இளம் வழக்கறிஞர்களுக்கு இனி மாதாமாதம் ரூ.20,000 உதவித்தொகை.. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு
சென்னை: வழக்கறிஞர்களிடம் ஜூனியர்களாக பணியாற்றும் இளம் வழக்கறிஞர்களுக்கு மாதம் ரூ.20,000 உதவித்தொகை வழங்கப்பட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.
ஒருசில தொழில்களில் ஊதியம் என்பது குறைந்தபட்சம் கூட கிடைக்கப்படாத நிலைமை தற்போதும் நீடித்து வருகிறது. இப்படியான தொழில்களில் முதன்மையானது வழக்கறிஞர் தொழில். சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர்களாக பணியாற்றுபவர்கள் தங்களுக்கு உதவிக்கான இளம் வழக்கறிஞர்களை வைத்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், இந்த இளம் வழக்கறிஞர்களுக்கு முறையான ஊதியம் ஏதும் தரப்படுவதில்லை என்கிற குற்றச்சாட்டு நீண்ட காலமாக எழுந்து வருகிறது.

இந்நிலையில் உதவியாளர்களாக பணியாற்றும் இளம் வழக்கறிஞர்களுக்கு மாதம் ரூ.20,000 உதவித்தொகையாக வழங்கப்பட வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம் மற்றும் சி.குமரப்பன் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் இந்த உத்தரவை பிறப்பித்திருக்கிறது. இது குறித்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் அனைத்து வழக்கறிஞர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை, கோவை மற்றும் மதுரையில் உள்ள இளம் வழக்கறிஞர்களுக்கு மாத உதவித்தொகையாக ரூ.20,000 வழங்கப்பட வேண்டும். மற்ற மாவட்டங்களில் உள்ள இளம் வழக்கறிஞர்களுக்கு ரூ.15,000 வழங்கப்பட வேண்டும் என்றும் உதவித்தொகை வழங்குவதில் பாலின அடிப்படையில் எவ்வித பாகுபாடும் காட்டப்படக்கூடாது என்றும் நீதிபதிகள் தங்கள் உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர்.
இளம் வழக்கறிஞர்களுக்கு பொருளாதார சிக்கல்கள் இன்ன பிற பிரச்னைகள் இந்த தொழிலின் ஓர் அங்கம் என்று பரவலாக சொல்லப்படுகிறது. இளம் வழக்கறிஞர்கள் இதற்கு பழகிவிட வேண்டும் எனவும் சொல்லப்படுகிறது. இது குறித்தும் நீதிபதிகள் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
"இது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. மட்டுமல்ல. இழிவான சிந்தனையாகும். இளம் வழக்கறிஞர்கள் எதற்கும் பழக வேண்டிய அவசியம் இல்லை. அவர்களின் கற்றல் மற்றும் தொழிலில் வளர்ச்சிக்கு பாதுகாப்பான மற்றும் சாதகமான சூழ்நிலையை நாங்கள் உறுதி செய்ய வேண்டும்" என்று நீதிபதிகள் கூறியுள்ளனர்.
இளம் வழக்கறிஞர்களுக்கான உதவி தொகை குறித்து நீதிமன்றமே தலையீடு செய்து அதிரடி உத்தரவுகளை பிறப்பித்திருப்பது கவனம் பெற்றிருக்கிறது. நீதிமன்ற உத்தரவு நடைமுறையில் அமல்படுத்தப்பட வேண்டும் என்று இளம் வழக்கறிஞர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
-
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications