இட்லி வடகறி.. இரவு நேர குல்பி.. ருசியால் நாவின் சுவை அரும்புகளை தட்டி எழுப்பும் சென்னையின் உணவுகள்
சென்னை: 384வது பிறந்தநாள் கொண்டாடும் சென்னையில் பார்த்து மகிழ பல இடங்கள் இருந்தாலும் ருசித்து பசியார பாரம்பரிய உணவுகள் பல உள்ளன. இட்லி வடகறி காம்போ டிபன் ருசித்தவர்கள் எங்கு போனாலும் அது போல கிடைக்குமா என்று எதிர்பார்ப்பார்கள். இரவு நேரங்களில் குல்ஃபி வண்டிக்காரர் வருகைக்காகவே காத்திருப்பர்கள் இன்றைக்கும் சென்னையில் வசிக்கின்றனர்.
சென்னை உணவுகள்: சென்னை பெருநகரத்தில் பல ஊர்களைச் சேர்ந்த மக்கள் வசிப்பதால் பல வித உணவுகளையும் இங்கே ருசிக்கலாம். முதல் முதலாக சென்னைக்குள் காலடி எடுத்து வைத்த போது சாப்பிட்ட இடம் சரவண பவன் 2 இட்லிக்கு சாம்பாருடன் நான்கு வகை சட்னி கொடுத்தது ஆச்சரியமாக இருந்தது. சின்னச் சின்ன கடைகளில் எல்லாம் இட்லிக்கு வடகறிதான் சரியான மேட்ச் ஆக இருக்கிறது. ரெடிமேட் மாவு விற்கும் கடைகளில் கூட இன்றைக்கு வடகறி பார்சல் தர ஆரம்பித்து விட்டனர்.

மெரீனா உணவுகள்: சிற்றுண்டி பிரியர்களுக்காகவே சென்னையில் பல சாலையோர கடைகள் உள்ளன. மெரீனா கடற்கரையில் உள்ள கடைகளில் விற்பனை செய்யப்படும் தேங்காய் மாங்காய்,பட்டாணி சுண்டல் கலந்து சாப்பிடுவது தனி சுவை. மெரீனா கடற்கரையில் காற்று வாங்க செல்பவர்கள் வறுத்த கடலை, வேக வைத்த பட்டாணி அதில் தேங்காய் மாங்காய் துருவல் சேர்த்த சுண்டல் சாப்பிடாமல் வீடு திரும்ப மாட்டார்கள். சுடச்சுட மக்காச்சோளம் வண்டிகளில் விற்றுக்கொண்டிருப்பார்கள் ஜில்லென்ற கடல் காற்றுக்கு இதமாக சில சோளக்கதிர்களை கொறித்து சாப்பிடுவார்கள் சிலர். தள்ளுவண்டி கடைகளில் விற்பனையாகும் சாட் உணவுகள், சன்னா மசாலா, பஜ்ஜி, வடைகள் என விதம் விதமாக மக்களின் டேஸ்டுக்கு ஏற்ப உணவின் வகைகளும் மாறும்.
சாட் உணவுகள்: பானி பூரி, பேல் பூரி, தயிர்பூரி, பாவ் பஜ்ஜி, வடை பாவ்,சமோசா, கட்லெட் , சன்னா மசாலா என இந்தியாவின் பல பகுதிகளில் பிரபலமாக விற்பனை செய்யப்படும் அனைத்து வகையான சாட் சிற்றுண்டிகளையும் சென்னையில் உள்ள சாலையோர கடைகளில் நாம் ருசிக்க முடியும். கால மாற்றத்தினால் பர்க்கர்,பீட்சா, சாண்ட் விச், சாலட் என விதம் விதமாக சாப்பிட்டாலும் சாட் உணவுகளின் சுவைக்கு ஈடு இணையில்லை என்றே சொல்ல வேண்டும்.
சென்னா மசாலா: சென்னையில் மக்கள் அதிகம் விரும்பி சாப்பிடும் மற்றுமொரு மாலை நேர ஸ்நாக்ஸ் சென்னா மசாலா. சென்னையில் எந்த பக்கம் திரும்பினாலும் அங்கு சென்னா மசாலா கடையை பார்க்க முடியும். வேகவைத்த பட்டாணியில் மசாலா சேர்த்து அதில் பானி பூரி, சமோசா சேர்த்து சாஸ் சேர்த்து கலந்து கொடுப்பார்கள். மாலை நேரங்களில் 20 ரூபாய்க்கு வாங்கி சாப்பிட்டாலே வயிறு நிரம்பி விடும். அவித்த கொண்ட கடலையுடன் சாஸ் சேர்த்து ஓமப்பொடி கலந்து கொடுக்கப்படும் உணவு காரமும் இனிப்பும் கலந்து தனி சுவையோடு இருக்கும்.
மசாலா கார பொரி: மயிலாப்பூர் வீதிகளில் மாலை நேரங்களில் தள்ளு வண்டி கடைகளில் இரும்பு சட்டியில் தட்டிக்கொண்டே சுடச்சுட வறுத்த கடலை விற்றுக்கொண்டு வருவார்கள். ஒரு பொட்டலம் 5 ரூபாய்தான் சுடச்சுட வாங்கி சாப்பிட சுவை சும்மா அள்ளும். சில தள்ளுவண்டிகளில் அரிசி பொரியில் மசாலா சேர்த்து கார பொரியாக கொஞ்சம் வறுத்த கடலை, ஓமப்பொடி, மசாலா, பூண்டு, கறிவேப்பிலை சேர்த்து கொடுப்பார்கள். பொரியோடு துருவிய காரட், நறுக்கிய பெரிய வெங்காயம், சேர்த்து சாஸ் சேர்த்து, சில மசாலாக்களை டப்பாவில் கொட்டி கலந்து கொடுப்பார்கள். அடடா அப்படியே நாவில் ருசி அள்ளும்.

