போதும்! 29ஆண்டுகள் சிறைவாசம் போதும்..எழுவர் விடுதலையைத்தான் மனிதாபிமானம் எதிர்பார்க்கிறது: வைரமுத்து
சென்னை: ராஜீவ் கொலை வழக்கில் 7 தமிழர் விடுதலையைத்தான் மனிதாபிமானம் எதிர்பார்க்கிறது என கவிப்பேரரசு வைரமுத்து வலியுறுத்தி உள்ளார்.
ராஜீவ் வழக்கில் 30 ஆண்டுகளாக சிறைவாசம் அனுபவித்து வரும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழரை விடுதலை செய்ய வேண்டும் என்பது உலகத் தமிழர்களின் கோரிக்கை. தமிழக அரசும் மாநில அரசுக்கான அதிகாரத்தைப் பயன்படுத்தி 7 தமிழரையும் விடுவிக்கும் பரிந்துரையை ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கு 3 ஆண்டுகளுக்கு முன்னர் அனுப்பியது.

இந்த பரிந்துரை மீது ஆளுநர் பன்வாரிலால் எந்த ஒரு முடிவையும் எடுக்காமல் காலம் தாழ்த்தி வருகிறார். இதனைக் கண்டித்தும் பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தப்பட்டன.

உச்சநீதிமன்றத்திலும் பேரறிவாளன் தரப்பில் வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த உச்சநீதிமன்றம் ஒரு வார காலத்தில் ஆளுநர் பன்வாரிலால் 7 தமிழர் விடுதலை தொடர்பாக முடிவெடுக்க வேண்டும் என அறிவுறுத்தியது.

இதனிடையே கவிப்பேரரசு வைரமுத்து தமது ட்விட்டர் பக்கத்தில் 7 தமிழர் விடுதலையை வலியுறுத்தி பதிவிட்டுள்ளதாவது:
போதும்!
29ஆண்டுகள் சிறைவாசம் போதும்.
எழுவர் விடுதலையைத்தான்
மனிதாபிமானம் எதிர்பார்க்கிறது.
ஆளுநரின் அதிகாரம்
அறத்தை முன்னிறுத்திச்
சட்டத்தை அணுகட்டும்.
இவ்வாறு வைரமுத்து பதிவிட்டுள்ளார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications