கொரோனா அதிகமுள்ள மாவட்டங்களில்.. மேலும் 6-8 வாரம் லாக்டவுன் நீடிக்க வேண்டும்.. ஐசிஎம்ஆர் அறிவுரை!
சென்னை: இந்தியாவில் கொரோனா கேஸ்கள் அதிகம் உள்ள மாவட்டங்களில் அடுத்த 6-8 வாரங்கள் கண்டிப்பாக லாக்டவுன் நீடிக்க வேண்டும் என்று ஐசிஎம்ஆர் கூறியுள்ளது.
இந்தியாவில் அதிகரித்து வரும் கொரோனா கேஸ்களால் பல மாநிலங்களில் லாக்டவுன் போடப்பட்டுள்ளது. தேசிய அளவில் முழு லாக்டவுன் அறிவிக்கப்படவில்லை என்றாலும், கிட்டத்தட்ட 80% அதிகமான மாநிலங்களில் லாக்டவுன் அமலில் உள்ளது.
மத்திய அரசு நேரடியாக லாக்டவுனை அறிவிக்கவில்லை என்றாலும் மாநில அரசுகள் சார்பாக லாக்டவுன் அறிவிக்கப்பட்டு நடைமுறையில் உள்ளது.

லாக்டவுன்
இந்த நிலையில் இந்திய மருத்துவ ஆய்வு கவுன்சிலான ஐசிஎம்ஆரின் தலைவர் பால்ராம் பார்கவா இந்த லாக்டவுன் தொடர்பாக தனது கருத்தை தெரிவித்துள்ளார். அதில், இந்தியாவில் கொரோனா கேஸ்கள் அதிகம் உள்ள மாவட்டங்களில் அடுத்த 6-8 வாரங்கள் கண்டிப்பாக லாக்டவுன் நீடிக்க வேண்டும். இங்கு கட்டுப்பாடுகளை தளர்த்த கூடாது.

10%
எங்கெல்லாம் பாசிட்டிவிட்டு ரேட் எனப்படும் கொரோனா பாசிட்டிவ் சதவிகிதம் 10%க்கும் அதிகமாக உள்ளதோ அங்கெல்லாம் லாக்டவுனை நீட்டிக்க வேண்டும். இங்கு கேஸ்கள் குறைய 6-8 வாரங்கள் ஆகும். அதுவரை இங்கு கட்டுப்பாடுகளை தளர்த்த கூடாது.

தளர்வு
இந்தியாவில் 718 மாவட்டங்களில் கிட்டத்தட்ட 4ல் 3 பங்கு மாவட்டங்களில் கொரோனா பாசிட்டிவ் சதவிகிதம் 10%க்கும் அதிகமாக உள்ளது. மும்பை, டெல்லி, பெங்களூர் போன்ற பெரு நகரங்களிலும் இதே நிலை. இங்கெல்லாம் லாக்டவுன் தொடர்வதே ஒரே தீர்வு. இங்கு கேஸ்கள் குறைந்தால் கட்டுப்பாடுகளை தளர்த்தலாம்.

கட்டுப்பாடுகள்
5% வரை கொரோனா பாசிட்டிவ் சதவிகிதம் குறைந்தால் கட்டுப்பாடுகளை தளர்த்தலாம். ஆனால் அதற்கு 6-8 வாரம் ஆகும். டெல்லியில் பாசிட்டிவிட்டி சதவிகிதம் 35%ல் இருந்து 17% ஆக குறைந்துள்ளது. இப்போது டெல்லி போன்ற நகரங்களை திறக்க கூடாது.

டெல்லி
டெல்லியில் இப்போது தளர்வுகளை கொண்டு வந்தால் அது பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். கொரோனாவிற்கு எதிராக மத்திய அரசு கட்டுப்பாடுகளை அறிவிப்பதில் தாமதமாக செயல்பட்டது. எங்களின் அறிவுரைகளை செயல்படுத்துவதில் கொஞ்சம் தாமதமாக செயல்பட்டுவிட்டது, என்று ஐசிஎம்ஆரின் தலைவர் பால்ராம் பார்கவா தெரிவித்துள்ளார்.
-
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
நாடு கடத்தப்படும் கரப்பான் பூச்சி கட்சி தலைவர்? ஏர்போர்ட்டில் வைத்தே கைது செய்யவும் திட்டம்? -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
இனி இந்தியாவை தொட முடியாது.. ரஷ்யா அனுப்பிய புதிய எஸ் 400 வான்வெளி பாதுகாப்பு சிஸ்டம்.. செம -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன?












Click it and Unblock the Notifications