விளக்கு பிடிக்க சொன்ன பாஜகவே.. இதுதான் தேசபக்தியா.. தமிழன் என்ன அடிமையா.. திருமுருகன் காந்தி ஆவேசம்
திருமுருகன் காந்தி கிண்டல் செய்து 2 ட்வீட்களை பதிவிட்டுள்ளார்
சென்னை: "'விளக்கு' பிடிக்க சொன்ன பிஜேபியே.. நெருக்கடி காலத்திலும் தமிழனை அழிப்பது தான் உம் தேசபக்தியா? தமிழன் இந்திக்காரனுக்கு அடிமையா? டில்லியின் காலனியா தமிழ்நாடு?" என்று திருமுருகன் காந்தியின் காட்டமான ட்வீட் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
Recommended Video
பிரதமர் வேண்டுகோளுக்கு இணங்க நேற்று நாடு முழுவதும் மக்கள் அனுசரித்து தீபம் ஏற்றும் நிகழ்வு குறித்து திருமுருகன் காந்தி கருத்து தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் லாக் டவுனில் உள்ளது... 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவினை மக்கள் கடைப்பிடித்து வருகின்றனர்... நேற்றைய தினம் இரவு 9 மணிக்கு மின்விளக்கை அணைத்துவிட்டு மெழுகுவர்த்தி, தீபம் ஏற்றி, டார்ச் லைட் அடிக்கும்படி பிரதமர் மோடி கேட்டுக்கொண்டிருந்தார்.

அறிவிப்பு
மிக மிக முக்கியமான அறிவிப்பினை பிரதமர் அறிவிப்பார் என்று அனைத்து தரப்பினருமே எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்த அறிவிப்பு சில தரப்பினருக்கு அதிருப்தியை தந்தது.. எனினும் பிரதமர் கேட்டுக் கொண்டதற்காகவும் இந்தியாவின் ஒருங்கிணைந்த கூட்டு முயற்சிக்கு நன்றி சொல்லவும், நம்முடைய கூட்டு ஆன்மாவை வலுப்படுத்தவும் பொதுமக்களும் கீழ்ப்படிந்து அதன்படியே நடந்து கொண்டனர்.

கிண்டல்கள்
பிரதமர் இப்படி அறிவித்ததில் இருந்தே விமர்சனங்களும், கிண்டல்களும் சோஷியல் மீடியாவில் எழுந்தபடியே உள்ளது.. நேற்றைய தினம் பிரதமர் தீபம், டார்ச்லைட் மெழுகுவர்த்திதான் ஏற்ற சொன்னார்.. ஆனால் பல இடங்களில் வெடிசத்தம் கேட்க முடிந்தது.. சிலர் தீபங்களை ஏந்தி ஊர்வலமாக சென்ற நிகழ்வும் நடந்தது. பலரும் இச்செயலை விமர்சித்த நிலையில், மே17 இயக்கத்தை சேர்ந்த திருமுருகன் காந்தியும் விமர்சித்துள்ளார்.

பாசிட்டிவ்
இதை பற்றி தனது ட்விட்டரில் 2 பதிவுகளை போட்டுள்ளார்.. "ஆரிய இந்துத்துவ பார்ப்பனிய வேதமதம்' என்றெல்லாம் அழைக்கப்படும் இந்த நம்பிக்கை குப்பைகள் எவ்வளவு 'மூடத்தனமானது', 'பிற்போக்குத்தனமானது', 'மக்களை முட்டாளாக்குவது' என்பதை உலகிற்கே 'விளக்கு' போட்டு காண்பித்த பிரதமருக்கு நாம் ஏன் நன்றி சொல்லக்கூடாது? பாசிட்டிவாக யோசிப்போமே!!!" என்கிறது ஒரு பதிவு.
|
விளக்கு
"பல்லிளிக்கும் தேசபக்தி.. தமிழினத்திற்கு எதிரானது மோடி அரசு என்பதற்கான உதாரணம்! 'விளக்கு' பிடிக்க சொன்ன பிஜேபியே நெருக்கடி காலத்திலும் தமிழனை அழிப்பது தான் உம் தேசபக்தியா? தமிழன் இந்திக்காரனுக்கு அடிமையா? டில்லியின் காலனியா தமிழ்நாடு? பனியா சேட்டுகளுக்கு தாரை வார்க்கவா எம் வரிப்பணம்" என்று இன்னொரு கேள்வி கேட்டு ட்வீட் போட்டுள்ளார். திருமுருகன் காந்தி பதிவிட்ட இந்த 2 ட்வீட்களுமே சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications