உள்ளாட்சித் தேர்தல்… மே 31ஆம் தேதிக்குள் அறிவிப்பாணை… மாநில தேர்தல் ஆணையம் தகவல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: உள்ளாட்சி தேர்தல் தொடர்பான அறிவிப்பாணை மே 31 ஆம் தேதிக்குள் அறிவிக்கப்படும் என மாநிலத் தேர்தல் ஆணையம் உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை கடந்த 2017 ஆம் ஆண்டு நவம்பர் 17-ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்கவும் அது தொடர்பான அறிவிப்பாணையை 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் 18-ம் தேதிக்குள் வெளியிடவும் உத்தரவிட்டு இருந்தது உயர்நீதிமன்றம்.

Local body elections will be announced by May 31st Election Commission report

இந்த உத்தரவை நிறைவேற்றத் தவறிய மாநிலத் தேர்தல் ஆணையர் மாலிக் பெரோஸ் கான் மற்றும் மாநில தேர்தல் ஆணைய செயலாளர் டி.எஸ் ராஜசேகர் மீது திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது உள்ளாட்சி தேர்தல் தொடர்பான அறிவிப்பாணை மே 31 ஆம் தேதிக்குள் வெளியிடப்படும் என மாநில தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்தது.

இதனைத் தொடர்ந்து, வழக்கு விசாரணையை ஜூன் 6 ஆம் தேதிக்கு தள்ளி வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். தமிழகத்தில் 2016 அக்டோபரில் 2 கட்டங்களாக நடத்தப்பட்டு இருக்க வேண்டிய உள்ளாட்சித் தேர்தல் இன்னும் நடத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+