Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பிரபாகரன் மனைவி, மகள் உயிருடனே இல்லை..ஆனாலும் வருவார்கள்.. புதிர் போடும் விடுதலைப் புலிகள்

பிரபாகரன் மனைவி, மகள் தொடர்பாக விடுதலைப் புலிகளின் தயா மோகன் குழப்பமான பதில் தெரிவித்துள்ளார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனின் மனைவி மதிவதினி, மகள் துவாரகா வெளிநாட்டில் தலைமறைவாக இருக்கும் செய்திகளை அந்த இயக்கத்தின் மாஜி போராளி தயா மோகன் மறுத்துள்ளார். அதே நேரத்தில் பிரபாகரன் மனைவி, மகள் என ஒருவரை நவீன தொழில்நுட்பம் மூலம் அடையாளம் காட்டக் கூடிய சாத்தியங்கள் உள்ளது எனவும் தயா மோகன் கூறியுள்ளார்.

பிரபாகரன் மனைவி, மகள் தொடர்பாக பிபிசி ஊடகத்துக்கு தயா மோகன் அளித்த பேட்டி: 2009ல் பிரபாகரன் மரணமடைந்தபோது அவர் யாரோடு தொடர்பில் இருந்தாரோ, அவர்களோடுதான் இப்போதும் தொடர்பில் இருந்து கொண்டிருக்கிறார்கள். புலம்பெயர் தேசங்களில், பிரபாகரன், மனைவி மதிவதனி, மகள் துவாரகா ஆகியோர் உயிரோடு இருப்பதாக சில பிம்பங்களை உருவாக்கி நிதி வசூலிக்கிறார்கள். அதைச் செய்வது யாரென்றால் 2009ல் யார் பிரபாகரன் உயிரோடு இருப்பதாக நெடுமாறனை நம்ப வைத்தார்களோ, அவர்களேதான் இப்போதும் நம்ப வைத்துக் கொண்டிருக்கிறார்கள். இதற்கு முழுக்க முழுக்க அவரைக் குற்றம்சொல்ல முடியாது என்றாலும், கடந்த 13 ஆண்டுகள் அவர் நடந்தது என்ன என்பதை பகுத்தறிந்திருக்க வேண்டும்.

LTTE Daya Mohan confuses over Prabhakaran Wife, Daughter are Alive

மகள் பிரபாகரனுக்கு முன்பே இறந்துவிட்டார். அவர் உரிய முறைப்படி அடக்கம் செய்யப்பட்டார். ஆகவே அவரது உடலைக் காட்ட முடியாது. மதிவதனியைப் பொறுத்தவரை, பிரபாகரன் கொல்லப்படுவதற்கு சில நாட்களுக்கு முன்போ, சில மணி நேரங்களுக்கு முன்போ அவரும் கொல்லப்பட்டார். பாலச்சந்திரன் மட்டும்தான் ஒரு சில போராளிகளுடன் போய் சரணடைந்தார். அவர் சுட்டுக்கொல்லப்பட்டார்.

பிரபாகரன் வருவார் என அவர் இத்தனை ஆண்டு காலமாக சொல்லிக் கொண்டிருந்தபோது நாங்கள் பொறுமையாகவே இருந்தோம். ஏனென்றால், பிரபாகரன் இருக்க வேண்டுமென அவர் விரும்புகிறார், அதனால் அப்படிச் சொல்லிக்கொண்டிருக்கிறார். நீண்ட காலமாக தமிழீழ விடுதலைப் புலிகளுக்காகவும் தமிழீழ விடுதலைக்காக பாடுபட்டவர் அவர் என்ற முறையில் அதைக் கடந்து சென்றோம்.

LTTE Daya Mohan confuses over Prabhakaran Wife, Daughter are Alive

ஆனால், இப்போது செய்திருப்பது பிரபாகரனின் பெயரையே (Legacy) இல்லாமல் செய்வதற்கான ஒரு முயற்சியாகத்தான் இதைப் பார்க்கிறோம். பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் என யார் சொன்னால் நம்புவார்களோ அவரை வைத்து சொல்ல வைத்திருக்கிறார்கள். இந்த முயற்சியை எடுத்தவர்களின் பிம்பங்கள் புலம்பெயர் தேசங்களில் உடைக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன. கடந்த ஆண்டு நவம்பர், டிசம்பரிலேயே இதற்கான முயற்சியை மேற்கொண்டார்கள். சிலரை ஏமாற்றி நிதியும் பெற்றார்கள். அது இங்குள்ள சில அமைப்புகளாலும் தனி போராளிகளாலும் அம்பலப்படுத்தப்பட்டது. அந்த செய்தியை இப்போது நம்ப வைக்க வேண்டுமென்றால், அதை ஒரு நம்பிக்கைக்குரிய ஒருவரை வைத்து சொல்ல வேண்டும் என்பதற்காக இதைச் செய்திருக்கிறார்கள். வேறு எந்தக் காரணமும் இல்லை. ஆனால், இதற்குப் பின்னால் உள்ள ஆபத்தை காசி ஆனந்தனும் நெடுமாறனும் உணரவில்லை.

ஆனால் பிரபாகரன் மனைவி, மகள் போல வேறு சிலரை அடையாளம் காட்டக் கூடிய தொழில்நுட்பம் இப்போது வந்திருக்கிறது. இவற்றை வைத்து அதைச் செய்வார்கள். இவ்வாறு தயா மோகன் கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+