கேட்டுக்கொள்கிறேன் அல்ல... கேட்டுக்கொள்கிறோம்... மதுசூதணனுக்கு பாடம் எடுத்த ஓ.பி.எஸ்..!
சென்னை: மறைந்த ஜெயலலிதாவின் 4-ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படும் நிலையில், அவரது நினைவை போற்றும் விதமாக தமிழகம் முழுவதும் அதிமுகவினர் அவருக்கு மரியாதை செலுத்தினர்.
சென்னையில் காலை முதலே மழை பெய்து வந்ததால் ஜெயலலிதா நினைவிடத்திற்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி கால தாமதமாக நடைபெற்றது.
அனைத்து அமைச்சர்கள் மற்றும் தலைமைக் கழக நிர்வாகிகள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

4-ம் ஆண்டு நினைவு தினம்
ஜெயலலிதா நினைவு தினத்தையொட்டி மெரீனாவில் உள்ள அவரது நினைவிடம் நேற்றிரவே மலர்களால் அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டது. காலை 9 மணியளவில் ஜெயலலிதா நினைவிடத்தில் மரியாதை செலுத்த திட்டமிடப்பட்ட நிலையில் மழை வெளுத்து வாங்கியது. இதனால் திட்டமிட்டப்படி ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த செல்ல முடியாத சூழல் உருவாகியது.

கால தாமதம்
இதையடுத்து முதலமைச்சர், துணை முதலமைச்சர், மற்றும் அமைச்சர்கள் அவரவர் வீடுகளில் ஜெயலலிதா படத்திற்கு மலரஞ்சலி செலுத்தி மரியாதை செலுத்தியதாக செய்தித் தொலைக்காட்சிகளில் செய்தி வெளியானது. இதனிடையே 10.30 மணிக்கு மேல் மழை சற்று குறைந்ததால் ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துவதற்காக முதலமைச்சர், துணை முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள், அதிமுக தலைமைக் கழக நிர்வாகிகள் அங்கு புறப்பட்டனர்.

மூன்று பேர் மட்டும்
அனைவரும் கருப்புச் சட்டை அணிந்தவாறு அங்கு வந்திருந்தனர். பொன்னையன், தளவாய் சுந்தரம், ராஜேந்திர பாலாஜி, ஆகிய மூன்று பேர் மட்டும் எப்போதும் போல் வெள்ளைச் சட்டை அணிந்து வந்திருந்தனர். வந்தவர்கள் அனைவரும் மழை பிடித்துக்கொள்வதற்கு முன்பாக அஞ்சலி செலுத்தி விட்டு புறப்பட வேண்டும் என்பதில் கவனமாக இருந்தனர்.

ஒ.பி.எஸ். வாசிப்பு
இதையடுத்து அந்த நிகழ்வு முடிந்த பின்னர் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது. அதற்கு கட்சியின் ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் தலைமை தாங்கி வாசிக்கத் தொடங்கிய ஓ.பி.எஸ். அதிமுகவை கட்டிக்காப்போம் எனக் கூற அதனை அங்கிருந்தவர்கள் பின் தொடர்ந்து கூறி உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

மதுசூதணன்
பின்னர் எல்லோரும் கலைந்து செல்வதற்கு முன்னர் அனைவரும் 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன் என அதிமுக அவைத்தலைவர் மதுசூதணன் கூற, அருகில் நின்றுகொண்டிருந்த ஓ.பி.எஸ். கேட்டுக்கொள்கிறேன் அல்ல கேட்டுக்கொள்கிறோம் என அவருக்கு பாடம் எடுத்தார்.
-
சென்னை திரும்பிய அண்ணாமலை.. விமான நிலையத்தில் திரண்டு வந்து ஆதரவாளர்கள் கொடுத்த ‘மாஸ்’ வரவேற்பு! -
"நான் முதலில் தமிழன்.." பாஜகவில் இருந்து விலகிய முதல் நாளே அண்ணாமலை சொன்ன வார்த்தை! நோட் பண்ணுங்க -
அண்ணாமலை போடுவது மாரீச மான் வேடம்.. ஆர்எஸ்எஸ்-ன் 2,501 அமைப்பு அது.. சண்முகம் ஒரே போடு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
அப்துல்கலாம் பெயரில் அரசியல் பயிற்சி மையம்.. முதலில் பயிற்சி.. அப்புறம் பதவி.. அறிவித்த அண்ணாமலை! -
“அதிகப் பிரசங்கித்தனம்”.. காங்கிரஸ் பிரவீன் சக்கரவர்த்தி பதிவால் டென்ஷன் ஆன சிபிஐஎம்! -
பாஜகவின் பிளான் 'பி'.. அண்ணாமலை பின்னால் ஆர்எஸ்எஸ்! மாணிக்கம் தாகூர் வார்னிங்! -
திமுக போல தோற்காம இருக்கனும்னா திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற விஜய் அரசு ஓகே சொல்லனும்- நயினார் -
CJP Protest LIVE: அடுத்தக்கட்ட போரட்டத்தை அறிவித்த கரப்பான் பூச்சி கட்சி! பாஜகவுக்கு நெருக்கடி -
"நாளைக்கு வரோம்.. களத்தை அதிர வைக்கிறோம்!" டெல்லியை மிரள வைக்க கிளம்பிய கரப்பான் பூச்சி கட்சி! -
தன் பதவியையே காப்பாற்ற முடியாத ஜோதிடர்.. விஜய்க்கு வழிகாட்டுகிறாராம்! விளாசிய மா.கம்யூ., சண்முகம் -
அண்ணாமலை ராஜினாமா ஏற்பு.. இனி அடிப்படை உறுப்பினர் கூட கிடையாது.. பாஜக அதிகாரப்பூர்வ அறிவிப்பு












Click it and Unblock the Notifications