கலைகளை வாழவைக்கும் கலைஞர்கள்.. விருது வழங்கி கெளரவித்த உயர்நீதிமன்ற நீதிபதி
சென்னை: கலைஞர்கள் மூலமாகத்தான் கலை வாழ்வதாகவும், குரு சிஷ்யா உறவு முறையை எதிர்கால சந்ததியினரும் தொடர வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ள சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம் தனது தந்தை சாக்யா ராஜன் நினைவு விருதை பூஜா கொட்டு கலைஞர் ஸ்ரீ கிருஷ்ணா குரூப்க்கு வழங்கி கவுரவித்தார்.
பெங்களுரை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டுவரும் ஆத்மாலயா அகாடமி சார்பில் குருவே சரணம் என்ற பெயரில் நினைவு விருது வழங்கும் நிகழ்ச்சி சென்னை ஆள்வார்பேட்டை டிடிகே சாலையில் உள்ள நாரத கானா சபா வளாக அரங்கில் நடைபெற்றது.

ஆத்மாலாயா அகாடமி நிர்வாகி டாக்டர்.பத்மஜா குழுவின் பரத நடன நிகழ்ச்சியுடன் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு நினைவு விருதுகளை வழங்கினார்.
விழாவில் தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராமனின் தந்தை மறைந்த சாக்யா ராஜன் நினைவு விருதை பூஜா கொட்டு கலைஞர் ஸ்ரீ கிருஷ்ணா குரூப்க்கு வழங்கி சிறப்பித்தார். ஆத்மாலாயா சிறப்பு விருது மிருதங்க கலைஞர் தஞ்சாவூர் வி .பத்மாவுக்கும், டாக்டர்.ராஜராம் சாஷ்திரி விருது வேத கலைஞர் டாக்டர் ஆர்.கிருஷ்ணமூர்த்தி சாஷ்திரிகளுக்கும், மேலத்துர் ஸ்ரீ எஸ்.நடராஜன் நினைவு விருது நடன கலைஞர் ஸ்ரீ ஜெயராம் கணேசுக்கும் வழங்கி கவுரவித்தார்.
தொடர்ந்து பேசிய தலைமை நீதிபதி கே. ஆர்.ஸ்ரீராம் கலைஞர்கள் மூலமாகத்தான் கலை வாழ்வதாகவும், குரு சிஷ்யா உறவு புனிதமானது என்றும் இதை எதிர்கால சந்ததியினரும் பின்பற்ற வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் ஆத்மாலாயா அகாடமி கலைஞர்கள், சாந்தாலா நாட்டியாலயா , ரமணா சென்டர் கலைஞர்கள் மற்றும் தர்ஷன்சங்கர், சர்வேஷ் வெங்கடேஷ் ஆகியோர் நடன நிகழ்ச்சியும் நடைபெற்றது.நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தலைமை நீதிபதி ஸ்ரீராமின் சகோதரி பரதநாட்டிய கலைஞர். டாக்டர்.பத்மஜா சுரேஷ் மேற்கொண்டு இருந்தார். சென்னை: கலைஞர்கள் மூலமாகத்தான் கலை வாழ்வதாகவும், குரு சிஷ்யா உறவு முறையை எதிர்கால சந்ததியினரும் தொடர வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ள சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம் தனது தந்தை சாக்யா ராஜன் நினைவு விருதை பூஜா கொட்டு கலைஞர் ஸ்ரீ கிருஷ்ணா குரூப்க்கு வழங்கி கவுரவித்தார்.
பெங்களுரை தலைமயிடமாக கொண்டு செயல்பட்டுவரும் ஆத்மாலயா அகாடமி சார்பில் குருவே சரணம் என்ற பெயரில் நினைவு விருது வழங்கும் நிகழ்ச்சி சென்னை ஆள்வாட்பேட்டை டிடிகே சாலையில் உள்ள நாரத கானா சபா வளாக அரங்கில் நடைபெற்றது.
ஆத்மாலாயா அகாடமி நிர்வாகி டாக்டர்.பத்மஜா குழு வின் பரத நடன நிகழ்ச்சியுடன் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு நினைவு விருதுகளை வழங்கினார்.
விழாவில் தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராமனின் தந்தை மறைந்த சாக்யா ராஜன் நினைவு விருதை பூஜா கொட்டு கலைஞர் ஸ்ரீ கிருஷ்ணா குரூப்க்கு வழங்கி சிறப்பித்தார். ஆத்மாலாயா சிறப்பு விருது மிருதங்க கலைஞர் தஞ்சாவூர் வி .பத்மாவுக்கும், டாக்டர்.ராஜராம் சாஷ்திரி விருது வேத கலைஞர் டாக்டர் ஆர்.கிருஷ்ணமூர்த்தி சாஷ்திரிகளுக்கும், மேலத்துர் ஸ்ரீ எஸ்.நடராஜன் நினைவு விருது நடன கலைஞர் ஸ்ரீ ஜெயராம் கணேசுக்கும் வழங்கி கவுரவித்தார்.
தொடர்ந்து பேசிய தலைமை நீதிபதி கே. ஆர்.ஸ்ரீராம் கலைஞர்கள் மூலமாகத்தான் கலை வாழ்வதாகவும், குரு சிஷ்யா உறவு புனிதமானது என்றும் இதை எதிர்கால சந்ததியினரும் பின்பற்ற வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் ஆத்மாலாயா அகாடமி கலைஞர்கள், சாந்தாலா நாட்டியாலயா , ரமணா சென்டர் கலைஞர்கள் மற்றும் தர்ஷன்சங்கர், சர்வேஷ் வெங்கடேஷ் ஆகியோர் நடன நிகழ்ச்சியும் நடைபெற்றது.நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தலைமை நீதிபதி ஸ்ரீராமின் சகோதரி பரதநாட்டிய கலைஞர். டாக்டர்.பத்மஜா சுரேஷ் மேற்கொண்டு இருந்தார்.
-
தமிழகத்தில் ரெக்கார்டு பிரேக்கிங் தேர்தல் எது? சப்தமில்லாமல் சாதித்த ஜெயலலிதா! -
வேட்புமனு தாக்கல் செய்ய.. 4 நாட்கள்தான்! அதிரடியாக அறிவித்த தேர்தல் ஆணையம்! -
சென்னையில் 16 தொகுதிகளில் அதிமுக போட்டியிடும் 13 தொகுதிகள் விவரம்.. 3ல் கூட்டணி கட்சிகள் போட்டி -
சென்னையில் 20 லட்சம் கொடுத்து ஆசை ஆசையாக லீசுக்கு குடியேறிய வீடு.. இப்படியும் ஏமாறலாம் மக்களே -
அசுர வேகத்தில் தயாராகும் சென்னை-பெங்களூரு எக்ஸ்பிரஸ்வே! பயண நேரத்தில் அதிரடி மாற்றம் ஜூன் 2026 -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை!












Click it and Unblock the Notifications