பாஜக கூட்டணியில் ஜான்பாண்டியன் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு.. அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு
சென்னை: ஜான் பாண்டியனின் தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்துக்கு பாஜக கூட்டணியில் ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தம் இன்று வெற்றிகரமாக கையெழுத்தானது.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஒரே கட்டமாக லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. அடுத்த மாதம் (ஏப்ரல்) 17 ம் தேதி தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதி மற்றும் புதுச்சேரி என மொத்தம் 40 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த லோக்சபா தேர்தலில் அதிமுகவால் கழற்றிவிடப்பட்ட பாஜக தனியே கூட்டணி அமைத்து களமிறங்குகிறது.

பாஜக தனது தலைமையில் கூட்டணி அமைத்து போட்டியிட திட்டமிட்டு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. பாஜக கூட்டணியில் பல கட்சிகள் இணைந்துள்ளது. பாமக, அமமுக, ஓபிஎஸ் அணி, தமிழ் மாநில காங்கிரஸ், தமிழக மக்கள் முன்னேற்ற கழகம், ஐஜேகே, புதிய நீதிக்கட்சி உள்பட பல கட்சிகள் இணைந்துள்ளன.
இந்நிலையில் தான் இன்று லோக்சபா தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் தொடங்கியது. ஆனால் பாஜகவில் கூட்டணி கட்சிகளுக்கான தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடித்து வந்தது. இந்நிலையில் தான் அடுத்தடுத்து இன்று கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.
அந்த வகையில் இன்று மாலையில் சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாயலத்தில் ஜான்பாண்டியன் தலைமையிலான தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் மற்றும் பாஜக இடையே தொகுதி பங்கீடு கையெழுத்தானது. அதன்படி ஜான் பாண்டியன் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது.
இருப்பினும் ஜான்பாண்டியனுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள தொகுதியின் பெயர் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. ஜான் பாண்டியனை பொறுத்தமட்டில் 3 தொகுதிகளை கூறி அதில் ஒன்றை கேட்டுள்ளார். அதன்படி தென்காசி, திருநெல்வேலி, இல்லாவிட்டால் ராமநாதபுரம் ஆகிய தொகுதிகளில் ஒன்றை ஒதுக்கும்படி பாஜகவிடம் கோரிக்கையை வைத்துள்ளார்.
இதில் தென்காசி தனித்தொகுதியாகும். திருநெல்வேலி பொதுத்தொகுதி என்றாலும் கூட ஜான் பாண்டியனின் சொந்த தொகுதியாகும். திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை சாந்தி நகரை சேர்ந்தவர் தான் இந்த ஜான் பாண்டியன். மேலும் ராமநாதபுரம் தொகுதியில் ஜான் பாண்டியன் சார்ந்த தேவேந்திர குல வேளாளர் சமுதாயத்தை சேர்ந்த மக்கள் அதிகம் உள்ளன. இதனால் இந்த 3 தொகுதிகளில் ஒன்றில் போட்டியிட்டால் வெற்றி பெறலாம் என்ற நோக்கத்தில் அவர் இந்த கோரிக்கையை முன் வைத்துள்ளார். இருப்பினும் ஜான் பாண்டியன் கட்சிக்கு பாஜக எந்த தொகுதியை ஒதுக்கீடு செய்கிறது? என்பதை அறிய நாம் சற்று காத்திருக்க வேண்டும்.
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர் -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி












Click it and Unblock the Notifications