எல்எல்ஆர், லைசென்ஸ் வழங்குவது மார்ச் 31ம் தேதி வரை நிறுத்தம்.. அமைச்சர் முக்கிய அறிவிப்பு
சென்னை: கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆர்டிஓ அலுவலகங்களில் மார்ச் 31ம் தேதி வரை எல்எல்ஆர் லைசென்ஸ் வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளதாக தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜய பாஸ்கர் தெரிவித்துள்ளார்.
போக்குவரத்துத்துறையில் கொரோனாவைரஸ் நோய் தடுப்பு மற்றும் மேற்கொள்ளப்படும் முன்னெச்சரிக்கை குறித்து ஆலோசனை கூட்டம் நேற்று மாலை 5 மணி அளவில் மாநகர போக்குவரத்து கழக தலைமையக கருத்தரங்கு கூட்டத்தில் நடந்தது.

இந்த கூட்டத்தில் போக்குவரத்துத் துறை முதன்மை செயலாளர் தர்மேந்திர பிரதாப் யாதவ் உள்பட அதிகாரிகள் பங்கேற்றனர். அதேபோல் ஆம்னி பேருந்துகள் சங்க தலைவர் அபச்ல் உள்பட பலர் பங்கேற்றனர். இந்த கூட்டத்தினருடன் ஆலோசனை நடத்திய போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், அப்போது பேசுகையில், கொரோனா வைரஸ் நோயினை உலகளாவிய நோய்த் தொற்றாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. பொதுமக்ள் அதிகம் பயன்படுத்துகின்ற தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களைச் சேர்ந்த 21092 பேருந்துகளும் கடந்த 9ம் தேதி கிருமிநாசினி மூலம் சுத்தம் செய்யப்பட்டது.
386 பேருந்து நிலையங்களிலும் தொடர்புடைய மாநகராட்சி, நகராட்சி மற்றும் மக்கள் நல்வாழ்வு துறையுடன் இணைந்து இப்பணிகள மேற்கொள்ளப்படுகின்றன. தனியார் பேருந்துகள், ஆம்னி பேருந்துகள் உள்பட 12592 பேருந்துகளை கிருமி நாசினிகள் மூலம் சுத்தம் செய்யுமாறு அறிவுறத்தப்பட்டுள்ளது என்றார். மேலும் கல்லூரி பேருந்துகள், பள்ளி வாகனங்களையும் சுத்தமாக பராமரிக்க வேண்டும் என அறிவுறுத்தினார், மேலும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் விவாதித்தார்.
இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கர், பேருந்துகளில் பயணிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது. அதற்கு தகுந்தார் போல் பேருந்துகளின் எண்ணிக்கையையும் குறைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஆர்டிஓ அலுவலகங்களில் புதிதாக பழகுநர் உரிமம் (எல்எல்ஆர்), ஓட்டுநர் உரிமம் கொடுப்பது வரும் மார்ச் 31ம் தேதி வரை நிறுத்தி வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. லைசென்ஸ் தேதி முடிந்தவர்கள் வாங்கி கொள்ளலாம். ஒரே நேரத்தில் மக்கள் கூடுவதை தவிர்க்க இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. சிறப்பு பேருந்துகள் இயக்கம் நிறுத்தப்பட்டுள்ளது. மக்களின் எண்ணிக்கையை பொறுத்து பேருந்துகள் இயக்கப்படும்" என்றார்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications