+2 பொதுத் தேர்வு- உளவியல் போரிலிருந்து மாணவ சமுதாயத்தை விடுவித்த தமிழக அரசுக்கு பாராட்டு: வைரமுத்து
சென்னை: பிளஸ் டூ தேர்வு (+2 தேர்வு, பன்னிரெண்டாம் வகுப்பு, பிளஸ் 2 ) எனும் உளவியல் போரில் இருந்து மாணவர் சமுதாயத்தை விடுவித்த தமிழக அரசுக்கு கவிஞர் வைரமுத்து பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார்.
சி.பி.எஸ்.இ. பிளஸ் டூ தேர்வுகளை கொரோனா பாதிப்பை காரணம் காட்டி ரத்து செய்வதாக பிரதமர் மோடி அறிவித்தார். இதனடிப்படையில் மாநிலங்களிலும் பிளஸ் டூ தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன.

தமிழகத்திலும் பல்வேறு கட்ட ஆலோசனைகளுக்குப் பிறகு பிளஸ் டூ தேர்வு ரத்து செய்யப்படுவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். மேலும் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்றும் பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
அத்துடன் நீட் தேர்வின் பாதிப்பு, மாற்று மாணவர் சேர்க்கை தொடர்பாக ஆய்வு செய்ய ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே. ராஜன் தலைமையிலான குழு ஒன்றையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் நியமித்துள்ளார். தமிழக அரசின் இந்த நடவடிக்கைகளுக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

பிளஸ் டூ தேர்வுகள் ரத்து தொடர்பாக கவிஞர் வைரமுத்து ட்விட்டர் பக்கத்தில் எழுதியுள்ளதாவது:
+2 பொதுத் தேர்வு என்ற
உளவியல் போரிலிருந்து
மாணவ சமுதாயத்தை விடுவித்த
தமிழக அரசைப் பாராட்டுகிறேன்.
உயர்கல்வியா உயிரா
என்ற வினாவை முன்வைத்து
உயிரே என்று முடிவெடுத்ததில்
மாணவர்களின் பதற்றம் தணிந்தது.
+2 தேர்வு முடிவில்
முதலமைச்சருக்கு
நூற்றுக்கு நூறு
இவ்வாறு வைரமுத்து பாராட்டியுள்ளார்.
-
கள்ளக்குறிச்சியில் சினிமாவை மிஞ்சும் சம்பவம்.. காதல் கணவனுக்கு உயிருடன் கொள்ளி வைத்த அம்மு -
எங்களை எப்படியாவது காப்பாத்துங்க.. அமெரிக்கா - இந்தியாவிடம் கெஞ்சும் வங்கதேசம்.. ரஷ்யா உதவுமா? -
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்!












Click it and Unblock the Notifications