வந்தது நம்பிக்கை! கொரோனா தடுப்பூசியால் ஒன்னும் ஆகாது- கிராமங்களில் நீண்ட வரிசைகளில் குவிந்த மக்கள்
சென்னை: கொரோனா தடுப்பூசி போடுவதால் நன்மைதான்; பாதுகாப்பானதுதான் என்பதை உணர்ந்து கொண்டதால் தமிழகத்தில் கிராமங்களில் காலை முதலே நீண்ட வரிசைகளில் காத்திருந்து தடுப்பூசி போட்டுக் கொள்கின்றனர் பொதுமக்கள்.
Recommended Video
கொரோனா முதல் அலையின் முடிவில்தான் கொரோனா தடுப்பூசிகள் பயன்பாட்டுக்கு வந்தன. நாட்டில் கடந்த 6 மாதங்களாக தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன.

கொரோனா தடுப்பூசி திட்டம்
தற்போது வரை மொத்தம் 27.23 கோடி தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. முதல் கட்டமாக முன்களப் பணியாளர்கள், 2-வது கட்டமாக 45 வயதுக்கு மேற்பட்டோர், 3 வது கட்டமாக 18 முதல் 45 வயதுக்குட்பட்டோர் என தடுப்பூசி போடப்பட்டது.

அர்த்தமற்ற வதந்திகள்
கடந்த சில மாதங்களாக கொரோனா 2-வது அலை உக்கிரமாக இருந்த நிலையிலும் தடுப்பூசி தொடர்பான விழிப்புணர்வு கிராமங்களில் குறைவாகவே இருந்தன. ஒரு கிராமத்தில் அதிகபட்சம் 10 பேர் அல்லது 15 பேர்தான் தடுப்பூசி போட்டிருந்தனர். ஏனெனில் தடுப்பூசிகள் தொடர்பான சில தேவையற்ற வதந்திகள் மக்களை அச்சத்துக்குள்ளாக்கி இருந்தன.

கிராமங்களில் நம்பிக்கை
ஆனால் கொரோனா தடுப்பூசிகளின் 2 டோஸும் கண்டிப்பாக போட வேண்டும்; இந்த தடுப்பூசிகள்தான் கொரோனாவால் உயிரிழப்பதில் இருந்து நம்மை பாதுகாக்கும் என்கிற இடைவிடாத விழிப்புணர்வு பிரசாரங்கள் இப்போதுதான் கிராமங்களை சென்றடைந்துள்ளன. கொரோனா தடுப்பூசிகள் போடுவதால் உடலுக்கு எதுவும் நேராது; அதிகபட்சம் சோர்வு அல்லது காய்ச்சல் மட்டுமே ஏற்படும் என்கிற நம்பிக்கை கிராம மக்களிடம் ஏற்பட்டுள்ளது.

கிராமப்புறங்களில் வரிசைகள்
இதனால் கிராமப்புறங்களில் கொரோனா தடுப்பூசிகள் போடுவதற்கு காலை முதலே நீண்ட வரிசைகளில் பொதுமக்கள் காத்திருக்கின்றனர்; சில இடங்களில் கற்களை வைத்து வட்டமிட்டு தங்களது பெயரை எழுதிவிட்டு செல்கிற நிகழ்வுகளும் நடைபெற்றுள்ளன. கொரோனா தடுப்பூசியை ஏன் போட முன்வந்தீர்கள் என்ற கேள்விக்கு, ஒருவித அச்சம் இருந்து வந்தது. இப்போது கொரோனா தடுப்பூசி தொடர்பான தயக்கம், அச்சம் எதுவும் இல்லை; அதனால் போட வந்தோம் என்கின்றனர் பொதுமக்கள்.
-
விரால் மீனின் ஸ்பெஷாலிட்டி இது.. பாம்பு தலையன் மீனுக்குள் அற்புதமான சீக்ரெட்! பெண்களின் வரப்பிரசாதம் -
ஜான் ஆரோக்கியசாமி போட்ட மெகா ஸ்கெட்ச்.. மிரண்டு போன பாஜக மேலிடம்.. B டீம் முத்திரையை உடைப்பாரா விஜய் -
திரிஷா சர்ச்சை அடங்குவதற்குள் மீண்டும் பரபரப்பு… காதல், கள்ளக்காதல் பற்றி பார்த்திபன் ஓபனாக பேச்சு -
அதிமுக எம்பியாக இருந்தபோதே கனிமொழி அக்கா எனக்கு பயிற்சி கொடுத்தார்.. ஓ.பி. ரவீந்திரநாத் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை பழிதீர்த்த கர்மா.. முத்துவால் ஏற்பட்ட குழப்பம்.. சந்தோஷத்தில் ரோகிணி -
மீண்டும் தள்ளிப்போகும் தேர்தல் தேதி அறிவிப்பு.. பின்னணியில் 3 காரணங்கள்.. தமிழகம் உள்பட 5 மாநில வாக்குப்பதிவு எப்போது? -
தவெகவில் பணக்கஷ்டம்.. ரூ.5 கோடி செலவு செய்ய வேட்பாளர்கள் இல்லை.. கூட்டணி செல்வது தான் சரி.. விஜய்க்கு அழுத்தம் -
Rasi Palan: கடகம், சிம்மம், கன்னிக்கு மார்ச் மாதத்தில் அடிக்குமா ஜாக்பாட்.. முழு பலன்கள் விவரம் -
அதில் இருந்தது கோழி கால் இல்லை.. சொமாட்டோ பிரியாணி பார்சலில் இருந்தது? அலற விட்ட 28 நிமிட வீடியோ -
சிங்காநல்லூர் வாய்ப்பில்லை.. பல்லடம் தொகுதியில் அண்ணாமலையை நிற்க சொல்லுங்க.. மறுக்கும் அதிமுக! -
Rasi Palan: துலாம், விருச்சிகம், தனுசு ராசிக்கான மார்ச் மாத பலன்.. முழு விவரம் இதோ -
வேளச்சேரி- பரங்கிமலை ரயில்.. மிகப்பெரிய சம்பவத்தை 'சைலண்ட்' ஆக செய்த மத்திய அரசு.. பின்னணி












Click it and Unblock the Notifications