4 மாவட்டங்களில் இன்று உள்ளூர் விடுமுறை.. அய்யா வைகுண்டர் அவதார நாள்.. பள்ளி, கல்லூரி மாணவர்கள் குஷி
சென்னை: கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் இன்று (மார்ச் 4) உள்ளூர் விடுமுறை அளித்து அறிவிக்கப்பட்டுள்ளது.
அய்யா வைகுண்டர் அவதார தினத்தை முன்னிட்டு, இன்று மார்ச் 4ஆம் தேதி கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தென் தமிழகத்தில் ஆண்டுதோறும் மிகுந்த பக்தி உணர்வுடன் கொண்டாடப்படும் இந்த தினத்தையொட்டி 4 மாவட்ட ஆட்சியர்கள் இந்த விடுமுறை அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

அய்யா வைகுண்டர் அவதார தினத்தை முன்னிட்டு சாமித்தோப்பு தலைமை பதி உள்ளிட்ட முக்கிய வழிபாட்டு தலங்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடுவார்கள். இதனால் பொதுமக்களின் வசதி மற்றும் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு அரசு அலுவலகங்கள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
இந்த நாளில் நடைபெறும் சிறப்பு வழிபாடுகள், ஆன்மிக ஊர்வலங்கள் மற்றும் அன்னதான நிகழ்ச்சிகளில் பக்தர்கள் பெருமளவில் பங்கேற்க உள்ளனர். தென் மாவட்டங்களின் பல பகுதிகளில் விழா ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
அதேசமயம், அத்தியாவசிய பணிகள்/ பணியாளர்களுக்கு இந்த விடுப்பு பொருந்தாது என தெரிவிக்கப்படுகிறது. அவசர சேவைகள், மருத்துவமனைகள் மற்றும் முன்கூட்டியே திட்டமிடப்பட்ட பொதுத்தேர்வுகள் வழக்கம்போல நடைபெறும் என மாவட்ட நிர்வாகங்கள் தெரிவித்துள்ளன. பொதுமக்கள் தேவையற்ற நெரிசலைத் தவிர்த்து, அதிகாரிகளின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இது செலாவணி முறிச் சட்டத்தின்படி (Negotiable Instruments Act 1881) பொது விடுமுறை நாளல்ல எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறைக்குப் பதிலாக 14.3.2026 இரண்டாம் சனிக்கிழமை அலுவலக நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சென்னை உள்ளிட்ட பிற மாவட்டங்களில் வழக்கம்போல் அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அய்யா வைகுண்டர் அவதார தினத்தை முன்னிட்டு தென் தமிழகத்தில் ஆன்மீன நிகழ்வில் ஏராளமானோர் கலந்து கொள்கின்றனர்.
-
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம்












Click it and Unblock the Notifications