Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வடமேற்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி - தமிழகம், கேரளா, கர்நாடகாவில் பருவமழை தீவிரம்

வடமேற்கு வங்கக் கடலில் வரும் 21 ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது.

Subscribe to Oneindia Tamil

சென்னை: வடமேற்கு வங்கக்கடலில் வரும் 21 ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக காற்றழுத்த தாழ்வு பகுதியால், தமிழக கடலோர பகுதிகளில் கேரளா , கர்நாடகாவில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. மும்பையில் பெய்து வரும் மழையால் நகரின் பல பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. கேரளாவிலும், தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலையோர மாவட்டங்களிலும் கனமழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

Low pressure form likely on 21st July IMD prediction

தமிழகத்தில் சென்னை தொடங்கி கடலோர மாவட்டங்களிலும் உள் மாவட்டங்களிலும் மேற்குத் தொடர்ச்சி மலையோர மாவட்டங்களான கோவை, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களிலும் 21ஆம் தேதி வரைக்கும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.

இந்திய வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் 17ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரைக்கும் மேற்கு ஹிமாலயா, உத்தரபிரதேசம், பஞ்சாப், ஹரியானா, கிழக்கு ராஜஸ்தான், வடக்கு மத்திய பிரதேசத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜூலை 18ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரைக்கும் டெல்லியில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், ஜம்மு காஷ்மீரில் 18ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரைக்கும் மிக மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் வடமேற்கு வங்கக்கடலில் வரும் 21 ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக கேரளா, கர்நாடகா, தமிழக கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

இந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி தீவிரமடையும் பட்சத்தில் ஒடிசா மாநில கடலோர பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+