேறு சின்னத்துக்கு வாக்களித்தாலும் தாமரை சின்னத்திற்கு நேராக லைட் எரிவதாக கூறியதை அடுத்து, அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த வாக்குச்சாவடி பாக முகவர்கள், பரிசோதிக்கும்படி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
விரைந்து வந்த தேர்தல் அதிகாரிகள் திமுக அதிமுக பூத் முகவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். ஆனால் அதனை ஏற்காமல் திமுக, அதிமுக பூத் முகவர்கள் வாக்கு வாதத்தில் ஈடுப்பட்டு, வாக்குப்பதிவு நடைபெறும் இடத்தில் தர்ணாவில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்ப்பட்டது.
ஏற்கனவே, கேரளாவில் காசர்கோடு தொகுதியில் நடந்த மாதிரி வாக்குப்பதிவின்போது, பாஜகவுக்கு ஒரு முறை பட்டன் அழுத்தினால் 2 வாக்குகள் விழுவதாக சர்ச்சை எழுந்து, உச்ச நீதிமன்றம் வரை சென்றது குறிப்பிடத்தக்கது.
திமுக, அதிமுக பூத் ஏஜெண்டுகளின் தர்ணாவை தொடர்ந்து, தேர்தல் அதிகாரிகள், அந்த வாக்குச்சாவடியில் உள்ள இயந்திரத்தை ஆய்வு செய்தனர். அதிகாரிகளின் ஆய்வுக்குப் பின், அப்படி எதுவும் தவறு நடக்கவில்லை என உறுதி செய்தனர். தொடர்ந்து, 150வது எண் வாக்குச்சாவடியில் மீண்டும் வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications