திடீர் மாரடைப்பு.. சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சத்திய நாராயண பிரசாத் மரணம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சத்திய நாராயண பிரசாத் நேற்று இரவு மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். உயர் நீதிமன்ற நீதிபதிகளின் அனுபவ வரிசையில் 43-வது இடத்தில் சத்திய நாராயணா உள்ளார். நீதிபதி சத்திய நாராயணா மறைவுக்கு பல்வேறு தரப்பினரும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகிறாரக்ள்.

சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சத்திய நாராயண பிரசாத் நேற்று இரவு காலமானார். அவருக்கு வயது 56. நேற்று இரவு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதில் அவர் உயிரிழந்து இருப்பதாக குடும்பத்தினர் தெரிவித்தனர். நெஞ்சுவலி காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கபட்ட நிலையில் மரணம் அடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

madras-high-court-judge-sathya-narayana-prasad-dies

சென்னை உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக கடந்த 2021 ஆம் ஆண்டு சத்திய நாராயணா பதவி உயர்வு பெற்றார். பின்னர் சென்னை உயர் நீதிமன்றத்தின் நிரந்தர நீதிபதியாக அவர் நியமனம் செய்யப்பட்டார். பல்வேறு வழக்குகளை திறம்பட கையாண்டு தீர்ப்பு வழங்கிய நீதிபதி சத்திய நாராயணா நீதிபதிகளின் அனுபவர்கள் வரிசையில் 42-வது இடத்தில் இருந்தார்.

தஞ்சையை சேர்ந்த சத்திய நாராயண பிரசாத், 1997 ஆம் ஆண்டில் இருந்து 24 வருடங்கள் வழக்கறிஞராக பணியாற்றியுள்ளார். சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வு பெறுவதற்கு முன்பாக, பிஎஸ் என்.எல், சென்னை துறைமுகம் அறக்கட்டளை, இந்தியன் வங்கி, தெற்கு ரயில்வே உள்ளிட்ட அரசு நிறுவனங்களின் ஆலோசகராகவும் பணியாற்றி உள்ளார்.

சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி மாரடைப்பால் உயிரிழந்து இருக்க கூடிய தகவல் நீதித்துறை வட்டாரத்தில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. நீதிபதி சத்திய நாராயண பிரசாத் மறைவுக்கு பல்வேறு தரப்பினரும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+