வங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி.. இனிமேல் கனமழை தான்.. வானிலை மையம் எச்சரிக்கை
சென்னை: வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இலங்கை கடற்கரையில் இருந்து தென் மேற்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது என்றும், இது அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு வட மேற்கு நோக்கி மெதுவாக நகர வாய்ப்பு உள்ளது என்றும், இதனால் தமிழ்நாட்டில் இன்று முதல் வரும் 18 ஆம் தேதி பரவலாக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் 16 ஆம் தேதி தொடங்கியது. அந்த நேரத்தில் ஒரு 10 நாட்களுக்கு கனமழை வெளுத்து வாங்கியது. அதன்பிறகு இரண்டு வாரங்கள் பெரிதாக மழை பெய்யவில்லை. மாறாக வெயில் வெளுத்து வாங்கியது.

உருவானது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி
தொடர்ந்து கடந்த சில நாட்களாக தென் மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் இனி வரும் நாட்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்ய வாய்ப்பு உள்ளது எனவும், வடகிழக்கு பருவமழை வேகமெடுக்க தொடங்கியுள்ளது எனவும் தொடர்ந்து வானிலை ஆய்வாளர்கள் கூறி வந்தனர்.
இந்த நிலையில் வங்கக் கடலில் புதிதாக குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இன்று காலை 8.30 மணியளவில் இலங்கை கடற்கரையில் இருந்து தென் மேற்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது.
இன்று முதல் கனமழை ஆரம்பம்
இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு வட மேற்கு நோக்கி மெதுவாக நகர வாய்ப்பு உள்ளது. இதனால் தமிழ்நாட்டில் இன்று முதல் வரும் 18 ஆம் தேதி வரை பரவலாக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. குறிப்பாக தென் மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும். வரும் 17 ஆம் தேதி சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்.
இப்போது உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறுமா என்பது அடுத்தடுத்த நாட்களில் தெரியவரும். என்று வானிலை மையம் கூறியுள்ளது.
தனியார் வானிலை ஆய்வாளர்கள் கருத்து
தமிழகத்தில் அடுத்தடுத்து 3 காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் எனவும் புயல் கூட உருவாகும் என தனியார் வானிலை ஆய்வாளர் ஹேமசந்தர் கூறியிருந்தார். மேலும் 17 ஆம் தேதி சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யும் எனவும் 12 செமீக்கும் அதிகமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் கூறியிருந்தார்.
தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் கூறுகையில், முதற்கட்டமாக நாளை இரவு முதல் கடலோர மாவட்டங்களில் மழை தொடங்கும். 17 ஆம் தேதி வரை நல்ல மழை பெய்யும். தற்போது உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாறுவதற்கு சான்ஸ் இல்லை. ஆனால் அதற்கடுத்ததாக உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதியானது புயலாக மாற வாய்ப்பு இருக்கிறது.
புயல் உருவாக வாய்ப்பு
அதாவது நாளை இரவில் இருந்து 18 ஆம் தேதி வரை ஒரு ரவுண்டு மழை பெய்யும். அடுத்ததாக இரண்டு நாட்கள் கொஞ்சம் மழை குறைந்து, பின்னர் 21, 22 ஆம் தேதிகளில் மீண்டும் ஒரு ரவுண்டு மழை தொடங்கும். 24 ஆம் தேதிக்கு பிறகு மிக கனமழைக்கு வாய்ப்பு இருக்கிறது. அப்போது உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதியே புயலாக மாற வாய்ப்பு இருக்கிறது என்று கூறினார்.
-
நகைக்கடன் தள்ளுபடி கூட்டுறவு வங்கியின் சர்ப்ரைஸ் வரட்டும்! ஊழியர்களுக்கு ரூ.8000 ஏறிய ஊதியம் பாருங்க -
விஜய்க்கு எதிராக வெளியான வீடியோ.. அதிர்ந்து போன நடிகை அம்பிகா! ஆதங்கத்துடன் பதிலடி -
2020ல் ஒரு கோடிக்கு 'இதை' வாங்கியிருந்தால் இன்று 75 கோடி லாபம்.. எஸ்பிஐயில் 6 கோடி.. தங்கம் 4 கோடி -
எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி! திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ இளையக்கண்ணு! -
தமிழ்நாட்டின் ஹிட்லர்.. மனைவி, மகளை விரட்டிவிட்டு மகளிர் தின விழாவா! விஜய்யை சாடிய இயக்குநர் அமீர் -
ஸ்டாலின் காதுக்கு எட்டிய பெயர்.. உளவுத்துறைக்கு உடனே உத்தரவு.. சென்னை சுவரில் தோன்றிய நாடார் சங்கம் -
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
வீட்டுப் பெண்களை நினைக்காமல் அவதூறு பரப்பி.. தவெக நிகழ்ச்சியில் பேசிய பெண்! ஒரு நொடி முகம் மாறிய விஜய் -
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Sani Peyarchi: விருச்சிக ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. இனி பொற்காலம் ஆரம்பம் -
விஜய்க்கு தான் பிரச்சனை! அடுத்த அடி, அதிரடி காட்டும் மகன் ஜேசன் சஞ்சீவ்! இதுதான் கெத்து.. குவியும் பாராட்டு -
“OPS சிரிப்பே அவருக்கு பிரச்சனை”.. ஸ்டாலின் பேச பேச.. மேடையிலேயே குலுங்கி குலுங்கி சிரித்த ஓபிஎஸ்!












Click it and Unblock the Notifications