ஹை ஜாலி.. இந்த ஊர்களில் இன்று விடுமுறை.. அரசு ஊழியர்களுக்கு வந்த அறிவிப்பு! இதுக்காக தான் லீவா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் தேர்வுகள் நிறைவடைந்த நிலையில் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டு இருக்கும் நிலையில் தற்போது இரு மாவட்டங்களில் உள்ளூர் விடுமுறையானது அளிக்கப்பட்டிருக்கிறது. எந்தெந்த ஊர்களில் விடுமுறை எதற்காக விடுமுறை அளிக்கப்பட்டு இருக்கிறது என்பது குறித்து பார்க்கலாம்..

தமிழகத்தில் தேர்வுகள் முடிவடைந்திருக்கும் நிலையில் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டு இருக்கிறது. ஏற்கனவே பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் இன்று பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாக இருக்கிறது.

Local holiday notification for Ooty Theni districts today


விடுமுறை காரணமாக பொதுமக்கள் பலரும் வெளியூர்களுக்கு பயணம் மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக கோடை வாசஸ்தலங்களுக்கு படையெடுக்கும் மக்களின் எண்ணிக்கையானது அதிகரித்து வருகிறது.

தற்போது கொடைக்கானல் ஊட்டி போன்ற பகுதிகளுக்கு படையெடுக்கும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சுற்றுலா பயணிகளை கவர்வதற்காக ஊட்டி கொடைக்கானலில் கோடை விழாக்கள் நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில் இன்று உதகையில் புகழ் பெற்ற மலர் கண்காட்சி நடக்கிறது. பூத்துக் குலுங்கும் வண்ண வண்ண மலர்களை பார்ப்பதற்காக மக்கள் அதிக அளவில் திரள்வார்கள் அந்த வகையில் ஊட்டியில் 126வது மலர் கண்காட்சி நடைபெறுவதை முன்னிட்டு இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது.

நீலகிரி மாவட்டம் ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் கோடை சீசனையொட்டி இருபதாம் தேதி வரை இந்த மலர் கண்காட்சியானது நடக்க இருக்கிறது. ஊட்டி ரோஜா பூங்காவில் ரோஜா கண்காட்சியும் தொடக்க இருக்கிறது. மலர் கண்காட்சியை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்தில் இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சியர் அருணா வெளியிட்டுள்ள அறிக்கையில் நீலகிரி மாவட்டத்தில் இன்று 126 வது மலர் கண்காட்சி தொடங்குகிறது.

இதனால் மாவட்டத்தில் உள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது. மாவட்ட கருவூலம் மற்றும் சார்நிலை கருவூலகங்கள், அரசு பாதுகாப்புக்கான அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு குறிப்பிட்ட பணியாளர்களுடன் செயல்படும். மேற்கண்ட விடுமுறை நாளை ஈடுசெய்ய வருகிற 18-ம் தேதி நீலகிரி மாவட்டத்திற்கு பணி நாளாகும்” என அறிவித்திருக்கிறார்

இதேபோல தேனி மாவட்டம் வீரபாண்டி கௌமாரியம்மன் கோவில் தேரோட்டத்தை முன்னிட்டு தேனி மாவட்டத்திற்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டு இருக்கிறது. இந்த கோயில் சித்திரை திருவிழா கடந்த 7ஆம் தேதி தொடங்கி நிலையில் மே 14ஆம் தேதி வரை நடக்கிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக இன்று தேரோட்டம் தொடங்குகிறது. நாளை, நாளை மறுநாள் ரத ஊர்வலம் நடக்க இருக்கும் நிலையில் தேரோட்டத்தையொட்டி இன்று உள்ளூர் முறை விடுமுறையை தேனி மாவட்ட ஆசிரியர் சஜீவனா அறிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+