ஆ.. புதருக்குள்ள யாரு.. ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து.. முத்தம் கொடுத்து... சீச்சீ.. வண்டலூர் ஜூவா இது
வண்டலூர் பூங்காவில் காதல் ஜோடிகள் அத்துமீறலில் ஈடுபடுகின்றனர்
சென்னை: வர்ற வர்ற வண்டலூர் பூங்கா, காதலர்களுக்கு பெட்ரூம் போல ஆகிவிட்டது! எந்த பக்கமும் திரும்பினாலும் இந்த காதல் ஜோடிகளின் அட்டகாசம் எல்லைமீறி காணப்பட்டு வருவது பெருத்த அதிர்ச்சியையும், வருத்தத்தையும் ஏற்படுத்தி வருகிறது.
அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா சென்னையின் சிறப்பு சொல்லக்கூடியது.. வண்டலூரில் உள்ளதால் வண்டலூர் பூங்கா என்றே சொல்வார்கள்.
இந்தியாவின் முதல் உயிரியல் பூங்கா... 170க்கும் மேற்பட்ட பாலூட்டிகள், பறவைகள்.. உள்ளன என்ற சிறப்பையும் பெற்றது.

காதல் ஜோடிகள்
பள்ளி மாணவர்களுக்கு சுற்றுலா தலமாக இந்த பூங்கா காலத்துக்கும் திகழ்ந்து வருகிறது.. ஆனால் சமீப காலமாக, காதல் ஜோடிகள் இங்குதான் படையெடுத்து வருகிறார்கள்.. இதில் சில கல்லூரி, பள்ளி மாணவர்களும் அடக்கம். லீவு விட்டால் போதும், இங்குதான் வந்துவிடுகிறார்கள்.. காலை 10 மணி முதல் சாயங்காலம் 6 மணி வரை பார்க் திறந்து இருப்பதால், இவர்களுக்கு பொழுது இங்குதான் கழிகிறது.

குழந்தைகள் - சிறுவர்கள்
பூங்காவையும், அங்குள்ள விலங்கு, பறவைகளையும் தங்கள் குழந்தைகளுக்கு காட்டுவதற்காக எத்தனையோ குடும்பங்கள் இங்கு வருகின்றன.. சின்னஞ்சிறு பிள்ளைகளை கையில் பிடித்தவாறே நடந்து செல்லும்போது, இந்த ஜோடிகள்தான் கண்ணில் படுகின்றன.

மக்கள் அதிர்ச்சி
ஒருவரோடு ஒருவர் மேலே விழுந்து கொண்டும், மடியில் படுத்து கொண்டும், முத்தமிட்டுக் கொண்டும்.. எல்லோரும் முகம் சுளிக்கும் வகையில் நடந்துகொள்வது கடுமையான அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. இத்தனை பேர் பார்க்கிறார்களே என்ற அச்சமோ, வெட்கமோ இந்த ஜோடிகளுக்கு இருப்பது இல்லை.. உலகத்தை மறந்து நாள் முழுவதும் விழுந்து கிடக்கிறார்கள்.

சில்மிஷங்கள்
அதிலும் இங்குள்ள மறைவான இடங்கள், புதர்கள் நிறைய இருப்பதால், இவர்களுக்கு இன்னும் வசதியாக போய்விடுகிறது.. வெளிப்படையான சில்மிஷங்களை தடுக்க ஏதாவது நடவடிக்கையை பூங்கா நிர்வாகம் அல்லது சமூக அமைப்பினர் ஏற்படுத்த வேண்டும், இப்படி அத்துமீறும் ஜோடிகளுக்கு கடிவாளத்தை போட வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications