விறுவிறுப்படைந்த வேட்புமனுத் தாக்கல்... வேகமெடுத்த உள்ளாட்சித் தேர்தல்
சென்னை: உள்ளாட்சித் தேர்தலை நடத்த தடையில்லை என உச்சநீதிமன்றம் நேற்று பிற்பகல் தீர்ப்பு கூறியது முதல், தமிழகம் முழுவதும் தேர்தல் பணிகள் திடீர் வேகம் எடுத்துள்ளன.
உச்சநீதிமன்ற தீர்ப்பை பார்த்துவிட்டு வேட்புமனு தாக்கல் செய்யலாம் என காத்திருந்தோர் நேற்று பிற்பகல் முதலே தேர்தல் நடத்தும் அலுவலர்களிடம் மனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர்.
தொலைக்காட்சிகளில் தீர்ப்பு பற்றிய விவரம் வெளியாகிய அடுத்த ஒரு மணி நேரத்தில் திருச்சி மாவட்டத்தில் மட்டும் நேற்று 777 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

உள்ளாட்சித் தேர்தல்
உள்ளாட்சித் தேர்தலை முறைபடி நடத்தக்கோரி திமுக உச்சநீதிமன்றத்தை நாடியிருந்ததால் அது தொடர்பான தீர்ப்புக்கு பின்னர் வேட்புமனுத் தாக்கல் செய்யலாம் என பெரும்பாலானோர் கருதியிருந்தனர். இந்நிலையில் தேர்தலை நடத்த வேண்டும் என உச்சநீதிமன்றம் திட்டவட்டமாக கூறிவிட்டதால், இப்போது போட்டி போட்டுக்கொண்டு ஊரகப்பகுதிகளில் வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு வருகின்றன.

திருவிழா
தமிழகம் முழுவதும் நேற்று வரை களையிழந்து காணப்பட்ட ஊராட்சி ஒன்றிய பகுதிகள் இன்று திருவிழாக் கோலம் பூண்டுள்ளன. வேட்புமனுக்களை தாக்கல் செய்துவிட்டு பிரச்சாரங்களையும் தொடங்கிவிட்டனர் வேட்பாளர்கள். இதனால் கிராமங்களில் மைக் செட் அலறத் தொடங்கியுள்ளது.

சொந்த பந்தம்
ஊராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிடுபவர்கள் சொந்தபந்தங்களை தேடிச்சென்று மாமா, பெரியப்பா, சித்தப்பா என உறவுகளை உரிமையோடு அழைத்து தங்களுக்கு வாக்களிக்க வேண்டும் என வலம் வரத் தொடங்கிவிட்டனர். மொத்தத்தில் ஜனவரி 2-ம் தேதி வரை ஊரகப் பகுதி மக்கள் பிஸியாக இருக்கப் போகிறார்கள்.

தேர்தல் இல்லை
இதனிடையே பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி பகுதிகளுக்கு உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாததால் தேர்தலுக்கான தடமே இங்கெல்லாம் தெரியவில்லை. மேலும், நகர மக்களில் சிலர் சொந்த கிராமங்களில் வாக்குரிமை வைத்திருப்பவர்கள் தேர்தல் அன்று ஊருக்கு சென்று வாக்களிக்கவும் தயாராகி வருகின்றனர்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications