2 மெகா கூட்டணி.. 2 சிங்கிள் சிங்கம்ஸ்.. தமிழகத்தில் இவங்க 4 பேருக்கு இடையேதான் போட்டி!
லோக்சபா தேர்தலில் தமிழகத்தில் நான்கு முனை போட்டி ஏற்படும் நிலை உருவாகி இருக்கிறது.
சென்னை: லோக்சபா தேர்தலில் தமிழகத்தில் நான்கு முனை போட்டி ஏற்படும் நிலை உருவாகி இருக்கிறது. இதனால் வாக்குகள் பெரிய அளவில் பிரிந்து செல்லும் நிலை ஏற்பட்டு இருக்கிறது.
லோக்சபா தேர்தலில் தமிழகமும், புதுச்சேரியும் அதிக கவனத்தை பெற்று இருக்கிறது. இங்கு இருக்கும் 40 தொகுதிகளில் வென்றால் லோக்சபாவில் மெஜாரிட்டி பெறுவது கட்சிகளுக்கு எளிதாக இருக்கும்.
இந்த நிலையில்தான் தமிழகத்தில் 2 பெரிய கூட்டணி இந்த லோக்சபா தேர்தலுக்காக உருவாகும் நிலை ஏற்பட்டுள்ளது. அதேபோல் புதிதாக களம் காணும் டிடிவி தினகரன், கமல்ஹாசன் ஆகியோரும் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளனர்.

திமுக கூட்டணி
தமிழகத்தில் உள்ள பெரும்பான்மையான எதிர்க்கட்சிகள் திமுகவின் கூட்டணியில் இருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். திமுக, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், மதிமுக, 2 கம்யூனிஸ்டு கட்சிகள் ஆகிய கட்சிகள் திமுக கூட்டணியில் இடம்பெற போவது உறுதியாகி உள்ளது. இன்னும் சில சிறிய கட்சிகளும் இந்த கூட்டணியில் சேர போகிறது.

அதிமுக கூட்டணி
இதற்கு போட்டியாக அதிமுகவும் மிகப்பெரிய கூட்டணியை அமைத்து வருகிறது. அதிமுக, பாமக, தேமுதிக, பாஜக, சமக, புதிய தமிழகம், ஐஜேகே ஆகிய கட்சிகள் இந்த கூட்டணியில் இடம்பெற இருக்கிறது என்கிறார்கள். இதற்கான பேச்சுவார்த்தைகள் தற்போது நடந்து வருகிறது. விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும்.

கமல்ஹாசன் என்ன
இதற்கு இடையில் லோக் சபா தேர்தலில் தமிழகத்தில் யாருடனும் கூட்டணி வைக்காமல் மக்கள் நீதி மய்யம் தனித்து போட்டியிடும் என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். 40 தொகுதியிலும் மநீம வேட்பாளர்களை நிறுத்தும். மாநில கட்சிகள், தேசிய கட்சிகள் யாருடனும் கூட்டணி கிடையாது என்று அவர் தெளிவாக குறிப்பிட்டு இருக்கிறார்.

டிடிவி தினகரன்
இந்த நிலையில் இந்த கட்சிகள் எல்லாம் போக மீதம் இருக்கும் ஒரே பெரிய கட்சி டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்தான். அமமுகவும் தேர்தலில் பெரும்பாலும் தனித்து போட்டியிடும் என்றுதான் கூறுகிறார்கள். திமுக, அதிமுக ஆகிய இரண்டு கூட்டணிக்கும் அமமுக செல்லாது, கமலுடனும் செல்ல வாய்ப்பில்லை என்பதால், அமமுக தனித்தே போட்டியிடும் என்று கூறுகிறார்கள்.

நான்குமுனை போட்டி
இதனால் லோக்சபா தேர்தலில் தமிழகத்தின் நான்கு முனை போட்டி உருவாகும் நிலை ஏற்பட்டு இருக்கிறது. பொதுவாக தமிழகத்தில் லோக்சபா தேர்தலின் போது மும்முனை போட்டியே அதிகம் நிலவும். இந்த முறை கமல்ஹாசன், டிடிவி தினகரன் சேர்ந்து இருப்பதாலும், அதிமுக - பாஜக கூட்டணி வைப்பதாலும் நான்கு முனை போட்டி உருவாகி இருக்கிறது.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
“தனது தலையில் தானே மண் அள்ளிப் போட்டுக் கொண்டுள்ளார் ராகுல்..” முரசொலி சரமாரி விமர்சனம்! -
ஒரு மேயர் ஜெயித்தாலும் ஒருபக்க மீசையை எடுக்கிறேன்.. தவெகவிற்கு சவால் விட்ட திமுகவின் ஆர்எஸ் பாரதி -
“திமுக தயவில்தான் தவெக ஆட்சி நடக்கிறது.. நான்தான் வழியனுப்பி வைத்தேன்”.. ஸ்டாலின் ஓபன் டாக்! -
“கொளத்தூரை இழந்தது போல மொத்தத்தையும் இழக்கப்போவது உறுதி”.. ஸ்டாலினை குறி வைத்து தாக்கிய தவெக! -
வைகோ வருத்தப்பட போறாரு.. நிர்வாகிகளை தட்டித் தூக்கும் திமுக! ஆர்டர் போட்ட ஸ்டாலின்! துரை தான் பாவம்! -
திமுகவில் இணைந்தார் Ex. MLA பனையூர் பாபு.. விசிகவில் இருந்து ஆயிரக்கணக்கானோருடன் ஜம்ப்! -
திமுக சொல்வது பொய்.. தலைமையிடம் சொல்லிவிட்டு தான் தவெகவுடன் சேர்ந்தோம் - உடைத்து பேசிய ப சிதம்பரம் -
உள்ளாட்சி தேர்தலில் வாங்க பார்த்துக்கிறோம்.. ஆதவ் அர்ஜுனாவுக்கு சவால் விட்ட அனிதா ராதாகிருஷ்ணன் -
“துரோகி.. துரோகி”.. செல்வப்பெருந்தகை வந்தபோது திமுகவினர் கோஷம்.. திடீர் பரபரப்பு! -
அண்ணன் தம்பிகள்தானே! இடைத்தேர்தலில்.. அதிமுக-திமுக கூட்டணி! வாயை விட்ட சுப வீரபாண்டியன்! -
யார் எம்எல்ஏ, யார் அமைச்சர் என்று முதல்வருக்கே தெரியாத ஆட்சி நடக்கிறது.. உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்!












Click it and Unblock the Notifications