வேலூரில் வெற்றி யாருக்கு.. ஏசி சண்முகம் vs கதிர் ஆனந்த் இடையே கடும் போட்டி.. தந்தி டிவி சர்வே
சென்னை: வேலூர் லோக்சபா தொகுதியில் பாஜக கூட்டணியில் போட்டியிடும் ஏசி சண்முகம் - திமுக கதிர் ஆனந்த் இடையே கடும் போட்டி நிலவும் என்று தந்தி டிவியின் கருத்துக்கணிப்பு முடிவுகளில் கூறப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் வரும் 19ம் தேதி லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. இன்றுடன் பிரசாரம் ஓய்கிறது. இதனால், இறுதி கட்ட அனல் பறக்கும் பிரசாரத்தில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டுள்ளன. தமிழகத்தை பொறுத்தவரை இந்த தேர்தலில் நான்கு முனை போட்டி நிலவுகிறது. திமுக தலைமையில் ஒரு கூட்டணியும் அதிமுக தலைமையில் ஒரு கூட்டணியும் பாஜக தலைமையில் ஒரு கூட்டணியும் அமைந்துள்ளன.

நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடுகிறது. திமுக கூட்டணியில் காங்கிரஸ், மதிமுக, விடுதலை சிறுத்தைகள், கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் உள்ளிட்ட கட்சிகள் உள்ளன. அதிமுக கூட்டணியில் தேமுதிக மற்றும் சில சிறிய கட்சிகள் உள்ளன.
பாஜக கூட்டணியில் டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், தமிழ் மாநில காங்கிரஸ், பாமக, ஓபிஎஸ், புதிய நீதிக்கட்சி உள்ளிட்ட கட்சிகள் அங்கம் வகிக்கின்றன. தேர்தலுக்கு இன்னும் 2 நாட்களே இருப்பதால் அனல் பறக்கும் பிரசாரம் நடைபெற்று வருகிறது. மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய உள்ளது.
இதனிடையே, லோக்சபா தேர்தலில் வெற்றி வாய்ப்பு யாருக்கு உள்ளது என்பது தொடர்பாக பல்வேறு கருத்துக்கணிப்புகளும் வெளியாகி வருகின்றன. அந்த வகையில், தமிழ்நாட்டில் உள்ள லோக்சபா தேர்தல் தொடர்பாக தந்தி டிவி நடத்திய கருத்து கணிப்பு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளது. அதன் படி வேலூர் தொகுதியில் தந்தி டிவி வெளியிட்ட கருத்துக்கணிப்பு முடிவுகளை பார்க்கலாம்.
இதனிடையே, லோக்சபா தேர்தலில் வெற்றி வாய்ப்பு யாருக்கு உள்ளது என்பது தொடர்பாக பல்வேறு கருத்துக்கணிப்புகளும் வெளியாகி வருகின்றன. அந்த வகையில், தமிழ்நாட்டில் உள்ள லோக்சபா தேர்தல் தொடர்பாக தந்தி டிவி நடத்திய கருத்து கணிப்பு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளது. அதன் படி வேலூர் தொகுதியில் தந்தி டிவி வெளியிட்ட கருத்துக்கணிப்பு முடிவுகளை பார்க்கலாம்.
வேலூர் தொகுதியில் புதிய நீதிக்கட்சியின் ஏசி சண்முகம் தாமரை சின்னத்தில் போட்டியிடுகிறார். திமுகவில் அமைச்சர் துரைமுருகனின் மகனும் சிட்டிங் எம்பியுமான கதிர் ஆனந்த், அதிமுகவில் பசுபதியும் நாம் தமிழர் கட்சியில் மகேஸ் குமாரும் போட்டியிடுகிறார்கள். வேலூர் தொகுதியில் கடந்த முறை இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்ட ஏசி சண்முகம் இந்த முறை தாமரையில் போட்டியிடுகிறார்.
தந்தி டிவி கருத்துக்கணிப்பு முடிவுகளின் படி வேலூர் தொகுதிதியில் கடும் போட்டி நிலவும் என்று சொல்லப்பட்டுள்ளது. எனினும் இந்த ரேசில் ஏசி சண்முகம் சற்று மேலோங்கி காணப்படுகிறார். இரண்டாவது இடத்தில் திமுக உள்ளது. அதிமுக மூன்றாம் இடத்திற்கு செல்ல வாய்ப்பு உள்ளதாம்.. எனினும், வேலூர் தொகுதியை பொருத்தவரை கடும் போட்டி நிலவுவதால் எந்த பக்கமும் போகலாம்.. அதாவது, முதல் இரண்டு இடங்களில் உள்ள பாஜக- திமுக ஆகியவை இடையே கடும் போட்டி நிலவுகிறது என்பதே தந்தி டிவியின் கருத்துக்கணிப்பு முடிவாக உள்ளது.
தந்தி டிவி கருத்துக்கணிப்பு முடிவுகள் விவரம்:
புதிய நீதிக்கட்சி: 32%-38%
திமுக: 31%-37
அதிமுக: 22%-28%
நாம் தமிழர்: 5%-8%
மற்றவை: 1%3%
மார்ச் 20 முதல் ஏப்ரல் 14 ஆம் தேதி வரையில் எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பு விவரங்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications