பரவும் இன்புளூயன்சா.. ப்ளூ காய்ச்சலால் பாதிக்கப்பட்டோர் வீடுகளில் சீல் வைக்கப்படுமா! மா.சு விளக்கம்
இன்புளூயன்சா காய்ச்சல் ஏற்பட்டோரின் வீடுகளுக்கும் சீல் வைக்கப்படுமா என்பது குறித்து அமைச்சர் மா சுப்பிரமணியன் விளக்கமளித்துள்ளார்.
சென்னை: கொரோனா பரவ தொடங்கிய சமயத்தில் வைரஸ் பாதிப்பு ஏற்பட்ட வீடுகளில் சீல் வைக்கப்பட்டது. அதேபோல இன்புளூயன்சா காய்ச்சல் ஏற்பட்டோரின் வீடுகளுக்கும் சீல் வைக்கப்படுமா என்ற கேள்விக்குச் சுகாதார அமைச்சர் மா சுப்பிரமணியன் விளக்கமளித்துள்ளார்.
கடந்த 2020இல் இந்தியாவில் நுழைந்த கொரோனா பாதிப்பு, அதன் பின்னர் நம்மை ஒரு வழி செய்துவிட்டது. கொரோனா பாதிப்பு காரணமாக சுமார் இரண்டு ஆண்டுகளை நாம் ஏற்கனவே இழந்துவிட்டோம்
வேக்சின் உள்ளிட்ட பல்வேறு பணிகளால் கொரோனா பாதிப்பு இப்போது தான் குறைந்திருந்தது. உலகம் மெல்ல மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பியது. இதனிடையே இப்போது இன்புளூயன்சா காய்ச்சல் பரவி வருகிறது.

இன்புளூயன்சா
தமிழ்நாட்டிலும் கூட பல பகுதிகளில் இந்த H3N2 இன்புளூயன்சா காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே நாடு முழுக்க பரவும் இந்த H3N2 இன்புளூயன்சா காய்ச்சலால் இரண்டு பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சக துறை தெரிவித்துள்ளது. ஏற்கனவே, கடந்த இரண்டு ஆண்டுகள் கொரோனா வைரஸ் நம்மைப் படாதபாடு படுத்திவிட்ட நிலையில் இன்புளூயன்சா காய்ச்சலும் அச்சம் ஏற்படுத்துவதாக உள்ளது

மா சுப்பிரமணியன்
இதனிடையே ப்ளூ காய்ச்சல் குறித்து அமைச்சர் மா சுப்பிரமணியன் சில முக்கிய தகவல்களைத் தெரிவித்துள்ளார். அதாவது இன்புளூயன்சா காய்ச்சலால் பெரியளவில் அச்சம் தேவையில்லை என்று குறிப்பிட்ட அவர், இன்புளூயன்சா காய்ச்சல் பரவக் கூடாது என்பதற்காகவே பாதிப்பு ஏற்பட்டவர்களைத் தனிமையில் இருக்க அறிவுறுத்தியதாகத் தெரிவித்தார். இதன் மூலம் இன்புளூயன்சா காய்ச்சல் மற்றவருக்குப் பரவுவது மட்டுமின்றி குடும்ப உறுப்பினர்கள் மத்தியில் பரவுவதும் நிறுத்தும்.

சீல் வைக்கப்படுமா
மேலும், கொரோனா பரவ தொடங்கிய சமயத்தில் வைரஸ் பாதிப்பு ஏற்பட்ட வீடுகளில் சீல் வைக்கப்பட்டது. அதேபோல இன்புளூயன்சா காய்ச்சல் ஏற்பட்டோரின் வீடுகளுக்கும் சீல் வைக்கப்படுமா என்ற கேள்விக்கு அமைச்சர் மா.சு, "கொரோனா பரவ தொடங்கிய காலத்தில், அதைக் கண்காணித்து சீல் வைக்கப்பட்டது. இன்புளூயன்சா காய்ச்சலுக்கு எல்லாம் அதுபோல செய்ய மாட்டோம். தனியாக இருக்கக் கூறுவதே முன்னெச்சரிக்கை நடவடிக்கை தான். ஏதாவது பிரத்தியேக நோய்ப் பாதிப்பு இருந்தால் அரசிடம் தெரிவிக்கத் தனியார் மருத்துவமனைகளுக்கு அறிவுறுத்தியுள்ளோம்.

