வங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி.. இனிமேல் கனமழை தான்.. வானிலை மையம் எச்சரிக்கை
சென்னை: வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இலங்கை கடற்கரையில் இருந்து தென் மேற்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது என்றும், இது அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு வட மேற்கு நோக்கி மெதுவாக நகர வாய்ப்பு உள்ளது என்றும், இதனால் தமிழ்நாட்டில் இன்று முதல் வரும் 18 ஆம் தேதி பரவலாக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் 16 ஆம் தேதி தொடங்கியது. அந்த நேரத்தில் ஒரு 10 நாட்களுக்கு கனமழை வெளுத்து வாங்கியது. அதன்பிறகு இரண்டு வாரங்கள் பெரிதாக மழை பெய்யவில்லை. மாறாக வெயில் வெளுத்து வாங்கியது.

உருவானது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி
தொடர்ந்து கடந்த சில நாட்களாக தென் மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் இனி வரும் நாட்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்ய வாய்ப்பு உள்ளது எனவும், வடகிழக்கு பருவமழை வேகமெடுக்க தொடங்கியுள்ளது எனவும் தொடர்ந்து வானிலை ஆய்வாளர்கள் கூறி வந்தனர்.
இந்த நிலையில் வங்கக் கடலில் புதிதாக குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இன்று காலை 8.30 மணியளவில் இலங்கை கடற்கரையில் இருந்து தென் மேற்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது.
இன்று முதல் கனமழை ஆரம்பம்
இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு வட மேற்கு நோக்கி மெதுவாக நகர வாய்ப்பு உள்ளது. இதனால் தமிழ்நாட்டில் இன்று முதல் வரும் 18 ஆம் தேதி வரை பரவலாக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. குறிப்பாக தென் மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும். வரும் 17 ஆம் தேதி சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்.
இப்போது உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறுமா என்பது அடுத்தடுத்த நாட்களில் தெரியவரும். என்று வானிலை மையம் கூறியுள்ளது.
தனியார் வானிலை ஆய்வாளர்கள் கருத்து
தமிழகத்தில் அடுத்தடுத்து 3 காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் எனவும் புயல் கூட உருவாகும் என தனியார் வானிலை ஆய்வாளர் ஹேமசந்தர் கூறியிருந்தார். மேலும் 17 ஆம் தேதி சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யும் எனவும் 12 செமீக்கும் அதிகமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் கூறியிருந்தார்.
தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் கூறுகையில், முதற்கட்டமாக நாளை இரவு முதல் கடலோர மாவட்டங்களில் மழை தொடங்கும். 17 ஆம் தேதி வரை நல்ல மழை பெய்யும். தற்போது உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாறுவதற்கு சான்ஸ் இல்லை. ஆனால் அதற்கடுத்ததாக உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதியானது புயலாக மாற வாய்ப்பு இருக்கிறது.
புயல் உருவாக வாய்ப்பு
அதாவது நாளை இரவில் இருந்து 18 ஆம் தேதி வரை ஒரு ரவுண்டு மழை பெய்யும். அடுத்ததாக இரண்டு நாட்கள் கொஞ்சம் மழை குறைந்து, பின்னர் 21, 22 ஆம் தேதிகளில் மீண்டும் ஒரு ரவுண்டு மழை தொடங்கும். 24 ஆம் தேதிக்கு பிறகு மிக கனமழைக்கு வாய்ப்பு இருக்கிறது. அப்போது உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதியே புயலாக மாற வாய்ப்பு இருக்கிறது என்று கூறினார்.
-
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
தவெக வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் LIVE: 234 தொகுதிகளில் 23 பெண்களுக்கு மட்டுமே வாய்ப்பு அளித்த விஜய் -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
விஜய்க்கு எதிராக பெரம்பூர், திருச்சியில் கிழக்கில்.. களமிறங்கும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் யார்? -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
அரசியலன்னா இதுதான்.. எப்போ என்ன நடக்கும்னே தெரியாது.. ஸ்டாலின் டிக் அடித்த பெயர்.. பலர் ஷாக் -
இதுவரை திமுக ஜெயிக்காத.. கோவை தெற்கு தொகுதியைத் கேட்டு வாங்கிய செந்தில் பாலாஜி.. என்ன காரணம்? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
ஜெயலலிதா ஸ்டைலை பின்பற்றும் விஜய்! ‘டபுள் தொகுதி’ ஃபார்முலாவை கையில் எடுத்தது ஏன்? இதுவரை யார் யார்? -
திமுக தேர்தல் அறிக்கை LIVE: மகளிர் உரிமை தொகை, புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் தொகை உயர்வு! -
மத்தி, சென்னையை கிளீன் ஸ்வீப் செய்யும் திமுக! தெற்கு, வடக்கில் ட்விஸ்ட்! அப்போ அரியணை? வெளியான சர்வே












Click it and Unblock the Notifications