சென்னை தொழில் அதிபர் வீட்டில் தங்க, வைர நகைகள்.. சிறுக சிறுக எடுத்த சங்கீதா.. சிக்கியது எப்படி
சென்னை: சென்னை போயஸ் கார்டனில் வசிப்பவர் வனிதா சித்தார்த் என்பவர் தொழிலதிபரான இவர், டிஜிட்டல் பயிற்சி மையம் ஒன்றை நடத்தி வருகிறார். இவருடைய வீட்டில் உள்ள லாக்கரில் இருந்து தங்க, வைர நகைகளும், ரொக்க பணமும் சமீபத்தில் திருட்டுப்போயிருந்தது. அது பற்றி விசாரித்த போது, அங்கு வேலை செய்த சங்கீதா என்ற பெண் மீது புகார் எழுந்தது. அவரை கைது செய்தனர். எப்படி சிக்கினார் என்பதை பார்ப்போம்.
சென்னையில் பிரபல தொழில் அதிபர்கள், நடிகர், நடிகைகள் என பெரிய விஐபிக்ககள் அதிகம் வாழும் பகுதி தேனாம்பேட்டையில் உள்ள போயஸ் கார்டன் பகுதி.. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வீடு, நடிகர் ரஜினிகாந்த் வீடு, சசிகலா வீடு, நடிகர் தனுஷ் வீடு, நடிகை நயன்தாரா வீடு மற்றும் தொழில் அதிபர் இந்திரா நூயி பல்வேறு தொழில் அதிபர்கள் வீடுகள் போயஸ் கார்டனில் உள்ளது.

பிரபல தொழில் அதிபர்களின் வீடுகளில் வேலை செய்யும் பெண்களில் ஒரு சிலர் திருட்டு செயல்களில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டனர். கடந்த சில வருடம் முன்பு நடிகர் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா வீட்டில் தங்க நகைகளை திருடிய வேலைக்கார பெண் கைது செய்யப்பட்டார். அவர் ரஜினி மகளின் வீட்டில் கொள்ளை அடித்து, சொந்தமாக வீடு கட்டியதாகவும், கடன்களை எல்லாம் அடைத்ததாகவும் அப்போது செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. பல கட்ட விசாரணைக்கு பிறகு நகை, பணத்தை போலீசார் பறிமுதல் செய்தார்கள்.
இந்நிலையில் அதே போன்று ஒரு சம்பவம் போயஸ் கார்டன் பகுதியில் மீண்டும் நடந்துள்ளது. சென்னை போயஸ் கார்டனில் வசிப்பவர் வனிதா சித்தார்த் என்பவர் தொழிலதிபரான இவர், டிஜிட்டல் பயிற்சி மையம் ஒன்றை நடத்தி வருகிறார். இவருடைய வீட்டில் உள்ள லாக்கரில் இருந்து தங்க, வைர நகைகளும், ரொக்கப் பணமும் சமீபத்தில் திருட்டுப் போயிருந்தது.
இது தொடர்பாக தொழில் அதிபர் வனிதா சித்தார்த் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில், தேனாம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். சென்னை தேனாம்பேட்டை போலீசார் திருட்டு நடந்த தொழிலதிபர் வீட்டில் நேரடியாக விசாரணை நடத்தினார்கள். அப்போது அவரது வீட்டின் வேலைக்கார பெண் சங்கீதா (25) என்பவர் நகை-பணம் திருட்டில் ஈடுபட்டதாக போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. ஆனால் வேலைக்கார பெண் சங்கீதா தலைமறைவாக இருந்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து தலைமறைவாக இருந்த சங்கீதாவை தேனாம்பேட்டை போலீசார் கைது செய்தனர். வேலைக்கார பெண் சங்கீதாவிடம் இருந்து 24 பவுன் தங்க நகைகள் மீட்கப்பட்டது. சங்கீதா சென்னை திருவல்லிக்கேணி பகுதியை சேர்ந்தவர் ஆவார். சிறுக, சிறுக நகைகளையும், பணத்தையும் திருடியதாக போலீசாரிடம் சங்கீதா வாக்குமூலம் அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த சம்பவம் போயஸ் கார்டன் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
தயவு செஞ்சு குறைஞ்சுடாத தங்கமே.. மீண்டும் திருப்பி வைக்க முடியாது.. தங்கம் விலை சரிவால் ட்விஸ்ட் -
Gold Price: தங்கம் விலை ரூ.2 லட்சத்தை தொடப் போகுது.. இனி குறையவே குறையாது.. உச்சம் தான்! சலானி எச்சரிக்கை -
கன்னியாகுமரியில் 45 சவரன் தங்கம்.. கப்பல் என்ஜினியர் வீட்டில் திருடன் கொடுத்த ஒற்றை க்ளூ -
சட்டுபுட்டுனு அள்ளிப் போடுங்க! தங்கத்தை வாங்கி குவிக்கும் ரிசர்வ் வங்கிகள்.. குறுக்கே வந்த மலேசியா! -
20% வரை சரிந்த தங்கம் விலை! ஆனாலும் இந்தியாவுக்கு முழு பலன் கிடைக்காது! நிபுணர்கள் சொல்லும் விளக்கம் -
Gold Price: ஒரே நாளில் 7,000 சரிந்த தங்கம்.. இப்போ வாங்குறது சரியாக இருக்குமா? நிபுணர்கள் சொல்வது என்ன? -
படக்குனு 10 கிராம் வாங்கிப் போடுங்க மக்களே! சட்டுனு சரிந்த தங்கத்தின் விலை.. இன்னும் சரியப் போகுதாம் -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
Gold Rate Today: திடீர் ஷாக் கொடுத்த தங்கம் விலை.. குறைந்த வேகத்தில் மீண்டும் உயர்வு! மாலையில் அதிர்ச்சி! -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்?












Click it and Unblock the Notifications