15 நாட்களில்.. சென்னையின் மிக முக்கிய இடத்தில்.. திறக்கப்படும் ராட்சச பாலம்.. எங்கே?
சென்னை: மத்திய கைலாஷ் மேம்பாலத்தின் பணிகள் முடியும் நிலையில் உள்ளது. அடுத்த 2 வாரங்களில் இங்கே பாலம் திறக்கப்பட உள்ளது.
பாலத்தின் பணிகள் அக்டோபர் இறுதிக்குள் முடிய வேண்டியிருந்த நிலையில், தற்போது ஜனவரி இறுதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன. நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ. வேலு முன்பு தெரிவித்தபடி, மேம்பால சந்திப்பில் இறுதித் தளம் இன்னும் அமைக்கப்படாததே இந்த தாமதத்திற்குக் காரணமாக அமைந்துள்ளது. தற்போது அதன் இறுதிக்கட்ட பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

சர்தார் படேல் சாலையில் அணுகுசாலை அமைக்கும் பணிகள் மற்றும் துணைத் தூண்கள் நிறுவும் பணிகள் மட்டுமே இதுவரை நிறைவடைந்துள்ளன. சுமார் 22 மீட்டர் நீளமுள்ள முக்கிய தளத்தை, சர்தார் படேல் சாலையையும் ஓ.எம்.ஆர் சாலையையும் இணைக்கும் வகையில், நெடுஞ்சாலைத் துறை இன்னும் நிறுவவில்லை.
மத்திய கைலாஷ் சந்திப்பு
மத்திய கைலாஷ் சந்திப்பு, ஒரு மணி நேரத்திற்கு சுமார் 11,000 வாகனங்கள் கடந்து செல்லும் மிக முக்கியமான பகுதியாகும். இதில், கிண்டியிலிருந்து ஓ.எம்.ஆர் வரையிலான வழித்தடத்தில் மட்டும் 3,762 வாகனங்கள் செல்கின்றன. இந்தப் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க, ₹60 கோடி மதிப்பீட்டில் 650 மீட்டர் நீளமுள்ள 'எல்' வடிவிலான மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது.
பணிகள் வேகமாக நடைபெறுவதாக நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால், ஒப்பந்ததாரர் திருப்பதியிலிருந்து இரும்பு கொள்முதல் செய்ய ஏற்பட்ட தாமதமே ஒரு முக்கிய காரணம். "நவம்பர் மாதத்தில் விட்டுவிட்டு பெய்த மழையும் கட்டுமானப் பணிகளைத் தாமதப்படுத்தியது," என்று கட்டுமான பிரிவு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
சாலைகள் பணிகள் தீவிரம்
தற்போது அணுகுசாலைப் பணிகள் விரைவாக நடந்து வருகின்றன. சந்திப்பில் துணை அமைப்புகள் நிறுவப்பட்டுவிட்டன என்றும் அதிகாரிகள் உறுதிப்படுத்தினர். "இறுதி தளத்தை மட்டும் அமைத்துவிட்டால், மேம்பாலப் பணிகள் முடிவடைந்துவிடும்," என்று கூறப்படுகிறது.
மேம்பாலத்தின் மத்தியப் பகுதியில் ஒரு தளம் அமைக்கப்பட்டு, பணிக்கான இடம் சீர்செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக, போக்குவரத்துப் போலீசார் தற்போது அடையாறிலிருந்து கிண்டிக்குச் செல்லும் வாகனங்களை சர்தார் படேல் சாலை வழியாக நேராகச் செல்ல அனுமதிக்கின்றனர். முன்னதாக ஓ.எம்.ஆர் வழியாக யூ-டர்ன் எடுக்க வேண்டியிருந்தது.
இதேபோல், கஸ்தூரிபாய் நகர் எம்.ஆர்.டி.எஸ். ரயில் நிலையம் அருகே ஓ.எம்.ஆர் சாலையில், இறுதி தாங்குதளத்தை அமைக்க நெடுஞ்சாலைத் துறை 8 மீட்டர் பரப்பளவை ஆக்கிரமித்துள்ளது. இதனால் டைடல் பார்க் நோக்கிச் செல்லும் வாகனங்களுக்கான சாலைப் பகுதி சுருங்கியுள்ளது. போக்குவரத்து மாற்றத்திற்கான அனுமதி இன்னும் ஒரு மாதத்திற்குள் முடிவடையும் நிலையில், இறுதித் தளத்தை வைத்ததும், டிசம்பர் 15-க்குள் சாலையைச் சரிசெய்திடுவோம் என அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்து உள்ளனர்.
சென்னையில் சர்தார் படேல் சாலையில் இருந்த நடைபாதை அளவு குறைக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து இங்கே சர்தார் படேல் சாலையை அகலப்படுத்தும் பணிகள் நடந்து வருகின்றன.
சென்னை சர்தார் படேல் சாலையை அகலப்படுத்தும் திட்டத்திற்காக மாநில நெடுஞ்சாலைத் துறை விரைவில் டெண்டர்களை வெளியிட உள்ளது. தற்போதைக்கு அங்கே நடைமேடை மட்டும் அளவு சிறுதாக்கப்பட்டு உள்ளது. பல லட்சம் ஊழியர்கள் பயணம் செய்யும் இச்சாலையின் மேம்பாட்டிற்கு ₹45 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இரு கூடுதல் பாதைகள் அமைத்தல், பாதசாரிகளுக்கான நடைபாதைகளை மேம்படுத்துதல், மற்றும் ஐஐடிக்கு அருகிலுள்ள புற்றுநோய் மையத்தைச் சுற்றி ஒலி தடுப்புச் சுவர் கட்டுதல் ஆகியவை இத்திட்டத்தின் முக்கிய அம்சங்களாகும்.
