சிதம்பரம் தொகுதியில் பாமக போட்டியிடாமல் பாஜக களமிறங்கியது ஏன்.. திருமாவிற்கு இப்படியொரு ஸ்கெட்ச்
சென்னை: சிதம்பரம் தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் களம் காணும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் திருமாவளவனுக்கு எதிராக போட்டியிடும் வாய்ப்பை பாமகவிற்கு தராமல் பாஜக எடுத்துக்கொண்டு வேட்பாளரை அறிவித்தது ஏன் என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
பாஜக கூட்டணியில் போட்டியிடும் பாமகவுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப் பட்டன. இதில், திருமாவளவன் போட்டியிடும் சிதம்பரம் தொகுதியும் இருந்தது. ஆனால், கடைசி நேரத்தில் அந்த தொகுதியை பாஜக எடுத்துக்கொண்டது.

இதற்கு காரணம், பாஜகவில் உள்ள பட்டியலினத்தை சேர்ந்த தடா பெரியசாமி தான் என்று சொல்லப்படுகிறது. திருமாவளவனுக்கு எதிராக பாமக போட்டியிட்டால் பட்டியிலினத்தவர்கள் ஒன்றாகி எதிர்த்துதான் ஓட்டுப் போடுவார்கள். ஏனெனில், திருமாவளவன் ஜெயிக்க வேண்டும் என சிறுத்தைகளுக்கு மட்டும்தான் ஆர்வம் இருக்கிறது. ஆனால், பட்டியிலின மக்களிடம் அந்த ஆதரவு இல்லை.
திருமாவளவன் மீது ஒரு பிரிவு பட்டியலின மக்களே அதிருப்தியில்தான் இருக்கிறார்கள். இதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. அதனால் அரசியல் கலப்பில்லாத அந்த இன மக்கள் திருமாவுக்கு இந்த முறை வாக்களிக்க மாட்டோம் என்கிற சிந்தனையில் இருக்கின்றனர். இந்த சூழலில், திருமாவை எதிர்த்து பாமக போட்டியிட்டால், பாமகவை வீழ்த்த வேண்டும் என்ற பிரச்சாரத்தை பட்டியலின மக்களிடையே விடுதலை சிறுத்தைகள் கொண்டு செல்வார்கள்.
அதிருப்தியில் இருக்கும் பட்டியலினத்தவர் எல்லாம் ஒன்றாகி திருமாவிற்கே ஓட்டு போட்டாலும் ஆச்சரியமில்லை. திருமாவா? பா.ம.கா.வா? என்று வரும்போது பாமகவை வீழ்த்த வேண்டும் என்றுதான் கணிசமான தலித் மக்கள் நினைப்பது கடந்த கால தேர்தல்களில் நாம் கற்ற பாடம்.
அதேபோல, பாமக மீதும், திருமா மீதும் மாற்று சாதியிலும் கணிசமானோர் நல்ல அபிப்ராயம் இல்லாமல் உள்ளனர். இதனை நாம் அறுவடை செய்ய வேண்டுமானால் பாஜக போட்டியிடுவதுதான் நல்லது. மாற்று சமூகத்தின் வாக்குகளை நாம் பெறுவதும், திருமா தோற்பதும் ஒரே சமயத்தில் நடக்கும் என தடா பெரியசாமி பாமகவிடமும், பாஜகவிடமும் பேசியதால்தான் சிதம்பரம் தொகுதி பாமகவிடமிருந்து மாற்றப்பட்டது என்கிறார்கள் இரு கட்சியின் மேலிட தொடர்பாளர்கள்.
இந்த நிலையில்தான் சிதம்பரம் தொகுதிக்கு பாஜக வேட்பாளராக பி கார்த்தியாயினி வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார்.இவர் அதிமுகவின் முக்கிய பிரமுகராக இருந்தவர். வேலூர் மேயராக இருந்தவர் என்பது நினைவுகூறத்தக்கதாகும்.
-
குமரியில் காலியாகும் அதிமுகவின் அடித்தளம்.. 4 தொகுதிகளை கைப்பற்றிய பாஜக.. சோர்வடைந்த தொண்டர்கள்! -
பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி..40 கேட்ட பாஜகவுக்கு 27! ஒரே நாளில் முடிந்த டீலிங்..கெத்து அதிமுக! -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
சேப்டி கேம் ஆடுகிறாரா எடப்பாடி? தென் மண்டலத்தை பாஜகவிற்கு தாரை வார்த்ததில் உள் அர்த்தம் இருக்கிறதா? -
பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் இவை தானா? கொங்கு & தென் மண்டலம் டார்கெட்! -
தேர்தலில் போட்டியில்லை.. டெல்லிக்கு கடிதம் எழுதிய அண்ணாமலை.. பாஜகவில் டிவிஸ்ட் -
சென்னையில் 16 தொகுதிகளில் அதிமுக போட்டியிடும் 13 தொகுதிகள் விவரம்.. 3ல் கூட்டணி கட்சிகள் போட்டி -
ஜோதிடர் சொன்ன வார்த்தை? நயினார் நாகேந்திரன் நெல்லை தொகுதியில் போட்டியிடாதது ஏன்? பரபரப்பு தகவல் -
எடப்பாடி சாமர்த்தியசாலியா.. அமித்ஷா சாமர்த்தியசாலியா.. அதிமுக கூட்டணியில் நடக்கும் எதார்த்தம் என்ன -
நடிகை கவுதமியை மீண்டும் ஏமாற்றிய அதிமுக – பாஜக.. ராஜபாளையம் ஜான் பாண்டியனுக்கு ஒதுக்கியதன் பின்னணி -
"அந்த" 54 தொகுதிகள் தான் மேஜிக்.. மம்தாவை காலி செய்ய சக்கர வியூகம்.. இறங்கி அடிக்கும் பாஜக! -
Election Commission: தேர்தல் ஆணைய கடிதத்தில் பாஜகவின் முத்திரை.. கேரள அரசியல் கட்சிகள் அதிர்ச்சி.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications