சுகாதாரப் பணியாளர்களுக்கு உடல் கவசங்கள் வழங்கப்பட்டுள்ளதா? தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: கொரோனா தொற்றுக்கு சிகிச்சை அளிக்கும் பணியில் உள்ள மருத்துவர்கள், செவிலியர்களுக்கு முழு உடல் கவசங்கள் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளதா என்பது குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய, தமிழக அரசுக்கு, மே 13-ந் தேதி வரை அவகாசம் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொரோனா தொற்று பரவி வரும் நிலையில், தொற்று பாதித்தவர்களுக்கு சி்கிச்சை அளிக்கும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் அத்தியாவசியப் பணியில் உள்ள காவல்துறையினர், தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்டோருக்கு முழு உடல் கவசங்கள் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க உத்தரவிடக் கோரி வழக்கறிஞர் ஜிம்ராஜ் மில்டன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் நிர்மல் குமார் அடங்கிய அமர்வில், வீடியோ கான்பரன்சிங் மூலம் விசாரிக்கப்பட்டது.

Madras High Court issues notice to TN Govt on Medical equipments for Health workers

அப்போது, சென்னை ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனை உள்ளிட்ட முக்கிய மருத்துவமனைகளில் கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள், செவிலியர்களுக்கு முழுஉடல் கவசம் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படவில்லை என பத்திரிகையில் செய்தி வெளியாகிள்ளதைச் சுட்டிக் காட்டிய நீதிபதிகள், இதுகுறித்து அரசுத்தரப்பு வழக்கறிஞரிடம் கேள்வி எழுப்பினர்.

இதுசம்பந்தமாக விரிவான அறிக்கை தாக்கல் செய்ய, தமிழக அரசுத்தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர், கால அவகாசம் கோரியதை ஏற்ற நீதிபதிகள், மே 13ந் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை அன்றைய தினத்திற்கு ஒத்தி வைத்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+