சர்தார் படேல் சாலை
இச்சாலை, ஆறு வழித்தடங்களைக் கொண்ட ஐடி காரிடர் மற்றும் அண்ணா சாலை ஆகிய இரு முக்கிய சாலைகளை இணைக்கிறது. "கல்வி நிறுவனங்கள் மற்றும் நினைவிடங்கள் நிறைந்த இச்சாலை, அதன் அகலத்தை தக்கவைத்துக் கொள்வது அவசியம். மத்திய கைலாஷ் சந்திப்பில் மேம்பாலம் கட்டப்பட்டதால், அதன் கீழ் உள்ள சாலை சுமார் 400 மீட்டர் தூரத்திற்கு ஏற்கனவே அகலப்படுத்தப்பட்டுள்ளது," என ஓர் அதிகாரி தெரிவித்துள்ளார்.
ஐஐடி மெட்ராஸ் முதல் அண்ணா சாலை வரையிலான பகுதி விரிவுபடுத்தப்பட்டு, அதிக வாகனங்களைச் செல்ல அனுமதிக்கும் என்று அவர் மேலும் கூறினார். இத்திட்டப்பணிகள் இரண்டு கட்டங்களாக மேற்கொள்ளப்படும். முதல் கட்டமாக, ஐஐடி மெட்ராஸ் முதல் ராஜ்பவன் வரையிலான 1.70 கி.மீ தூரப் பணிகள் தொடங்கும்.
ஆறு வழித்தடங்களைக் கொண்ட ஐடி காரிடர்
அதைத் தொடர்ந்து, ராஜ்பவன் முதல் அண்ணா சாலை வரையிலான 0.80 கி.மீ தூரம் கொண்ட இரண்டாம் கட்டப் பணிகள் மேற்கொள்ளப்படும். சில மாதங்களுக்கு முன்பு, நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ.வேலு, மேம்பால ஆய்வுக்குப் பிறகு சாலையின் அகலத்தை நேரில் ஆய்வு செய்திருந்தார்.
காந்தி மண்டபம் அருகே உள்ள அகலமான நடைபாதைகள் நினைவிடங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு வரும் பாதசாரிகளுக்கு வசதியாக உள்ளன. ஆனால், மருத்துவமனை மற்றும் ஐஐடி மெட்ராஸ் அருகிலுள்ள நடைபாதைகளை அகலப்படுத்த வேண்டியது அவசியம் என அரசு கருதுகிறது. அவை குறுகலாக இருப்பதால், பாதசாரிகள் சாலையில் நடப்பதைத் தவிர்க்க முடியவில்லை.
நோயாளிகளும் அவர்களது உதவியாளர்களும் போக்குவரத்து நிறைந்த சாலையில் நடப்பதைத் தவிர்க்க, அந்தப் பகுதியில் நடைபாதை அகலப்படுத்தப்படுவது அவசியமாகும். தற்போது அங்கே நடைமேடை அமைக்கும் பணிகள் தீவிரமடைந்துள்ளன. கேன்சர் மருத்துவமனை பகுதியும் இத்திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளதாக நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.
-
முடங்கிய பணிகள்.. கிளாம்பாக்கம் மெட்ரோவிற்கு ‘பச்சைக்கொடி’ காட்டாத மத்திய அரசு.. எல்லாம் போச்சு -
Gold Price Fall: ஈரான் போருக்கு மத்தியில்! தங்கம் விலை குறைய 5 முக்கிய காரணங்கள் என்னென்ன தெரியுமா? -
சென்னை விமான நிலையத்தில் போக்குவரத்து மாற்றம்.. ஸ்தம்பித்த ஜிஎஸ்டி சாலை.. வாகன ஓட்டிகள் கவனம் -
சென்னைக்கு சரிபட்டு வராது.. டபுள் டெக்கர் ஓபன் டாப் பஸ் திட்டத்தை கைவிடும் எம்டிசி.. பயணிகளுக்கு ஏமாற்றம் -
வளிமண்டல கீழடுக்கு சுழற்சிகள்.. சென்னையில் இன்றும் மழை வெளுக்கும்.. 24 ஆம் தேதி வரை விடாது! -
மார்ச் மாதத்தில் நடந்த மேஜிக்.. சென்னையில் அசாதாரணமான மழை.. வெதர்மேன் வெளியிட்ட பதிவு -
சென்னை மாநகர பஸ் பயணிகளுக்கு குட் நியூஸ்! கேஷ்பேக் ஆஃபரில் டிக்கெட்.. உடனே இதை பண்ணுங்க -
அடுத்த 3 மணி நேரம்.. தேனி டூ குமரி வரை.. 10 மாவட்டங்களில் விட்டு விளாசப் போகுது மழை.. வானிலை அலர்ட் -
15 வருட ஏக்கம்! சென்னை வேளாங்கண்ணி இடையே நேரடி ரயில் சேவை! பயணிகளுக்கு இன்ப அதிர்ச்சி தந்த ரயில்வே -
இந்தியாவின் பெரிய ரிங் ரோட்டில்.. வருது ராட்சச ரயில் பாதை.. தமிழக அரசு கிரீன் சிக்னல்! தரமான முடிவு -
சென்னை தேர்தல் களத்தில் பிரியாணி கிடையாது? செலவினப் பட்டியலில் விடுபட்டதால் குழப்பம்! -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி!












Click it and Unblock the Notifications