Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சமையல் கேஸ் சிலிண்டர் விலை மாற்றம்?.. வெளியானது புது லிஸ்ட்.. மத்திய அரசின் முக்கிய அட்வைஸ் பாருங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் கேஸ் சிலிண்டர் விலை பட்டியல் வெளியாகி உள்ளது.. அத்துடன், சமையல் கேஸ் சிலிண்டர் குறித்து முக்கிய அறிவுரை ஒன்றும் தரப்பட்டுள்ளது.

சமையல் கேஸ் சிலிண்டர் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வரும்நிலையில், கடந்த மாதம் எந்த ஒரு மாற்றமும் இல்லாமல் இருந்தது. ஆனால், ஒவ்வொரு மாதமும் சிலிண்டரின் விலை அதிகரிக்கும் பட்சத்தில் பொதுமக்களின் நலன் கருதி வீட்டில் உபயோகப்படுத்தும் சமையல் சிலிண்டருக்கு மானியம் வழங்கப்பட்டு வருகிறது.

LPG Gas Cylinder and Do You know what are the Central Government major advices 28-08-23

விலைப்பட்டியல்: அந்த வகையில், தமிழகத்தில் எல்பிஜி சிலிண்டரின் விலை ரூ.1118.50க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.. மற்ற மாநிலத்துடன் ஒப்பிடும் போது தமிழகத்தில், இன்று வீட்டில் உபயோகம் செய்யப்படும் 14.2 கிலோ எடையுள்ள எல்பிஜி சிலிண்டரின் விலை குறைந்திருக்கிறது.. இதற்கான விலை பட்டியலும் வெளியாகி உள்ளது.

குறிப்பாக, அரியலூரில் சிலிண்டரின் விலை ரூ. 1140க்கும், சென்னையில் ரூ. 1118.50 க்கும், கோயம்புத்தூரில் ரூ.1132க்கும், கூடலூரில் ரூ.1139 க்கும், தர்மபுரியில் ரூ.1141 க்கும், திண்டுக்கல்லில் ரூ.1145 க்கும், ஈரோட்டில் 1137.50 க்கும், கள்ளக்குறிச்சியில் 11450-க்கும், காஞ்சிபுரத்தில் ரூ.1118.50 க்கும், கன்னியாகுமரியில் ரூ.1187 க்கும், கரூரில் ரூ.1157.50 க்கும் என ஒவ்வொரு மாவட்டங்களிலும் மற்ற மாநிலத்தை ஒப்பிடும்போது சிலிண்டரின் விலை குறைந்துள்ளது.

அதுமட்டுமல்ல, பொது மக்களுக்கு சிலிண்டரை டெலிவரி செய்யும் போது பொதுமக்கள் கூடுதலாக எந்தவித தொகையையும் செலுத்த தேவையில்லை என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

டெலிவரி மேன்கள்: காரணம், இந்த சிலிண்டர் விலையையும் சேர்த்து, சிலிண்டரை டெலிவரி செய்யும் நபர்களுக்கும் பணம் தர வேண்டி உள்ளது.. சிலிண்டர் விலையைவிட, கூடுதலாக 50 ரூபாய் கேட்கிறார்கள் டெலிவரி மேன்கள்.. டெலிவரி கட்டணம் தொடர்பாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் இதற்கு ஒரு விளக்கமே உள்ளது..

அதாவது, நீங்கள் சிலிண்டரை புக்கிங் செய்தால், உங்கள் வீட்டுக்கே அந்த சிலிண்டரை டெலிவரி செய்வது ஏஜென்சியின் பொறுப்பாகும். டெலிவரி செய்யும் சமயத்தில் பணம் எதுவும் கேட்கப்பட்டால் கொடுக்கத் தேவையில்லை..

அப்படி கேட்கப்பட்டால் சம்பந்தப்பட்ட வாடிக்கையாளர்கள் புகார் தரலாம்.. ஏனென்றால், டெலிவரி மேனுக்கு கொடுக்கும் அந்த கட்டணமானது, நாமாகவே விருப்பப்பட்டு தருவது.. அதை யாரும் கட்டாயப்படுத்த முடியாது. அப்படி கட்டாயப்படுத்தினால், தாராளமாக வாடிக்கையாளர்கள் புகார் கொடுக்கலாம்.

அட்வைஸ்: ஆனால், இப்போதுவரை, டெலிவரி மேனுக்கு பணம் தரப்பட்டுகொண்டுதான் இருக்கிறது. இது அனைத்து மாநிலங்களிலுமே நடக்கிறது.. இந்நிலையில்தான், மத்திய அரசு அட்வைஸ் ஒன்றினை தந்துள்ளது...

இதுகுறித்து பெட்ரோலிய அமைச்சகம் விடுத்துள்ள அறிக்கையில், "சிலிண்டர் எடுத்து வரும் ஊழியர்களிடம் ரசீதில் உள்ள தொகையை தவிர, வாடிக்கையாளர் கூடுதல் பணம் தர கூடாது. சிலிண்டரை வீட்டு வாசலில் வினியோகம் செய்வது கட்டாயமாகும். கேஸ் ஏஜென்சிகளுக்கு சென்று சிலிண்டர் எடுக்கும்போது, அதற்குரிய டெலிவரி தொகையை ஏஜென்சிகளிடம் இருந்து பெற்று கொள்ளலாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+