5 லட்சம் பேர் டார்க்கெட்! அதிமுக மாவட்ட செயலாளர்கள் ஆலோசனையில் எடப்பாடி போட்ட உத்தரவு! பரபர தகவல்
சென்னை: சென்னையில் இன்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அக்கட்சியின் மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் ஆலோசிக்கப்பட்ட முக்கிய விஷயங்கள் பற்றிய தகவல் வெளியாகி உள்ளது.
அதிமுக தற்போது முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் கட்டுப்பாட்டில் உள்ளது. ஒற்றை தலைமை விவகாரம் கடந்த ஆண்டு பூதாகரமாக வெடித்த நிலையில் முன்னாள் முதல்வர் ஓ பன்னீர் செல்வம் கட்சியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டார். இதையடுத்து அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி பொறுப்பேற்று செயல்பட்டு வருகிறார்.

இந்நிலையில் தான் தமிழகத்தில் அதிமுகவை பலப்படுத்தும் பணிகளில் எடப்பாடி பழனிச்சாமி தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான பணிகளை அனைத்து கட்சிகளும் தொடங்கி உள்ளது. அதேபோல் எடப்பாடி பழனிச்சாமியும் தேர்தல் பணிகளை தொடங்கி உள்ளார்.
குறிப்பாக ஓ பன்னீர் செல்வம் தென்மாவட்டங்களில் செல்வாக்கான தலைவராக பார்க்கப்படுகிறார். இதனால் அங்கு தனது செல்வாக்கை உயர்த்த எடப்பாடி பழனிச்சாமி முடிவு செய்து அதற்கான பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார். இதன் ஒருபகுதியாக தான் மதுரையில் ஆகஸ்ட் 20ல் அதிமுக சார்பில் பொன்விழா எழுச்சி மாநாடு நடைபெறுகிறது.
இந்த மாநாட்டுக்கான பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. 9 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இத்தகயை சூழலில் கடந்த மாதம் நடந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் இந்த மாநாடு குறித்து எடப்பாடி பழனிச்சாமி சில அறிவுரைகளை வழங்கினார். இதன் தொடர்ச்சியாக தான் இன்று சென்னையில் அதிமுக மாவட்ட செயலாளர்களுடன் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை நடத்தினார்.
இந்த கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள் பங்கேற்றனர். கட்சி நிர்வாகிகளுக்கு அதுதொடர்பாக முக்கிய உத்தரவுகளை அவர் பிறப்பித்தார். தமிழகம் முழுவதும் இருந்து பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் மூலம் அ.தி.மு.க. தொண்டர்களை மதுரைக்கு அழைத்து வர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த மாநாட்டில் குறைந்தபட்சம் 5 லட்சம் பேரை திரட்ட வேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 10 லட்சம் பேரை திரட்ட முயற்சிக்க வேண்டும் என எடப்பாடி பழனிச்சாமி அறிவுறுத்தி உள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் விரைவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அதிமுகவின் பலத்தை இந்த மாநாட்டில் பிற கட்சிகளுக்கு காட்ட வேண்டும். இதனால் அனைவரும் மாநாட்டுக்கு தொண்டர்களை அழைத்து வர வேண்டும். அதற்கான வாகன ஏற்பாடுகளை முன்கூட்டியே செய்ய வேண்டும் என எடப்பாடி பழனிச்சாமி சொன்னதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
-
Election Exclusive: வாயில் வாஸ்து சரியில்ல.. ஜெயிச்சாலும் திண்டுக்கல் சீனிவாசனுக்கு சிக்கல்! திமுக போடும் பலே ப்ளான்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றுவோம்.. பாஜக வாக்குறுதியை சொல்லி வாக்கு சேகரித்த ராஜன் செல்லப்பா! -
EVM இயந்திரத்தில்.. வேட்பாளர்களின் பெயர் வரிசை தீர்மானிக்கப்படுவது எப்படி? சுவாரசிய தகவல்! -
தேர்தல் நேரத்தில் கல்லா கட்டும் 'குட்டி குட்டி' நிறுவனங்கள்.. சத்தமே இல்லாமல் நடக்கும் மெகா பிஸ்னஸ்! -
எடப்பாடி பழனிசாமி போட்ட 3 கண்டிஷன்? தஞ்சையில் தினகரன் சொன்ன 1 விஷயம்.. உடைந்தது அரசியல் மர்மம் -
எடப்பாடியில் குமுறும் "குக்கர்.." கடைசி நேரத்தில் விஐபி தொகுதியில் விரிசல்? அதிர்ச்சியில் இபிஎஸ் -
பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் அதிகாரி வேலை.. இன்னும் 2 நாட்கள் தான் இருக்கு! உடனே விண்ணப்பிங்க -
தங்கம் மீண்டும் ரூ.10,000? மக்கள் அனைவருக்கும் உள்ள கேள்வி.. ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் நறுக் -
தவெக விற்கு தேர்தலில் ஆதரவு கிடையாது.. ‘ஜனநாயகன்’ லீக் காட்சிகளால் பின்வாங்கிய முஸ்லிம் மக்கள் கழகம் -
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு! -
வீட்டு கேஸ் சிலிண்டர் 14.2 கிலோ எடையில் விநியோகம் செய்யப்படுவது ஏன் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா











Click it and Unblock the Notifications