போ புயலே போய்விடு- பாமர உடல்களை பட்டம் விடாமல் சுகமாய் கடந்துவிடு சுவாசமாகி விடு- கவிஞர் வைரமுத்து
சென்னை: போ புயலே போய்விடு , பாமர உடல்களை பட்டம் விடாமல் சுகமாய் கடந்து விடு சுவாசமாகி விடு என கவிஞர் வைரமுத்து நிவர் புயல் குறித்து கவிதை எழுதியுள்ளார்.
Recommended Video
தமிழகத்திற்கான நிவர் புயல், கடலூரை நோக்கி மணிக்கு 7 கி.மீ, வேகத்தில் நகர்ந்து வருகிறது. இதனால் நேற்று முதல் சென்னை, கடலூர், புதுவை, சிதம்பரம், செங்கல்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
இந்த புயல் அதி தீவிர புயலாக மாறி வருகிறது. இது இன்று நள்ளிரவு முதல் நாளை அதிகாலை வரை கரையை கடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த புயல் கரையை கடக்கும் போது 145 கி.மீ. வேகத்தில் காற்று வீசும் என்பதால் பாதிப்புகள் அதிகமாக இருக்கும் என அஞ்சப்படுகிறது.

ட்விட்டர் பக்கம்
இந்த நிலையில் இந்த புயல் குறித்தும் எந்த சேதத்தையும் ஏற்படுத்தாமல் போவது குறித்தும் கவிஞர் வைரமுத்து கவிதை எழுதியுள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருக்கையில்,
வைரமுத்து கவிதை
போ புயலே
போ புயலே
போய்விடு
பச்சைமரம் பெயர்த்துப்
பல் துலக்காமல்
வேய்ந்தவை பிரித்து
விசிறிக் கொள்ளாமல்
குழந்தையர் கவர்ந்து
கோலியாடாமல்
பாமர உடல்களைப்
பட்டம் விடாமல்
சுகமாய்க் கடந்துவிடு
சுவாசமாகி விடு
ஏழையரின்
பெருமூச்சை விடவா நீ
பெருவீச்சு வீசுவாய்?
#NivarCyclone #Nivar
|
பாராட்டு
இந்த கவிதை வைரலாகி வரும் நிலையில் இதை எல்லோரும் பாராட்டி வருகிறார்கள். அப்பா உங்கள் கவிதை அருமை இதை வாசித்து விட்டாவது, நிவர் நம்மை புயலாக தாக்காமல் தென்றலாய் தீண்டிவிட்டு செல்லட்டும் . போதும் கஜா புயலால் கோரத்தாண்டவம் ஆடியது போதும் . இதற்கு மேல் சேதம் ஏற்பட்டால் தாங்க எங்களிடம் மனவலிமையும் இல்லை பொருள் ஈட்ட வழியும் இல்லை என்கிறார் இந்த வலைஞர்.
|
கடந்து போ சீக்கிரம்
புயலும் இடம்பெயர,
புருவம் இமைநகர,
புதினம் மழைவரைய,
புதிதாய் மனம்நகர,
காத்திருக்கிறது மழை...
கடந்துபோ சீக்கிரம்...
|
பெருமூச்சு
அபாரம். கவிப்பேரரசு அவர்களே.
ஏழையரின் பெருமூச்சைவிடவா
நீ பெருவீச்சு வீசுவாய்
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications