லோக்சபா தேர்தலில் வாக்களிக்க சென்ற 2 முதியவர்கள் பலி.. சேலம், ஈரோட்டில் அதிர்ச்சி!
லோக்சபா தேர்தலில் வாக்களிக்க சென்ற இரண்டு முதியவர்கள் பலியான சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video
சென்னை: லோக்சபா தேர்தலில் வாக்களிக்க சென்ற இரண்டு முதியவர்கள் பலியான சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாஜக ஆட்சி முடிவடைந்ததை அடுத்து நாடு முழுக்க தற்போது லோக்சபா தேர்தல் நடந்து வருகிறது. இந்த இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு மொத்தம் 95 தொகுதிகளில் நடைபெறுகிறது. தற்போது தமிழகத்திலும் தேர்தல் நடந்து வருகிறது.

இந்த நிலையில் தமிழகத்தில் லோக்சபா தேர்தலில் வாக்களிக்க சென்ற இரண்டு பேர் வயது முதிர்ச்சி காரணமாக பலியாகி இருக்கிறார்கள். ஈரோட்டில் முருகேசன் என்ற முதியவர் இன்று காலை வாக்களிக்க சென்றார். சில நிமிடம் வரிசையில் நின்ற அவர் வயது முதிர்வு காரணமாக எல்லோருக்கும் முன் சென்று வாக்களித்தார்.
அதன்பின் வீட்டிற்கு சென்ற அவர், செல்லும் வழியிலேயே மயங்கி விழுந்து பலியானார். அதேபோல் சேலத்தில் கிருஷ்ணன் என்ற முதியவர் வாக்குச்சாவடியில் பலியானார்.

சரியாக வாக்களிக்கும் சில நிமிடத்திற்கு முன் அவர் பலியான சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிக வெயில் காரணமாக இவர்கள் மயங்கி விழுந்து மரணம் அடைந்துவிட்டதாக உறவினர்கள் தெரிவித்து இருக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications