அடிதூள்.. இனி இவர்களின் குடும்பத்திற்கு "ரூ.2000 பணம்".. தமிழ்நாடு அரசின் முக்கிய அறிவிப்பு!
தமிழ்நாடு அரசின் இந்த திட்டம் உடனடியாக அமலுக்கு வந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை: குடும்ப தலைவிகளுக்கான உரிமை தொகை ரூபாய் 1000 ஐ தமிழ்நாடு அரசு எப்போது வழங்கும் என்று எதிர்பார்ப்பு நிலவி வரும் நிலையில் தமிழ்நாடு அரசு முக்கியமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளது.
திமுக தேர்தல் அறிக்கையில் குடும்பத் தலைவிகளுக்கு ரூ 1000 உரிமை தொகை மாதந்தோறும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் இந்த திட்டம் இன்னும் நடைமுறைக்கு வரவில்லை.
கடந்த பட்ஜெட்டிலும் இந்த திட்டம் செயல்பாட்டிற்கு வரவில்லை. பொருளாதார ரீதியாக அரசுக்கு இருக்கும் சில சிக்கலால் இந்த திட்டம் இன்னும் செயல்பாட்டிற்கு வரவில்லை. இந்த திட்டம் எப்போது கொண்டு வரப்படும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

எதிர்பார்ப்பு
திமுகவின் இந்த தேர்தல் வாக்குறுதி பல்வேறு காரணங்களுக்காக இன்னும் நடைமுறைக்கு வரவில்லை. முக்கியமாக தமிழ்நாடு அரசின் பொருளாதாரம் சரியாகவில்லை என்ற காரணத்திற்காக இந்த திட்டம் தொடங்கப்படாமல் உள்ளது. தமிழ்நாடு பொருளாதாரத்தை சரி செய்யும் பணிகள் நடந்து வருகின்றன. இந்த உரிமைத் தொகை ஏழ்மையான குடும்பத் தலைவிகளுக்கு மட்டுமே அளிக்கப்படும் என்றும் மாற்றி அறிவிக்கப்பட்டுள்ளது. சில மாற்றங்களுடன் இந்த திட்டம் விரைவில் அமலுக்கு வரும் என்று தலைமை செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தேர்தல் முடிவுகள் எல்லாம் வந்த பின் இந்த உரிமை தொகையை வரும் மார்ச் 8ம் தேதி.. அதாவது சர்வதேச மகளிர் தினத்தில் இருந்து வழங்கலாம் என்று அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

திட்டம் செயல்படும்
விரைவில் இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். நான் கொடுத்த வாக்குறுதியில் இருந்து மாற மாட்டேன். கண்டிப்பாக எனது வாக்குறுதியை நிறைவேற்றுவேன். மக்களுக்கு கண்டிப்பாக மாதம் 1000 ரூபாய் உரிமைத் தொகை வழங்கப்படும். இதில் மாற்றம் இருக்காது என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். தற்போது ஈரோடு கிழக்கு சட்டசபை இடைத்தேர்தல் நடந்து வருவதாக இந்த திட்டம் செயல்படுத்தப்படவில்லை. தேர்தல் முடிந்து அதற்கான அறிவிப்பு வெளியாகலாம் என்று கூறப்படுகிறது.

புதிய திட்டம்
இந்த நிலையில்தான் குடும்ப தலைவிகளுக்கான உரிமை தொகை ரூபாய் 1000 ஐ தமிழ்நாடு அரசு எப்போது வழங்கும் என்று எதிர்பார்ப்பு நிலவி வரும் நிலையில் தமிழ்நாடு அரசு முக்கியமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளது. அதன்படி மாற்றுத்திறனாளிகள் மரணம் அடையும் பட்சத்தில் அவர்களின் வாரிசுகளுக்கு ரூபாய் 2000 வழங்கப்படும். ஆனால் இது மாதம் மாதம் வழங்கப்படும் தொகை அல்ல. மாறாக ஒரு முறை மட்டும் வழங்கப்படும் தொகை ஆகும்.

தொகை
மாற்று திறனாளிகள் ஈம செலவிற்காக இந்த பணம் கொடுக்கப்படும். அதற்கு மாற்று திறனாளிகளின் ஐடி கார்டை உறவினர்கள் கொடுக்க வேண்டும். மாற்று திறனாளிகளுக்கு தேசிய அளவில் ஐடி கார்ட் வழங்கப்பட்டு உள்ளது. இதை காட்டி நிவாரணத்தை பெற்றுக்கொள்ள முடியும். இந்த கார்ட் இல்லாதவர்கள் மாவட்ட நிர்வாக அலுவலகங்களை அணுகி பெற்றுக்கொள்ள முடியும். தமிழ்நாடு அரசின் இந்த திட்டம் உடனடியாக அமலுக்கு வந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
-
2026ல் மீண்டும் திமுக! ஸ்டாலின்தான் முதல்வர்! பாலிமார்க்கெட் கணிப்பு சந்தையில் எகிறும் திமுக கிராஃப் -
பெரம்பூரில் தனி வீடு வாங்கும் விஜய்.. 'அந்நியன்' இமேஜை உடைக்க மாஸ்டர் பிளான்.. களமிறங்கிய ப்ரோக்கர் -
175 தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்தில் போட்டி! திமுக கூட்டணியில் எந்த கட்சிக்கு எத்தனை சீட்? லிஸ்ட்! -
தலித்துகள் என்றால் ஏளனமா? திமுக - விசிக கூட்டணி அவசியமா? தமிழன் பிரசன்னாவை நோக்கி இளைஞர்கள் கேள்வி! -
DMK - DMDK: திமுக - தேமுதிக தொகுதி பங்கீடு.. 10 இடங்கள் ஒதுக்கீடு! கூட்டணியில் 2வது பெரிய கட்சியானது -
காங்கிரஸை நாயுடன் ஒப்பிட்ட நடிகர் போஸ் வெங்கட்! கைநழுவும் அறந்தாங்கி தொகுதி சீட்? டென்ஷன் -
சர்ச்சை பேச்சு விவகாரம்.. முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு மீண்டும் சம்மன் அனுப்ப நீதிமன்றம் உத்தரவு! -
கள்ளக்குறிச்சியை கையில் எடுத்த திருமாவளவன்! விசிகவின் 15 Stronghold உத்தேச பட்டியல்! -
கலைஞர் மகள் கனிமொழிக்கே சீட் இல்லை.. உதயநிதிக்கும் சிக்கல் வரும்னு பயம்! விளாசிய நாம் தமிழர் சீமான்! -
மாப்ள எடப்பாடி தான்.. ஆனா சட்டை அமித் ஷாவோடது! ’ஷா’ அசைவுக்கு ஆடும் பழனிசாமி! போட்டுத் தாக்கிய ஐபி! -
இது லிஸ்ட்லயே இல்லையே.. கோவை திமுக வேட்பாளர் தேர்வில் ட்விஸ்ட் கொடுத்த செந்தில் பாலாஜி -
எங்க வந்து யாருக்கிட்ட.. கொங்கு மண்டலத்துக்கு உதயநிதி மாஸ் பிளான்.. களமிறங்கும் இளைஞரணி












Click it and Unblock the Notifications