தென்காசி தொகுதியில் கிருஷ்ணசாமி போட்டி… தனிச் சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை
சென்னை: புதிய தமிழகம் கட்சி தனிச் சின்னத்தில் போட்டியிடும் என்று அக்கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தென்காசி மக்களவை தொகுதியில் தாம் போட்டியிடுவதாக அறிவித்தார்.
தனிச் சின்னம் தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் இருந்து நல்ல பதிலை எதிர்பார்க்கிறோம் என்றும் கிருஷ்ணசாமி கூறினார்.
அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள புதிய தமிழகம் கட்சிக்கு ஒரு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதன்படி தென்காசியில் தானே போட்டியிடுவதாக அக்கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.
ஆஹா.. இதை கவனிச்சீங்களா.. பெயரை மாற்றி விட்டார் மோடி.. டிவிட்டரில்!
தனித்துப் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ள, மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு பேட்டரி லைட் சின்னமும், நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னமும் ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், புதிய தமிழகம் கட்சிக்கு தனிச் சின்னம் ஒதுக்க கோரி தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.