பஜ்ஜி, வடை: சென்னையில் சாட் வகைகளுக்கு நிகராக, மாலையில் அதிகம் விற்பனையாகும் மற்றுமொரு சிற்றுண்டி வடை, பஜ்ஜி. கடலைமாவு கலவையில் வாழைக்காய், வெங்காயம், குடை மிளகாய், உருளைக்கிழங்கு என பலவகை பஜ்ஜிகள் பிளேட்களில் கார சட்னி வைத்து கொடுப்பது தனி ருசி. கோபி 65 பொறித்தது தட்டு தட்டாக பறக்கும். ரோட்டோர கடைகளில் குட்டி மசால்வடை, ஆனியன் போண்டா, மெதுவடைக்கு என பிரத்யோகமாக தயாரிக்கப்பட்ட வெங்காய சட்னி செம கூட்டணி. உருளைக்கிழங்கு கட்லெட் கூடவே சாஸ் சேர்த்து சாப்பிட்டால் அந்த ருசிக்கு ஈடு இணை ஏது. காலமாற்றத்தினால் இப்போது சிக்கன் சவர்மா, ப்ரைட் ரைஸ், எக் ரைஸ் என சின்னச்சின்ன கடைகள் முளைத்திருந்தாலும் விலை குறைவான சாலையோர உணவுகளுக்கு என்று இப்போது ருசிப்பிரியர்கள் பலர் இருக்கிறார்கள்.
கொழுக்கட்டை, உளுந்தங்கஞ்சி: இப்போதெல்லாம் சிற்றுண்டிகளில் சத்தானதையும் சென்னையில் விற்பனை செய்ய ஆரம்பித்து விட்டனர். மயிலாப்பூர் பாரதி மெஸ்சில் கொழுக்கட்டை, கார பணியாரம், இனிப்பு பணியாரம், உளுந்தங்கஞ்சி என சுவையான சத்தான சிற்றுண்டிகளை சாப்பிடவும் ருசிப்பிரியர்கள் தினசரியும் வந்து செல்கின்றனர்.
லஸ்ஸி, சர்பத்,ரோஸ் மில்க்: என்னதான் விதம் விதமாக கூல்டிரிங்க்ஸ்கள் பாட்டில் பாட்டிலாக விற்பனை செய்யப்பட்டாலும் விலை அதிகமாக ஐஸ்கிரீம்களை பார்லர்களில் விற்பனை செய்யப்பட்டாலும் சாலையோர கடைகளில் விற்பனை செய்யப்படும் ரோஸ்மில்க், பாதாம் மில்க், ப்ரூட் மிக்சர், லஸ்சி, சர்பத், கடல்பாசி என குளுமை பிரியர்களுக்கு என கடைகள் ஆங்காங்கே கார்னர்கள் காத்துக்கொண்டிருக்கும்.
இரவு நேர குல்ஃபி: இரவு நேரங்களில் குல்ஃபி.. குல்ஃபி.. என கூவிக்கொண்டே சின்ன தள்ளுவண்டியில் மண்பானையை வைத்துக்கொண்டு கிணி கிணி சத்தத்தோடு விற்றுக்கொண்டு குல்ஃபி ஐஸ்காரருக்காக பலர் உறங்காமல் காத்திருப்பார்கள். நன்றாக காய்ச்சிய பாலுடன் முந்திரி, பாதம், பிஸ்தா கலந்து அதை குல்பி அச்சில் ஊற்றி கேட்பவர்களுக்கு 10 ரூபாய் முதல் 30 ரூபாய் வரை கொடுக்கும் காசுக்கு ஏற்ப சிறியதும் பெரியதுமாக எடுத்துக் கொடுத்து பலரது மனங்களை குளிர்வித்து விடுவார் குல்ஃபி ஐஸ்காரர்.

மயிலாப்பூர் டேஸ்: சென்னைவாசிகள் விதம் விதமான உணவை மக்கள் ருசிக்க வேண்டும் என்பதற்காகவே ஆண்டுதோறும் 3 நாட்கள் 'மயிலாப்பூர் டேஸ்' திருவிழா கொண்டாடுவார்கள். தெருவோரங்களில் விற்பனை செய்யப்படும் அனைத்து வகையான உணவுகளையும் ஒரே இடத்தில் ருசிக்கலாம். அதற்காகவே திருவிழாவை ரசிக்க வருவார்கள். பங்குனி மாதத்தில் அறுபத்து மூவர் திருவிழா நடைபெறும் 10 நாட்களும் கடைவீதி களைகட்டும்.
நாவின் சுவை அரும்புகள்: சென்னையில் விற்பனையாகும் எத்தனையோ ருசியான உணவுகளைப் பற்றி எழுதிக்கொண்டே போகலாம். சென்னைவாசிகளை மட்டுமல்லாது சென்னைக்கு வரும் மக்களையும் ருசியால் கட்டிப்போட்டு நாவின் சுவை அரும்புகளை தட்டி எழுப்பும் சென்னையில் உள்ள பாரம்பரிய உணவுகள். சென்னையில் உங்களுக்கு பிடித்தமான உணவுகளோ.. சிற்றுண்டிகளோ.. விடுபட்டு போயிருந்தால் அதை நீங்களும் கமெண்ட் பகுதியில் எழுதுங்கள்.
-
சிபிஎம் கட்சிக்கு 5 தொகுதிகள்தான்! கட் அன்ட் ரைட்டாக சொன்ன ஸ்டாலின்! பெ.சண்முகம் வைத்த டிமாண்ட் -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன












Click it and Unblock the Notifications