எங்களுக்கு வாய்ப்பு கொடுங்கள்.. சாதித்துக் காட்டுவோம்.. கமல்ஹாசன் பிரச்சாரம்
சென்னை: எங்களுக்கு வாய்ப்பு கொடுங்கள்; சாதித்துக் காட்டுவோம் என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பிரச்சாரம் செய்தார்.
மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவர் கமல்ஹாசன் தென் சென்னை வேட்பாளரான முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி ரங்கராஜனை ஆதரித்து, செம்மஞ்சேரி குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பகுதியில் பிரச்சாரம் செய்தார்.
அஸ்ஸாமில் மாவட்ட ஆட்சியராக பணியாற்றிய ரங்கராஜன், தன் பணியை துறந்து இங்கு மக்கள் பணியாற்ற வந்துள்ளார் என்றார். ஒவ்வொரு வீட்டிற்கும் சுத்தமான குடிநீர் வழங்குவது கடமை. அதை நாங்கள் செய்து காட்டுவோம்.
நீர்நிலைகளை பராமரிப்போம் குளங்களை வெட்டுவோம். இதன் மூலம் பலருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். எங்களின் ஒவ்வொரு திட்டத்திலும் ஏராளமான வேலைவாய்ப்புகள் உள்ளன.
"திமுக" மட்டும் கைவிட்டால்.. கத்காரி கதி அதோ கதியாம்..!
அப்பா, தாத்தா வாக்களித்த கட்சிகளுக்கு வாக்களிக்காமல் நாட்டின் நலன் கருதி எங்களுக்கு வாக்களியுங்கள் என்றும் கூறிய கமல்ஹாசன், இதுவரை உங்களை ஏமாற்றியவர்களை புறக்கணித்து, எங்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள் என்றும் கேட்டுக்கொண்டார்.
இந்தநிலையில், மத்திய சென்னை தொகுதி மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் கமீலா நாசர், வடசென்னை தொகுதி வேட்பாளர் ஓய்வு பெற்ற ஐ,ஜி மவுரியா மற்றும் பெரம்பூர் சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் பிரியதர்ஷினி ஆகியோரை ஆதரித்து மத்திய சென்னை - வடசென்னை தொகுதியில் கமல்ஹாசன் இன்று பிரச்சாரம் மேற்கொள்கிறார்.