Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ரேஷனில் அரிசி வாங்க போறீங்களா? அப்போ உங்களுக்குத்தான் இந்த செய்தி.. சென்னை ஹைகோர்ட் அதிரடி

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள ரேஷன் கடைகளில் பொது வினியோக திட்டத்தின் கீழ் வினியோகிக்கப்படும் அரிசிகள் குறித்து முக்கிய அறிவிப்பு ஒன்றை சென்னை உயர் நீதிமன்றம் வெளியிட்டு உள்ளது.

தமிழ்நாட்டில் ரேஷன் கடைகளில் அரிசு, பருப்பு, சர்க்கரை உள்ளிட்ட பொருட்கள் அட்டை ரீதியாக வழங்கப்பட்டது. அட்டையை பொறுத்து பொருட்கள் வழங்கப்படும் வீதமும், அளவும் மாறி வருகின்றது.

Madras High Court important order on selling rice in Tamil Nadu Ration Shops

இந்த நிலையில் ரேஷன் கடைகளில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. முக்கியமாக கடந்த 6 மாதங்களாக ரேஷன் கடைகள் தொடர்பாக பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன.

தமிழ்நாட்டில் அரிசி ஆலைகள் விரைவில் அதிகம் தொடங்கப்படும். 12 புதிய இடங்களில் அரிசி ஆலைகள் தொடங்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இதன் மூலம் மக்கள் எளிதாக தாங்கள் விளைவித்த அரிசியை கொண்டு சேர்க்க முடியும். அதேபோல் ரேஷன் கடைகள் சீரமைக்கப்படும் என்றும் ரேஷன் சார்பாக அறிவிக்கப்பட்டது.

சமீபத்தில் ரேஷன் கடைகளை சுத்தமாக வைத்துக்கொள்வது தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதற்கான எஸ்ஓபி அனைத்து ரேஷன் கடைகளுக்கும் அனுப்பப்பட்டது. அதன்பின் ரேஷனில் அரிசி ஆனாலும் சரி.. பருப்பு ஆனாலும் சரி.. சர்க்கரை ஆனாலும் சரி.. அனைத்தையும் இனி பாக்கெட்டுகளில் வழங்க ஏற்பாடு செய்து வருகிறோம். இதற்கான திட்டங்களை மேற்கொண்டு வருகிறோம். இந்த நிலையில் ரேஷன் கடைகளில் பொது வினியோக திட்டத்தின் கீழ் வினியோகிக்கப்படும் அரிசிகள் குறித்து முக்கிய அறிவிப்பு ஒன்றை சென்னை உயர் நீதிமன்றம் வெளியிட்டு உள்ளது.

என்ன அறிவிப்பு: பொது வினியோக திட்டத்தின் கீழ் வினியோகிக்கப்படும் செறிவூட்டப்பட்ட அரிசி பையில் எச்சரிக்கை வாசகம் இடம்பெறாதது குறித்து விளக்கமளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

மத்திய அரசு திட்டத்தின் கீழ் செறிவூட்டப்பட்ட அரிசி வினியோகிக்கப்படுகிறது. தமிழகத்தில் பொது வினியோக திட்டத்தின் கீழ் விருதுநகர், ராமநாதபுரம் மாவட்டங்களில் செறிவூட்டப்பட்ட அரிசி வினியோகம் துவங்கப்பட்டுள்ளது.

ஆனால் மத்திய அரசின் விதிகளின்படி, தலசீமா, அமீனியா நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவர்களின் ஆலோசனைப்படியே இதை உண்ண வேண்டும் என எச்சரிக்கை வாசகம் இடம்பெறச் செய்ய வேண்டும் எனவும், அதுபோல எந்த எச்சரிக்கை வாசகமும் இல்லாமல் இந்த அரிசி வினியோகிக்கப்படுவதாக கூறி, பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் சார்பில் வழக்கறிஞர் வெற்றிச் செல்வன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

Madras High Court important order on selling rice in Tamil Nadu Ration Shops

அந்த மனுவில், சட்டவிதியின் படி உரிய எச்சரிக்கை வாசகங்களுடன் மட்டுமே செறிவூட்டப்பட்ட அரிசி பொது வினியோகத்திட்டத்தில் வழங்கப்பட வேண்டும் எனவும், இதைப் பின்பற்றாமல் ரேசன் கடைகளில் செறிவூட்டப்பட்ட அரிசியை விநியோகிக்கக் கூடாது எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்த போது, அரிசி அடைக்கப்பட்டுள்ள கோணிப்பையில் இந்த எச்சரிக்கை வாசகம் இடம் பெற்றுள்ளதாக அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

கோணிப்பையில் உள்ள எச்சரிக்கை வாசகம் நுகர்வோருக்கு எப்படி தெரியும் எனக் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இது குறித்து செப்டம்பர் 21ம் தேதிக்குள் விளக்கமளிக்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்தனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+