ஹை ஜாலி.. இந்த ஊர்களில் இன்று விடுமுறை.. அரசு ஊழியர்களுக்கு வந்த அறிவிப்பு! இதுக்காக தான் லீவா?
சென்னை: தமிழகத்தில் தேர்வுகள் நிறைவடைந்த நிலையில் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டு இருக்கும் நிலையில் தற்போது இரு மாவட்டங்களில் உள்ளூர் விடுமுறையானது அளிக்கப்பட்டிருக்கிறது. எந்தெந்த ஊர்களில் விடுமுறை எதற்காக விடுமுறை அளிக்கப்பட்டு இருக்கிறது என்பது குறித்து பார்க்கலாம்..
தமிழகத்தில் தேர்வுகள் முடிவடைந்திருக்கும் நிலையில் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டு இருக்கிறது. ஏற்கனவே பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் இன்று பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாக இருக்கிறது.

விடுமுறை காரணமாக பொதுமக்கள் பலரும் வெளியூர்களுக்கு பயணம் மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக கோடை வாசஸ்தலங்களுக்கு படையெடுக்கும் மக்களின் எண்ணிக்கையானது அதிகரித்து வருகிறது.
தற்போது கொடைக்கானல் ஊட்டி போன்ற பகுதிகளுக்கு படையெடுக்கும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சுற்றுலா பயணிகளை கவர்வதற்காக ஊட்டி கொடைக்கானலில் கோடை விழாக்கள் நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில் இன்று உதகையில் புகழ் பெற்ற மலர் கண்காட்சி நடக்கிறது. பூத்துக் குலுங்கும் வண்ண வண்ண மலர்களை பார்ப்பதற்காக மக்கள் அதிக அளவில் திரள்வார்கள் அந்த வகையில் ஊட்டியில் 126வது மலர் கண்காட்சி நடைபெறுவதை முன்னிட்டு இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது.
நீலகிரி மாவட்டம் ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் கோடை சீசனையொட்டி இருபதாம் தேதி வரை இந்த மலர் கண்காட்சியானது நடக்க இருக்கிறது. ஊட்டி ரோஜா பூங்காவில் ரோஜா கண்காட்சியும் தொடக்க இருக்கிறது. மலர் கண்காட்சியை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்தில் இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சியர் அருணா வெளியிட்டுள்ள அறிக்கையில் நீலகிரி மாவட்டத்தில் இன்று 126 வது மலர் கண்காட்சி தொடங்குகிறது.
இதனால் மாவட்டத்தில் உள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது. மாவட்ட கருவூலம் மற்றும் சார்நிலை கருவூலகங்கள், அரசு பாதுகாப்புக்கான அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு குறிப்பிட்ட பணியாளர்களுடன் செயல்படும். மேற்கண்ட விடுமுறை நாளை ஈடுசெய்ய வருகிற 18-ம் தேதி நீலகிரி மாவட்டத்திற்கு பணி நாளாகும்” என அறிவித்திருக்கிறார்
இதேபோல தேனி மாவட்டம் வீரபாண்டி கௌமாரியம்மன் கோவில் தேரோட்டத்தை முன்னிட்டு தேனி மாவட்டத்திற்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டு இருக்கிறது. இந்த கோயில் சித்திரை திருவிழா கடந்த 7ஆம் தேதி தொடங்கி நிலையில் மே 14ஆம் தேதி வரை நடக்கிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக இன்று தேரோட்டம் தொடங்குகிறது. நாளை, நாளை மறுநாள் ரத ஊர்வலம் நடக்க இருக்கும் நிலையில் தேரோட்டத்தையொட்டி இன்று உள்ளூர் முறை விடுமுறையை தேனி மாவட்ட ஆசிரியர் சஜீவனா அறிவித்துள்ளார்.
-
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
எங்க கொண்டு போய் விட்டுடுச்சி பாருங்க.. கேஸ் தட்டுப்பாட்டால், ஸ்விக்கி, ஜொமோட்டோ டெலிவரி குறைந்தது! -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
3 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய்யை வாங்கி குவித்த இந்திய நிறுவனங்கள்! ரஷ்யாவுக்கு கொட்டும் பண மழை! -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங் -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை! -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு -
சிறகடிக்க ஆசை: முத்து மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்! விஜயாவுக்கு இனி தான் பிரச்சனை! ரோகிணியின் அடுத்த பிளான்












Click it and Unblock the Notifications