ஹைகோர்ட்டை நம்பி காலை வைத்த சினேகா.. கண்ணீரை துடைத்த சட்டம்... கிடைத்தது வேலை!
நாகை இளம்பெண் சினேகா தாக்கல் செய்த மனு மீதான விசாரணை நடந்தது
சென்னை: ஹைகோர்ட்டை நம்பி காலை வைத்தார் இளம்பெண் சினேகா.. அதன்பலனாக, இப்போது ஆதரவான உத்தரவு ஒன்றினை நீதிபதி பிறப்பித்துள்ளார்.. அதன்படி, குடும்ப சண்டை வழக்கை காரணம் காட்டி போலீஸ் வேலை வழங்க மறுக்கக் கூடாது என்று உத்தரவிட்டுள்ளார்.
நாகப்பட்டினம் மாவட்டத்தை சேர்ந்த இளம்பெண் சினேகா.. இவர் சென்னை ஹைகோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.

அதில் அவர் சொல்லி இருந்ததன் சுருக்கம்: "கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் நடைபெற்ற 2-ம்நிலை காவலர் பணிக்கான எழுத்து மற்றும் உடல்தகுதி தேர்வில் வெற்றி பெற்றேன்.. சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டு பணியில் சேர இருந்த தருவாயில் தன் மீது கடந்த 2016-ம் ஆண்டு பதியப்பட்ட குற்ற வழக்கை காரணம் காட்டி எனக்கு போலீஸ் வேலை வழங்க முடியாது என நாகப்பட்டினம் எஸ்பி உத்தரவிட்டுவிட்டார்.
மேலும், 2016-ம் ஆண்டு எனது தாய், சகோதரி மற்றும் நாத்தனார் ஆகியோருக்கிடையே நடைபெற்ற மாமியார், மருமகள் குடும்ப சண்டையில் அப்போது மைனராக இருந்த எனது பெயரையும் குற்ற வழக்கில் போலீஸார் சேர்த்து விட்டனர். இப்போது சமரசம் ஏற்பட்ட நிலையில் எனக்கு பணி வழங்க உத்தரவிட வேண்டும்" என்று கேட்டுக் கொண்டிருந்தார்.
இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.. மனுவை நீதிபதி வி.பார்த்திபன் விசாரித்தார்.. பிறகு இதை பற்றி உத்தரவு பிறப்பிக்கும்போது,"குடும்பத்துக்குள் மாமியார், மருமகள் மற்றும் நாத்தனார் இடையே நடக்கும் குடும்ப சண்டை என்பது ஒரு சாதாரண நிகழ்வுதான்... இதையெல்லாம் ஒரு பெரிய குற்றமாக கருத வேண்டியது இல்லை... மேலும் குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டபோது மனுதாரர் மைனர் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அதனால், போலீஸ் வேலையில் சேர சினேகாவுக்கு எல்லா தகுதிகளும் இருக்கும்போது சாதாரண வழக்கை காரணம் காட்டி பணி வழங்க மறுப்பது ஏற்க முடியாது.. எனவே, மனுதாரர் சினேகாவுக்கு இன்னும் 4 வாரங்களில் உரிய போலீஸ் வேலை வழங்க வேண்டும்" என்றார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications