“எய்ம்ஸ் மாதிரி இல்ல..” வானதி சீனிவாசன் கேள்விக்கு.. நறுக் பதிலளித்த ஸ்டாலின்! பேரவையில் சிரிப்பலை
சென்னை: மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை போல அல்லாமல், கோயம்புத்தூரில் விரைவில் கலைஞர் நூலகம் அமைக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் கூறியிருந்தது பெரும் கவனம் பெற்றிருக்கிறது.
கோவை, தமிழக அரசியலில் மிகவும் முக்கியமான மாவட்டமாகும். கொங்கு மண்டலத்தின் அடையாளமாக திகழும் இந்த மாவட்டம் அதிமுகவின் கோட்டையாக இருந்து வந்தது. எனவே இதை கைப்பற்ற திமுக தீவிரமாக முயற்சிகளை மேற்கொண்டிருந்தது. ஆனால் கட்சி இதற்காக கொடுத்த விலையும் அதிகம். அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி கோவைக்கு பொறுப்பாக நியமிக்கப்பட்டதிலிருந்து திமுகவின் செல்வாக்கு இங்கு செழிப்பாக வளர்ந்தது. ஆனால், தற்போது செந்தில் பாலாஜி, அமைச்சர் பதவியை இழந்து சிறையில் இருக்கிறார்.

இருப்பினும் அவர் உருவாக்கிய அரசியல் மைலேஜை அப்படியே விட்டுவிடக்கூடாது என்பதற்காக, திமுக பல்வேறு சிறப்பு திட்டங்களை கோவையை சுற்றி அறிவித்து வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் கூடிய தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடரில் கோவையில் கலைஞர் நூலகம் அமைக்கப்படும் என அமைச்சர் தங்கம் தென்னரசு தனது பட்ஜெட் உரையில் அறிவித்திருந்தார்.
அதாவது, "இளைய தலைமுறையினரின் அறிவு தாகத்தைத் தூண்டும் விதமாக கோவையில் மாபெரும் நூலகம், அறிவியல் மையம் கலைஞர் கருணாநிதி பெயரில் அமைக்கப்படும். இந்த நூலகத்தில் உலகத் தரம் வாய்ந்த நூல்கள், பத்திரிகைகள், இதழ்கள் இடம்பெறுவதுடன், விண்வெளி, இயந்திரவியல், மெய்நிகர் தோற்றம் என பல்வேறு அறிவியல், பொறியியல் பிரிவுகளைச் சேர்ந்த கண்காட்சிகள் நடத்தப்படும் வகையில் அறிவியல் மையம் ஏற்படுத்தப்படும்" என்று கூறியிருந்தார். இதற்கு பல்வேறு தரப்பினர் மத்தியில் வரவேற்பு எழுந்தது.
இதனையடுத்து நேற்று சட்டப்பேரவையில் பேசிய கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏ வானதி சீனிவாசன், "கோவையில் நூலகம் அமையும் என அறிவித்ததற்கு நன்றி. இந்த நூலகம் எப்போது எங்கே அமையும்? இதற்காக எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது? பணிகள் எப்போது தொடங்கும்?" என்று கேள்விகளை எழுப்பியிருந்தார்.
இந்நிலையில் பட்ஜெட் கூட்டத்தொடரின் இறுதி நாளான இன்று, வானதி சீனிவாசனின் கேள்விக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அளித்துள்ள பதில் பெரும் கவனம் பெற்றிருக்கிறது. அதாவது, "இந்த ஆட்சி சொன்னதை செய்யும், சொல்வதைதான் செய்யும். மதுரையில் உலக தரம் வாய்ந்த நூலகம் குறிப்பிட்ட காலத்திற்கு கட்டப்பட்டு திறந்து வைக்கப்பட்டிருக்கிறதோ, சென்னையில் கலைஞர் பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை திறக்கப்பட்டிருக்கிறதோ, மதுரை அலங்காநல்லூரில் ஏறு தழுவுதல் அரங்கம் அமைக்கப்பட்டிருக்கிறதோ, இன்னும் சில தினங்களில் கலைஞர் நினைவகம் அமைய இருக்கிறதோ, அதேபோல சொன்னபடி நூலகம் திறக்கப்படும்.
வானதி சீனிவாசனுக்கு குறிப்பாக சொல்லிக்கொள்வதெனில், மதுரையில் எய்ம்ஸ் அறிவித்ததை போல் அல்லாமல் குறிப்பிட்ட காலத்தில் நூலகம் கட்டி முடிக்கப்படும். 2026 ஜனவரி மாதத்தில் இந்த நூலகம் திறக்கப்படும்" என்று கூறினார். இவரது பேச்சால் சட்டப்பேரவையில் லேசான சிரிப்பலை எழுந்தது.
-
கோவை, நீலகிரிக்கு பறந்த அலர்ட்.. கொட்டப்போகும் மழை! வானிலை மையம் கொடுத்த அப்டேட்! -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு!












Click it and Unblock the Notifications