திமுக - மதிமுக இடையே தொகுதி பங்கீடு.. ஒப்பந்தம் கையெழுத்து.. தனி சின்னம்தான்.. வைகோ உறுதி
சென்னை: திமுக மதிமுக இடையேயான தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை இழுபறி ஒருவழியாக முடிவுக்கு வந்துள்ளது. ஒரு தொகுதியில் போட்டியிட ஒப்பந்தம் கையெழுத்தான நிலையில் தனி சின்னத்தில்தான் போட்டியிடுவோம் என்று வைகோ தனது முடிவில் உறுதியாக இருக்கிறார். ராஜ்யசபா சீட் பற்றி பின்னர் பேசி முடிவெடுப்போம் என்றும் கூறியுள்ளார் வைகோ.
லோக்சபா தேர்தலுக்கான தேதி விரைவில் அறிவிக்கப்படவுள்ள நிலையில், தமிழ்நாடு முழுவதும் தேர்தல் களம் சூடுபிடிக்கத் துவங்கியுள்ளது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள் தங்களது கூட்டணி கட்சிகளுக்கு இடையே தொகுதிப்பங்கீடு பங்கீடு பேச்சுவார்த்தையில் தீவிரம் காட்டி வருகின்றன.

கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை முடிந்து ஒப்பந்தம் கையொழுத்தான பின்னரும் மதிமுக, விசிக, காங்கிரஸ் கட்சிகளிடையேயான தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை முடிவுக்கு வரவில்லை. இந்த நிலையில் நீண்ட இழுபறிக்குப் பிறகு இன்றைய தினம் மதிமுக திமுக இடையே தொகுதிப்பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
மதிமுகவை பொறுத்தவரை இரண்டு லோக்சபா தொகுதி, ஒரு ராஜ்யசபா தொகுதி கேட்டதாக கூறப்பட்டது. ஆனால் திமுக தரப்பு ஒரு மக்களவைத் தொகுதி மட்டுமே தரப்படும் அதுவும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என உறுதியாக தெரிவித்தது.
இந்த சூழ்நிலையில்தான் நேற்று காலை மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிர்வாகக்குழு அவசரக் கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் கொடுக்கும் தொகுதிகளை வாங்கிக் கொண்டு திமுகவுடனே கூட்டணி அமைத்து போட்டியிடலாம் என முடிவு எடுக்கப்பட்டது. ஆனால், திமுக தரும் ஒரு தொகுதி தனி சின்னத்தில் தான் போட்டியிட வேண்டும் என நிர்வாகிகள் கூறினர்.
இதனிடையே இன்றைய தினம் திமுக - மதிமுக தொகுதி பங்கீட்டில் உடன்பாடு ஏற்பட்டு முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, லோக்சபா தேர்தலில் போட்டியிட மதிமுகவுக்கு ஒரு லோக்சபா தொகுதியை திமுக ஒதுக்கியுள்ளது.
எந்த தொகுதியில் போட்டியிடுவது என்று பின்னர் அறிவிக்கப்படும் என்று கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார். தனிச்சின்னத்தில்தான் மதிமுக போட்டியிடும் என்றும் வைகோ உறுதியாக கூறியுள்ளார். ராஜ்யசபா சீட் குறித்து பின்னர் பேசி முடிவு செய்யப்படும் என்றும் வைகோ தெரிவித்துள்ளார்.
-
"ஈ அடிச்சான் காப்பி".. அதிமுக தேர்தல் அறிக்கையை காப்பியடித்த திமுக? எவ்வளவு ஒற்றுமை பாருங்க -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
அட.. இதை கவனிச்சீங்களா? தமிழகத்திலேயே 2 குடும்பம் மட்டும்தான்! திமுகவில் களமிறங்கும் தந்தை - மகன்கள் -
ரூ.8000 கூப்பன் முதல் 2 மடங்கு உயரும் உரிமை தொகை வரை.. திமுகவின் 7 முக்கிய வாக்குறுதிகள்! ஸ்டாலின் அறிவிப்பு -
விவசாயிகளுக்கு திமுகவின் ‘ஜாக்பாட்’! மீட்டர் பொருத்தப்படாத நவீன பம்ப்செட் வழங்கப்படும் என வாக்குறுதி -
DMK Manifesto: முதியோர் உதவித்தொகை இனி ரூ. 2 ஆயிரமாக உயர்வு.. ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
மத்தி, சென்னையை கிளீன் ஸ்வீப் செய்யும் திமுக! தெற்கு, வடக்கில் ட்விஸ்ட்! அப்போ அரியணை? வெளியான சர்வே -
திமுக VS அதிமுக.. சென்னையில் 12 இடங்கள் உள்பட 121 தொகுதிகளில் நேரடி போட்டி.. மாவட்ட வாரியாக முழு லிஸ்ட் -
"மகளிருக்கு ஜாக்பாட்".. ரூ.8,000 கூப்பன் உள்பட பெண்களுக்கு திமுக தந்த டாப் 14 அறிவிப்புகள் – லிஸ்ட் -
DMK MANIFESTO: மகளிர் உரிமைத்தொகை டூ முதியோர் பென்ஷன் வரை.. 13 திட்டங்களின் உதவித்தொகைகள் உயர்வு – ஸ்டாலின் -
15 out of 16: சென்னை மாவட்டத்தில் எத்தனை தொகுதிகளில் திமுக போட்டி? சத்யராஜ் மகளுக்கு சீட் இல்லை!












Click it and Unblock the Notifications