ஆடியோ விவகாரம் 15 நாட்களுக்கு முன்பே தெரிந்து மறைத்தார்.. அண்ணாமலை மீது போலீஸில் புகார்
சென்னை: பாஜக மாநில நிர்வாகியின் ஆடியோ விவகாரத்தில் குற்றத்தை மறைத்த அந்த கட்சியின் தலைவர் அண்ணாமலை மீது வழக்குப் பதிவு செய்ய மதுரை காவல் நிலையத்தில் வழக்கறிஞர் புகார் அளித்துள்ளார்.
மதுரை கே கே நகரைச் சேர்ந்தவர் வழக்கறிஞர் வாஞ்சிநாதன். இவர் மதுரை அண்ணாநகர் காவல் நிலையத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மீது புகார் கொடுத்துள்ளார்.
அந்த புகாரில் அவர் கூறியிருப்பதாவது: கடந்த 2 நாட்களுக்கு முன்பு சமூகவலைதளங்கள், ஊடகங்களில் பாஜக தமிழக ஓபிசி பிரிவின் மாநில பொதுச் செயலாளர் சூர்யா சிவா என்பவர் சிறுபான்மை அணித் தலைவர் டெய்சி சரணை ஆபாசமாகப் பேசி கொலை மிரட்டல் விடுக்கும் ஆடியோ வெளியானது.

டெய்சி சரண்
சூர்யா சிவா டெய்சி சரணை சங்கை அறுத்து சம்பவம் செய்திடுவேன்ய எனது சாதிக்காரனை ஏவி விட்டு கொன்றுவிடுவோன். நாங்கள் 68 சதவீதம் இருக்கிறோம் உள்ளிட்ட ஆபாச வார்த்தைகளால் மிரட்டியுள்ளார். மேலும் அக்கட்சி மாநில அமைப்புச் செயலாளர் கேசவ விநாயகம், அண்ணாமலை, ஜேபி நட்டா, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா போன்றவர்களையும் தொடர்புபடுத்தி பேசியுள்ளார்.

ஆடியோ பிரதி
மேற்படி ஆடியோவின் பிரதியை இப்புகாருடன் இணைத்துள்ளேன். இது குறித்து டெய்சி சரண் கூறுகையில், ஏற்கெனவே 15 நாட்களுக்கு முன்பே இந்த கொலை மிரட்டல் ஆடியோ குறித்து மாநில தலைவர் அண்ணாமலையிடம் கூறியும், அவர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. நான் பார்த்துக் கொள்கிறேன் என அவர் கடந்து சென்றிருக்கிறார். சூர்யா சிவா மீது இந்திய தண்டனை சட்டப்பிரிவுகளின்படி தண்டனைக்குரியது. அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சீர்குலைக்க வன்முறை
ஓபிசி சமூகத்தை சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்தவர் மீது ஏவிவிடுவேன் என சமூகத்தின் இரு பிரிவினரிடையே மோதலைத் தூண்டுவதுடன் பொது அமைதியை சீர்குலைக்க வன்முறையைத் தூண்டியிருக்கிறார். பொது அமைதியை சீர்குலைக்க வன்முறையைத் தூண்டிருக்கிறார். அவர் பெண்களை கேவலமாக பேசி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இந்த விவகாரத்தில் அண்ணாமலை குற்ற சம்பவத்திற்கு புகார் கொடுக்காதது மற்றும் புகார் கொடுக்க சொல்லாதது, தெரிந்தே குற்றத்தை மறைக்கும், குற்றச்செயல், அவர் குற்றம் இழைத்துள்ளார்.

பாஜகவில் குற்றம்
பாஜகவில் பெண்களுக்கு எதிரான குற்றம் தொடருகிறது. குறிப்பாக கே.டி.ராகவன் பிரச்சனை, முன்னாள் எம்.பி. சசிகலா புஷ்பா மீது பொது இடத்தில் பாலியல் வன்முறை நடந்துள்ளது. இக்குற்றச் செயல்களில் ஈடுபட்ட சூர்யா சிவாவின் குற்றத்தை தெரிந்தே மறைத்த அண்ணாமலை மற்றும் சூர்யா சிவா மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்தப் புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
தவெக-வின் 'யு-டர்ன்' அரசியல்.. வெளுத்து வாங்கிய அன்புமணி -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
ராஜ்ய சபா சீட் எதிர்பார்க்கிறோம்.. இறுதி முடிவை விஜய் எடுப்பார்.. செல்வப்பெருந்தகை ஓபன் டாக்! -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
விஜய்: எந்த பயனும் இல்லை.. பிடிங்க.. நீங்க கொடுத்த ரூ.5000 + 1 ரூபாய்.. ஈரோடு விவசாயிகள் அதிரடி! -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர்












Click it and Unblock the Notifications