Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சினிமா ஸ்டைல்.. கோவை ரவுடி போலீஸ் துப்பாக்கி சூடு.. காவல்துறைக்கு உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் சங்கரசுப்பு ஆஜராகி, "தாமாக முன்வந்து சரணடைந்த பின்னரும் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டிருக்கிறது. எனவே, இந்த மனு விசாரணைக்கு உகந்தது" எனக் கூறினார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: கோவையில் ரவுடி மீது போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் குறித்து விசாரணை நடத்த உத்தரவிடக் கோரிய மனுவுக்கு காவல்துறை பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Madras High Court ordered Kovai police to respond to a petition which seeks inquiry over firing incident

மதுரையைச் சேர்ந்தவர் சத்தி பாண்டி. பிரபல ரவுடியான இவர் அண்மையில் சுட்டுக் கொல்லப்பட்டார். இதுதொடர்பாக நடத்தப்பட்ட விசாணையில், கோவையை சேர்ந்த மற்றொரு சஞ்சய் ராஜாதான் இந்தக் கொலையில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து, சஞ்சய் ராஜாவை போலீஸார் தேடி வந்த நிலையில், அவர் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் சரணடைந்தார். பின்னர், கோவை ரேஸ்கோர்ஸ் போலீஸார், அவரிடம் விசாரணை நடத்துவதற்காக சரவணம்பட்டி பகுதிக்கு அழைத்து சென்றனர். அப்போது, தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து போலீஸாரை நோக்கி சஞ்சய் ராஜா சுட்டதாக கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, தற்காப்புக்காக ரேஸ்கோர்ஸ் காவல் உதவி ஆய்வாளர் சந்திரசேகர், துப்பாக்கியால் சஞ்சய்ராஜாவின் காலில் சுட்டார். இதில் காயமடைந்த சஞ்சய்ராஜா கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

Madras High Court ordered Kovai police to respond to a petition which seeks inquiry over firing incident

இந்நிலையில், சஞ்சய் ராஜா மீது துப்பாக்கிச் சூடு நடத்தியது குறித்து விசாரணை நடத்த உத்தரவிடக் கோரி சஞ்சய் ராஜாவின் நண்பர் முனிரத்தினம் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சஞ்சய் ராஜாவிற்கு முறையாக சிகிச்சை அளிக்கப்படவில்லை என்றும், அவரது உயிருக்கு ஆபத்து உள்ளதால் சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு மாற்ற வேண்டும் எனவும் கோரியுள்ளார்.

இந்த மனுவானது, நீதிபதிகள் எஸ்.எஸ். சுந்தர், பாலாஜி ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் முனியப்ப ராஜ், கைது செய்யப்பட்டவர் தற்போது நீதிமன்ற காவலில் உள்ளதாகவும், அவர் சட்ட விரோதமாக அடைத்து வைக்கப்படவில்லை என்பதால் இந்த ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு உகந்ததல்ல எனவும் கூறினார். மேலும், துப்பாக்கியால் சுடப்பட்ட நபருக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படுவதாக கூறி அதற்கான புகைப்படத்தையும் நீதிமன்றத்தில் அவர் சமர்ப்பித்தார்.

Madras High Court ordered Kovai police to respond to a petition which seeks inquiry over firing incident

இதையடுத்து, மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் சங்கரசுப்பு ஆஜராகி, "தாமாக முன்வந்து சரணடைந்த பின்னரும் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டிருக்கிறது. எனவே, இந்த மனு விசாரணைக்கு உகந்தது" எனக் கூறினார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், இந்த மனு குறித்து காவல்துறை இரண்டு வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+