Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"முடிச்சிட்டீங்களா" வாக்காளர் அட்டை + ஆதார் இணைப்பு? தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சொன்ன முக்கிய தகவல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் மார்ச் 31 வரை, மொத்தம் 4.21 கோடி வாக்காளர்கள் தங்களின் ஆதார் எண்களை, வாக்காளர் பட்டியலுடன் இணைக்க வழங்கி உள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அதிகாரி சத்யபிரத சாஹூ தெரிவித்துள்ளார்.. அத்துடன், வாக்காளர் அட்டையுடன், ஆதார் எண்ணை இணைப்பதற்கு விண்ணப்பிப்பதற்கான காலஅவகாசம் மார்ச் 31-ம் தேதியுடன் முடிவடைந்த நிலையில், நீட்டிப்பு, குறித்து தேர்தல் ஆணையம் இதுவரை அறிவிப்பு வெளியிடவில்லை என்றும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி விளக்கம் தந்துள்ளார்.

வாக்காளர் பட்டியலில் போலி வாக்காளர்கள், இரட்டை பதிவு, இறப்பு வாக்காளர்கள் பட்டியலில் இடம் பெற்றிருத்தல் ஆகியவற்றால் நிறைய குழப்பங்கள் ஏற்பட்டு வந்தன.

இந்த குழப்பங்களை போக்கும் வகையில் நீண்ட நாள் போராட்டத்துக்குப்பிறகு, வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான நடவடிக்கையை தேர்தல் ஆணையம் மேற்கொண்டது.

 ஓட்டுச்சாவடி

ஓட்டுச்சாவடி

அந்தவகையில், கடந்த வருடம் ஆகஸ்ட் 1-ம் தேதி ஆதார் இணைப்புக்கான விண்ணப்பங்கள் பெறும் நடவடிக்கை தொடங்கப்பட்டது... வாக்காளர் பதிவு அலுவலர்கள் நேரடியாக வீடுவீடாகச் சென்று விண்ணப்பங்களைப் பெற்றனர். அத்துடன் கருடா என்ற ஆப்பிலும் ஆதார் தகவல்களைப் பதிவு செய்தனர்.. மேலும், ஆன்லைனிலும் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டது... ஓட்டுச்சாவடி அலுவலர்கள் வீடு வீடாக சென்று, வாக்காளர்களின் ஆதார் எண்களை சேகரித்தனர்.. சிறப்பு முகாம்களும்நடத்தப்பட்டன. www.nvsp.in என்ற இணையதளம் வழியாக, 'Voter Help Line' எனும் செயலி வழியாகவும் ஆதார் எண்ணை பதிவேற்றம் செய்யலாம் என்று தேர்தல் கமிஷன் அறிவித்தது.

 லிஸ்ட் எங்கே

லிஸ்ட் எங்கே

எனவே, இந்தியா முழுவதும் வாக்காளர் பட்டியலுடன் வாக்காளர்களின் ஆதார் எண் உள்ளிட்ட விவரங்களை இணைப்பதற்காக அவற்றை பெறும் பணி, கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு மார்ச் மாதம் 31-ந் தேதியுடன் இந்த நடவடிக்கைகள் முடிவடையும் என்று இந்திய தேர்தல் கமிஷன் ஏற்கனவே அறிவித்திருந்தது.. ஆனால், மத்திய சட்டத்துறையின் சார்பில் கால அவகாசத்தை மேலும் ஓராண்டுக்கு அதாவது அடுத்தாண்டு மார்ச் 31-ம் தேதி வரை நீட்டித்து சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளதாக கடந்த 10 நாட்களுக்கு முன்பு, சோஷியல் மீடியாவில் தகவல் வெளியானது.

 காலநீட்டிப்பு

காலநீட்டிப்பு

இந்நிலையில், இதுகுறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ நேற்றைய தினம் சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.. அப்போது அவர் சொல்லும்போது, "காலநீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக எந்த அறிவிப்பையும் தேர்தல் ஆணையம் இதுவரை வெளியிடவில்லை... இது தொடர்பாக, தேர்தல் கமிஷன் முடிவுக்காக காத்திருக்கிறோம். ஏற்கனவே கடந்த மார்ச் 31-ம் தேதியுடன் இணைப்புக்கான விண்ணப்பிக்கும் நடவடிக்கை முடிந்துள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரை 68.75 சதவீதம் வாக்காளர்கள் ஆதார் இணைப்புக்கு விண்ணப்பித்துள்ளனர்.

அறிவிப்பு

அறிவிப்பு

அதாவது மொத்தம் உள்ள 6.20 கோடி வாக்காளர்களில் 4.21 கோடி வாக்காளர்கள் விண்ணப்பித்துள்ளனர். இதில், அரியலூரில் 99 சதவீதம், கள்ளக்குறிச்சியில் 93.91 சதவீதம், நாகப்பட்டினத்தில் 87.49 சதவீதம் பேரும், குறைந்தபட்சமாக சென்னையில் 32, கோயம்புத்தூரில் 48.34, செங்கல்பட்டில் 53.50 சதவீதம் பேரும் விண்ணப்பித்துள்ளனர்.. மேலும், ஆதார் - வாக்காளர் பட்டியல் இணைப்பு பணியை தேர்தல் ஆணையம் இதுவரை தொடங்கவில்லை. இதற்கான அறிவிப்பும் வரவில்லை. அதற்கான விண்ணப்பங்கள் மட்டுமே பெறப்பட்டுள்ளன" என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+