Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

எந்த சின்னத்துல ஓட்டு போட்டாலும் “தாமரை”க்கு லைட் எரியுதா? பரபரத்த சென்னை.. ஆய்வு செய்த அதிகாரிகள்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை வியாசர்பாடியில் எந்த சின்னத்திற்கு வாக்களித்தாலும் பாஜகவின் தாமரை சின்னத்திற்கு நேராக லைட் எரிவதாக புகார் எழுந்தது. இதனால் அங்கு எதிர்க்கட்சிகள் தர்ணாவில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் அங்கு மீண்டும் வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது. நடந்தது என்ன?

தமிழ்நாட்டில் மக்களவை தேர்தல் ஒரேகட்டமாக 39 தொகுதிகளுக்கும் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. காலையில் இருந்து விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினர் வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்னதாகவே வரிசையில் காத்திருந்து வாக்களித்தனர்.

Light on lotus symbol regardless of which symbol one vote for in chennai

சில இடங்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு உள்ளிட்ட பிரச்சனைகள் சிறிய அளவில் இருந்தாலும், பெரும்பாலும் வாக்குப்பதிவு தடைபடாமல் நடந்தது. இந்நிலையில், வடசென்னை மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட வியாசர்பாடியில் புதிய பிரச்சனை எழுந்துள்ளது.

வியாசர்பாடி எம்.கே.பி நகர் பகுதியில் உள்ள மாநகராட்சி பள்ளியின் 150வது வாக்குச்சாவடியில் எந்த சின்னத்துக்கு நேராக உள்ள பட்டனை அழுத்தினாலும் தாமரை சின்னத்துக்கு அருகில் உள்ள லைட் எரிவதாக எழுந்த புகாரையடுத்து திமுக, அதிமுக பூத் முகவர்கள் தர்ணாவில் ஈடுபட்டுள்ளனர்.

வாக்காளர்கள் சிலர் தாங்கள் வேறு சின்னத்துக்கு வாக்களித்தாலும் தாமரை சின்னத்திற்கு நேராக லைட் எரிவதாக கூறியதை அடுத்து, அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த வாக்குச்சாவடி பாக முகவர்கள், பரிசோதிக்கும்படி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

விரைந்து வந்த தேர்தல் அதிகாரிகள் திமுக அதிமுக பூத் முகவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். ஆனால் அதனை ஏற்காமல் திமுக, அதிமுக பூத் முகவர்கள் வாக்கு வாதத்தில் ஈடுப்பட்டு, வாக்குப்பதிவு நடைபெறும் இடத்தில் தர்ணாவில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்ப்பட்டது.

ஏற்கனவே, கேரளாவில் காசர்கோடு தொகுதியில் நடந்த மாதிரி வாக்குப்பதிவின்போது, பாஜகவுக்கு ஒரு முறை பட்டன் அழுத்தினால் 2 வாக்குகள் விழுவதாக சர்ச்சை எழுந்து, உச்ச நீதிமன்றம் வரை சென்றது குறிப்பிடத்தக்கது.

திமுக, அதிமுக பூத் ஏஜெண்டுகளின் தர்ணாவை தொடர்ந்து, தேர்தல் அதிகாரிகள், அந்த வாக்குச்சாவடியில் உள்ள இயந்திரத்தை ஆய்வு செய்தனர். அதிகாரிகளின் ஆய்வுக்குப் பின், அப்படி எதுவும் தவறு நடக்கவில்லை என உறுதி செய்தனர். தொடர்ந்து, 150வது எண் வாக்குச்சாவடியில் மீண்டும் வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+