ரெஸ்ட் எடுத்தால் போதும்
ப்ளூ காய்ச்சல் பருவ மழைக் காலத்தில் வரும் இயல்பான ஒன்று தான், தென்கிழக்கு பருவமழை, வடமேற்கு பருவமழை காலத்தில் இதுபோன்ற ப்ளூ பாதிப்புகள் வருவது இயல்பு தான். இருப்பினும், ப்ளூ காய்ச்சல் பாதிப்பு வீரியமாக இல்லை.. 2,3 நாட்கள் ரெஸ்ட் எடுத்தால் போதும் சரியாகிவிடும். இன்புளூயன்சா காய்ச்சலுக்குத் தேவையான மருந்துகளை அனைத்து மருத்துவமனைகளில் மருந்துகள் வைத்திருக்க அறிவுறுத்தியுள்ளோம்." என்றார்.
-
விரால் மீனின் ஸ்பெஷாலிட்டி இது.. பாம்பு தலையன் மீனுக்குள் அற்புதமான சீக்ரெட்! பெண்களின் வரப்பிரசாதம் -
ஜான் ஆரோக்கியசாமி போட்ட மெகா ஸ்கெட்ச்.. மிரண்டு போன பாஜக மேலிடம்.. B டீம் முத்திரையை உடைப்பாரா விஜய் -
திரிஷா சர்ச்சை அடங்குவதற்குள் மீண்டும் பரபரப்பு… காதல், கள்ளக்காதல் பற்றி பார்த்திபன் ஓபனாக பேச்சு -
அதிமுக எம்பியாக இருந்தபோதே கனிமொழி அக்கா எனக்கு பயிற்சி கொடுத்தார்.. ஓ.பி. ரவீந்திரநாத் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை பழிதீர்த்த கர்மா.. முத்துவால் ஏற்பட்ட குழப்பம்.. சந்தோஷத்தில் ரோகிணி -
மீண்டும் தள்ளிப்போகும் தேர்தல் தேதி அறிவிப்பு.. பின்னணியில் 3 காரணங்கள்.. தமிழகம் உள்பட 5 மாநில வாக்குப்பதிவு எப்போது? -
தவெகவில் பணக்கஷ்டம்.. ரூ.5 கோடி செலவு செய்ய வேட்பாளர்கள் இல்லை.. கூட்டணி செல்வது தான் சரி.. விஜய்க்கு அழுத்தம் -
Rasi Palan: கடகம், சிம்மம், கன்னிக்கு மார்ச் மாதத்தில் அடிக்குமா ஜாக்பாட்.. முழு பலன்கள் விவரம் -
அதில் இருந்தது கோழி கால் இல்லை.. சொமாட்டோ பிரியாணி பார்சலில் இருந்தது? அலற விட்ட 28 நிமிட வீடியோ -
சிங்காநல்லூர் வாய்ப்பில்லை.. பல்லடம் தொகுதியில் அண்ணாமலையை நிற்க சொல்லுங்க.. மறுக்கும் அதிமுக! -
Rasi Palan: துலாம், விருச்சிகம், தனுசு ராசிக்கான மார்ச் மாத பலன்.. முழு விவரம் இதோ -
வேளச்சேரி- பரங்கிமலை ரயில்.. மிகப்பெரிய சம்பவத்தை 'சைலண்ட்' ஆக செய்த மத்திய அரசு.. பின்னணி












Click it and Unblock the Notifications