தண்டவாளத்தில் தலையை வைத்து படுத்த காதல் ஜோடி.. அப்பறம் நடந்த ட்விஸ்ட் பாருங்க.. சென்னையில் பரபரப்பு
தற்கொலைக்கு முயன்ற காதல் ஜோடியை விரட்டியடித்துள்ளனர் பொதுமக்கள்
சென்னை: காதல் ஜோடி ஒன்று, தண்டவாளத்தில் தலையை வைத்து தற்கொலைக்கு முயன்றபோது, பொதுமக்கள் அவர்களை விரட்டியடித்த சம்பவம் நடந்துள்ளது.
தமிழகத்தில் ஏராளமான தற்கொலைகள் பெருகி வருகின்றன.. முன்பெல்லாம் வேலை கிடைக்காத விரக்தியில் எத்தனையோ இளைஞர்கள் தற்கொலை செய்து கொள்வார்கள்..
வேலையில்லா பட்டதாரிகள் மற்றும் வரதட்சணை கொடுமைகள் காரணமாகவே தற்கொலைகள் பெருகி வந்தன.. ஆனால், நிலைமையே வேறு.

தற்கொலைகள்
இன்றைய சூழலில் காதல் தோல்விகளின் தற்கொலைகள்தான் அதிகமாகி கொண்டு வருகின்றன.. இளம்வயதிலேயே புரிதல் இல்லாமல் காதலிப்பதும், எதையும் பொறுமையுடன், பக்குவத்துடன் அணுகும் போக்கு இளைய தலைமுறையிடம் இல்லாததும்தான் தற்கொலைகள் பெருக காரணமாகி வருகின்றன. அப்படித்தான் ஒரு ஜோடி தற்கொலை செய்து கொள்ளலாம் என்று முடிவெடுத்துள்ளனர்.. ஆனால், அவர்களை பொதுமக்களே விரட்டி அடித்து தற்கொலையை தடுத்து நிறுத்தியிருக்கிறார்கள்.

தற்கொலை முயற்சி
எழும்பூரில் உள்ள காந்தி-இர்வின் பாலம் அருகே காதலர்கள் 2 பேர் வந்துள்ளனர்.. அங்கேயே 2 பேருக்கும் ஏதோ தகராறு வந்துள்ளது.. இருவருமே வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.. சண்டை ஓயவே இல்லை.. ஒருகட்டத்தில் காதலி, பாலத்தின் கீழே உள்ள ரயில் தண்டவாளத்தில் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொள்ள ஓடினார்.. அதை பார்த்ததும், பின்னாடியே காதலனும் தற்கொலை செய்ய ஓடினார்.. 2 பேருமே சேர்ந்து அங்கிருந்த தண்டவாளத்தில் படுத்து கொள்ள முயன்றனர்..

கூச்சல்
ஆனால், அதற்குள் அங்கிருந்த பொதுமக்களில் சிலர் இதை பார்த்துவிட்டு கூச்சலிட்டனர்.. அங்கிருந்து எழுந்து செல்லுமாறு சத்தம் போட்டனர்.. அதற்குள் மேலும் சிலர் அந்த பகுதியில் கூடிவிட்டனர்.. எல்லாருமே ஒன்றுசேர்ந்து கூச்சலிட்டு விரட்டவும், பயந்து போன காதல்ஜோடி, தற்கொலையை கைவிட்டுவிட்டு அலறியடித்து கொண்டு அங்கிருந்து ஓட்டம் பிடித்தது..

பரபரப்பு
இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.. அரை மணி நேரத்துக்கும் மேலாக காந்தி இர்வின் பாலம் அருகே டிராபிக் ஜாம் ஏற்பட்டது.. அந்த ஜோடி யார் என்பது தெரியவில்லை.. எதற்காக அவர்களுக்குள் சண்டை வந்தது என்பதும் தெரியவில்லை.. இதுகுறித்து உடனடியாக பொதுமக்கள் ரயில்வே போலீசாருக்கு தகவல் அளித்தனர்.. அதன்பேரில் போலீசாரும் விசாரணையை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications