அதுதான் தோனியின் தமிழ்நாட்டு பாசம்.. இவ்வளவு நாள் சொல்லாம.. இன்னைக்கு சொன்னார் பாருங்க.. செம பின்னணி
சென்னை: இந்திய அணியின் மூத்த வீரர் தோனி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து இன்று தனது ஓய்வை அறிவித்து இருப்பதற்கு பின் முக்கியமான ஒரு விஷயமும் இருக்கிறது.
Recommended Video
கிரிக்கெட் உலகமே அதிர்ச்சி அடையும் வகையில் தற்போது தோனி தனது ஓய்வு முடிவை எடுத்துள்ளார். சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுகிறேன் என்று தோனி வெளிப்படையாக அறிவித்துள்ளார் .
இனி ஒருநாள் மற்றும் டி20, டெஸ்ட் என்று எந்த போட்டியிலும் விளையாட மாட்டார். ஐபிஎல் தொடரில் தொடர்ந்து சென்னை அணிக்காக இவர் விளையாடுவார்.

சிஎஸ்கே எப்படி
சிஎஸ்கே அணிக்காக இவர் தொடர்ந்து விளையாடுவார். தோனிக்கு சென்னை எப்போதும் இரண்டாவது தாய் வீடு போன்றது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணிதான் அவருக்கு எப்போதும் முக்கியம். இதை அவரே பல மேடைகளில் சொல்லி இருக்கிறார் . சென்னை அணி இல்லாத இரண்டு வருடம் தான் பட்ட கஷ்டங்களை , வேதனைகளை அவர் உருக்கமாக பேசி இருக்கிறார். மீண்டும் சென்னை அணி மீண்டு வந்த போது,அதற்கான அறிமுக மேடையிலேயே கண்ணீர் விட்டு இருக்கிறார்.

தமிழக மக்கள்
சென்னை மட்டுமின்றி மொத்த தமிழக மக்களையும் இவருக்கு பிடிக்கும். தமிழ்நாட்டில் இருக்கும் பல ஊர்களுக்கு இவர் டிரிப் அடித்து இருக்கிறார். சென்னையில் பைக்கில் சுற்றி இருக்கிறார். முன்னாள் முதல்வர்கள் ஜெயலலிதா , கருணாநிதியை நேரில் சந்தித்து பேசி இருக்கிறார். நடிகர் விஜய், அஜித், சூர்யா உடன் நெருக்கமாக இருந்துள்ளார். சென்னை மட்டுமின்றி ஊட்டி கொடைக்கானலுக்கும் இவர் சென்று இருக்கிறார்.

தங்கள் மகன்
தமிழகமும் இவரை தங்கள் சொந்த பிள்ளையாக நினைத்துதான் நடத்தி இருக்கிறார். வந்தாரை வாழ வைக்கும் தமிழகம் , இவர் மட்டும் அதில் சிறப்பான இடத்தை கொடுத்தது. இதனால் இன்னும் சில வருடங்கள் இவர் சென்னை அணிக்காக விளையாட வாய்ப்புள்ளது . சென்னை அணியில் இருந்து எதிர்காலத்தில் ஓய்வு பெற்றாலும். தொடர்ந்து சென்னையில் அணியில் முக்கிய முடிவுகளை இவர் எடுப்பார்.

ஓய்வு
இப்படி தமிழகம், சென்னை உடன் அதிக நெருக்கமும் காட்டும் தோனி, சரியாக தனது ஓய்வு முடிவை சென்னையில் அறிவித்து இருக்கிறார். தோனி தனது ஓய்வு முடிவை முன்பே எடுத்துவிட்டார் என்று கூறுகிறார்கள். ஆனால் இத்தனை நாட்கள் காத்து இருந்து அவர் ஓய்வு முடிவை அறிவித்து இருக்கிறார். அதாவது சென்னைக்கு வந்து, சிஎஸ்கேவில் இணைந்த பின் சரியாக ஓய்வு முடிவை அறிவித்து உள்ளார்.

சென்னை முக்கியம்
சென்னையில் இருந்துதான் அறிவிப்பை வெளியிட வேண்டும் என்று காத்திருந்து அவர் இந்த முடிவை எடுத்துள்ளார் என்கிறார்கள். சென்னை அணி நிர்வாகத்துடனும் அவர் இது தொடர்பாக ஆலோசனை செய்தார் என்று கூறுகிறார்கள். தமிழகத்திற்கு கொடுக்கும் பெரிய மரியாதையாக அவர் இதை பார்க்கிறார் என்று கூறப்படுகிறது.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications