மொபைல் ரீசார்ஜ்.. கட்டணத்தில் வருது மாற்றம்! ரிசல்ட்டுக்கு பிறகு காத்திருக்கும் "இடி".. இதுவா காரணம்
சென்னை: தேர்தல் முடிவுக்கு பிறகு, தொலைத்தொடர்பு நிறுவனங்கள் செல்போன் ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்த உள்ளதாக கூறப்படுகிறது. அந்தவகையில், பிரீபெய்டு மற்றும் போஸ்ட் பெய்டு ரீசார்ஜ் கட்டணங்கள் உயர போகின்றன.
இன்றைய நவீன காலகட்டத்தில், செல்போன்கள் யாராலும் தவிர்க்க முடியாத அத்தியாவசியமாகிவிட்டது.. இதை உணர்ந்துதான், தொலைத்தொடர்பு நிறுவனங்கள், தங்களது கஸ்டமர்களுக்கு 28 நாட்கள் முதல் 365 நாட்கள் வரையிலான பல்வேறு சலுகைகளையும் வழங்கி வருகிறது.

5ஜி சேவைகள்: இந்தியாவின் நாட்டில் முன்னணி டெலிகாம் நிறுவனங்கள், 4ஜி மற்றும் 5ஜி சேவையை இப்படி தொடர்ந்து வழங்கி வருகின்றன. அதேபோல, ஏர்டெல் மற்றும் ஜியோ நிறுவனங்கள், 5ஜி சேவைகளை பல பகுதிகளில் வழங்கி வருகின்றன.. வோடபோன் நிறுவனமும் 5ஜி சேவையை விரைவில் வழங்கப்போவதாக கூறியிருக்கிறது.
இப்படிப்பட்ட சூழலில் செல்போன் ரீசார்ஜ்களை உயர்த்த தொலைத்தொடர்பு நிறுவனங்கள் முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது. 10 நாட்களுக்கு முன்பே இதுகுறித்த செய்திகள் வெளியாகியிருந்தன.. தேர்தலுக்குப் பிறகு 25 சதவீத ரீசார்ஜ் கட்டணம் உயரலாம் என்று ஆக்சிஸ் கேபிட்டலின் அறிக்கை தெரிவித்திருந்ததாக தகவல் வெளியாகியிருந்தன. இப்போது மீண்டும் இதே தகவல் வட்டமடிக்க துவங்கியிருக்கின்றன.
டெலிகாம்: கடந்த 2021-ல் 20 சதவீதம்வரை ரீசார்ஜ் கட்டணங்கள் உயர்த்தப்பட்டன.. இப்போது, மறுபடியும் கட்டணத்தை உயர்த்த நாட்டில் முன்னணி டெலிகாம் நிறுவனங்கள் திட்டமிட்டு வருவதாக தெரிகிறது. அந்தவகையில் 10 முதல் 17 சதவீதம் வரை உயர்த்தலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த திடீர் முடிவுக்கு காரணம், 5ஜி உள்கட்டமைப்புக்காக, டெலிகாம் நிறுவனங்கள் அதிக முதலீடுகள் செய்திருக்கின்றன.. 5ஜி திட்டத்தை மேம்படுத்துவதற்காக, ஏராளமான மொபைல் சேவை வழங்குனர்கள் அதிக அளவில் முதலீடுகளை செய்துள்ளார்களாம்.. இதனை ஈடுகட்டுவதற்காகவே, ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்துவதாக சொல்கிறார்கள்.
டெலிகாம் நிறுவனங்கள்: எனவே, தேர்தலுக்கு பிறகு 4G, 5G சேவை வழங்கும் டெலிகாம் நிறுவனங்கள் ப்ரீபெய்ட், போஸ்ட்பெய்டு கட்டணத்தை 10-17% சதவீதம் உயர்த்தப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
ரீசார்ஜ் பேக் விலை உயர்வு ஏற்பட்டால், பாரதி ஏர்டெல் மற்றும் ஜியோ மிகப்பெரிய பயனாளிகளாக இருக்கும் என்று ஆய்வாளர்கள் சொன்னாலும், ரீசார்ஜ் கட்டண விலை உயர்வதை கேட்டு வாடிக்கையாளர்கள்தான் அதிர்ந்து போயிருக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications