4 ஆயிரம் உதவி பேராசிரியர் பணியிடங்கள்! 6 மாதத்திற்குள் தேர்வு நடத்த வேண்டும்.. சென்னை ஐகோர்ட் அதிரடி
சென்னை: தமிழக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள 4 ஆயிரம் உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கான தேர்வை 6 மாதங்களுக்குள் முடிக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. அதேசமயம், தற்போது பணியாற்றும் கவுரவ விரிவுரையாளர்களை பணிநீக்கம் செய்யக்கூடாது என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
அரசு கல்லூரிகளில் பல ஆண்டுகளாக கவுரவ விரிவுரையாளர்களாக பணியாற்றி வந்தவர்கள், தங்களது பணியை வரன்முறை செய்து உதவி பேராசிரியர்களாக நியமிக்க வேண்டும் என அரசிடம் கோரிக்கை விடுத்திருந்தனர். இதையடுத்து கடந்த 2020-ம் ஆண்டு, 1,146 கவுரவ விரிவுரையாளர்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் சிறப்புத் தேர்வு நடத்தி நியமனம் செய்ய அரசாணை வெளியிடப்பட்டது.

சென்னை ஐகோர்ட்டில் வழக்கு
ஆனால் பின்னர் 2022-ம் ஆண்டு அந்த அரசாணையை தமிழக அரசு ரத்து செய்து, காலியாக இருந்த 4 ஆயிரம் உதவி பேராசிரியர் பணியிடங்களை போட்டித் தேர்வு மூலம் நிரப்ப முடிவு செய்து புதிய அறிவிப்பை வெளியிட்டது. இதை எதிர்த்து கவுரவ விரிவுரையாளர்கள் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கில் முதலில் தனி நீதிபதி, 2022-ம் ஆண்டு வெளியிடப்பட்ட அரசாணையை ரத்து செய்து, பழைய அரசாணையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இதை எதிர்த்து தமிழக உயர்கல்வித்துறை, கல்லூரி கல்வி இயக்குநரகம் மற்றும் ஆசிரியர் தேர்வு வாரியம் மேல்முறையீடு செய்தன.
மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார் மற்றும் வி.லட்சுமி நாராயணன் அமர்வு, "பணி வரன்முறை மற்றும் போட்டித் தேர்வு இரண்டும் வேறுபட்டவை. கவுரவ விரிவுரையாளர்கள் பணி வரன்முறையை உரிமையாக கோர முடியாது" என்று தெளிவுபடுத்தினர்.
நீதிபதி உத்தரவு
மேலும், மொத்தம் 4 ஆயிரம் உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கு ஏற்கனவே 42,064 பேர் விண்ணப்பித்துள்ளதால், வெளிப்படையான போட்டித் தேர்வு நடத்தப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டனர். அதேநேரத்தில், கவுரவ விரிவுரையாளர்களுக்கு அவர்கள் பணியாற்றிய அனுபவத்தின் அடிப்படையில் அதிகபட்சம் 15 மதிப்பெண்கள் வரை 'வெயிட்டேஜ்' வழங்கலாம் என்றும், வயது வரம்பில் தளர்வு அளிக்கலாம் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
மிக முக்கியமாக, தேர்வு நடைமுறைகள் அனைத்தும் 6 மாதங்களுக்குள் முடிக்கப்பட வேண்டும் என்றும், புதிய நியமன உத்தரவுகள் வெளியாகும் வரை தற்போது பணியில் உள்ள கவுரவ உதவி பேராசிரியர்களை பணிநீக்கம் செய்யக்கூடாது என்றும் சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
இறுதி உத்தரவு வெளிவரும் வரை தற்போது பணியாற்றும் கவுரவப் பேராசிரியர்களை நீக்கக் கூடாது. இது அரசு கல்லூரிகளில் தகுதியானவர்களை நியமிக்க உதவும். உயர் கல்வி அமைப்பில் சீரான தேர்வு நியமனங்களை உறுதி செய்கிறது.
-
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?














Click it and Unblock the Notifications