கொடநாடு எஸ்டேட் கொலை.. ஆளுநரை நாளை சந்திக்கிறார் ஸ்டாலின்.. ஆதாரத்துடன் முறையிட முடிவு!
கொடநாடு எஸ்டேட் கொலை தொடர்பாக நாளை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை சந்தித்து முறையிட போவதாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை: கொடநாடு எஸ்டேட் கொலை தொடர்பாக நாளை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை சந்தித்து முறையிட போவதாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கொடநாடு எஸ்டேட்டில் நடைபெற்ற மர்மக் கொலைகளின் பின்னணியில் யார் உள்ளார்கள் என்பது குறித்த இரண்டு நாட்களுக்கு முன் தெகல்ஹா முன்னாள் ஆசிரியர் மேத்யூஸ் சாமுவேல் சில முக்கிய ஆவணங்களை வெளியிட்டார். இதுகுறித்து ஆவணப்படமும் அவர் வெளியிட்டார்.
இதில் மேத்யூஸ் சாமுவேல் தமிழக முதல்வரை நேரடியாக குற்றஞ்சாட்டி இருந்தார். தற்போது இந்த கொலை குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் பேட்டியளித்துள்ளார்.

ஸ்டாலின் பேட்டி
ஸ்டாலின் தனது பேட்டியில், கொடநாடு விவகாரத்தை வெளியிட முடியாத அளவுக்கு தமிழக ஊடகங்கள் மிரட்டப்படுகின்றன. கொடநாடு விவகாரத்தில் எந்த பதிலையும் தராத முதல்வர், வழக்கு மட்டுமே நடப்பதாக கூறுகிறார். ஒரு கொலைக்குற்றவாளி முதல்வராக இருப்பது தமிழ்நாட்டில்தான் என பத்திரிகையாளர் மேத்யூ கூறியுள்ளார்; இதைவிட அசிங்கம் தமிழகத்திற்கு எதுவும் இல்லை

ஆளுநர் சந்திப்பு
கொடநாடு விவகாரம் தொடர்பாக நாளை ஆளுநர் பன்வாரிலாலை சந்தித்து முறையிட உள்ளோம். இதற்காக நேரம் கேட்டு இருக்கிறோம். நாளை திமுகவினர் சார்பாக சென்று ஆளுனரிடம் ஆதாரங்களுடன் முறையிடுவோம்.

குடியரசுத் தலைவர்
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திடமும் முறையிட உள்ளோம். விரைவில் இதற்காக நேரம் கேட்க இருக்கிறோம். இது தொடர்பாக நீதி விசாரணை நடத்த வேண்டும். கொடநாடு விவகாரத்தில் சிறப்பு விசாரணை ஆணையத்தை மத்திய அரசு உடனே அமைக்க வேண்டும்

நீதி விசாரணைக்கு தயாரா?
தமிழக முதல்வர் நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். ஆனால் அதற்கு அவர் தயாராக இல்லை. அந்த அளவிற்கு அளவிற்கு அவருக்கு தைரியம் இல்லை. முதல்வர் தவறு செய்யவில்லை என்றால், ''இந்த வழக்கில் குற்றத்தை நிரூபித்தால் பதவி விலக தயார்'' என்று சொல்ல தயாரா?, என்று ஸ்டாலின் கேள்வி எழுப்பி உள்ளார்.
-
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன்












Click it and Unblock the Notifications