Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ரேஷன் வாங்கியாச்சா? அரிசி அட்டைதாரர்கள் 5ம் தேதிக்குள் வாங்கிடுங்க.. ரேஷன்தாரர்களுக்கு புது சிக்கல்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக அரசு நியாயவிலைக் கடை பணியாளர்கள் சங்கம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது.. இதையடுத்து, தமிழக ரேஷன் அட்டைதாரர்கள் பெருத்த கவலைக்கும், கலக்கத்துக்கும் ஆளாகி உள்ளனர்.. என்ன அது?

இந்த போராட்டத்தில் கூட்டுறவு சங்கத்தின்கீழ் செயல்படும் 35,000 நியாயவிலைக் கடை பணியாளர்கள் ஈடுபடுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Ration Card Holders Ration shop workers

பயன்பாடுகள்: தமிழகத்தில் ரேஷன் கடைகளின் நிர்வாகத்தில் பல்வேறு சீர்திருத்தங்கள் அவ்வப்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.. அந்தவகையில், ஸ்மார்ட் அட்டைகள் தற்போது பயன்பாட்டில உள்ள நிலையில், பயோமெட்டிரிக் சரிபார்ப்பு முறையும், தற்போது இணைக்கப்பட்டு விட்டது. ஆதார் அட்டை இணைப்பின் வாயிலாக போலி பயனாளிகள் களையெடுக்கப்பட்டு வருகிறார்கள். இதனால், பயனாளிகளுக்கு தங்குதடையின்றி ரேஷன் பொருட்கள் கிடைத்து வருகின்றன.

அதேபோல, நுகர்வோருக்கு அத்தியாவசிய பொருட்களை சேதாரமின்றியும் தரமாகவும், பாதுகாப்பாகவும் வழங்கும் முயற்சியில் தமிழக அரசு தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறது..

பாக்கெட் விநியோகம்: அந்தவகையில், தமிழ்நாட்டில் உள்ள நியாயவிலைக் கடைகளில் பொது விநியோகத் திட்டப் பொருள்களான அரிசி, சா்க்கரை, துவரம் பருப்பு ஆகியவற்றை பாக்கெட் மூலம் விநியோகிக்கும் திட்டம் முதல்கட்டமாக தமிழ்நாட்டில் உள்ள 234 சட்டப் பேரவைத் தொகுதிகளில், தொகுதிக்கு தலா ஒரு நியாயவிலைக் கடை என சோதனை அடிப்படையில் இம்மாதம் முதல் தேதியிலிருந்து தொடங்கி வைக்கப்பட்டது.

இதன் மூலம் உணவுப் பொருள்களின் சுகாதாரத்தை உறுதிசெய்வதுடன், எடை குறைவின்றி விரைவாக குடும்ப அட்டைதாரா்களுக்கு கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசால் சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்பட்டுள்ள இத்திட்டமானது, பொதுமக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்று வருகிறது.

வேலை நிறுத்தம்: இப்படிப்பட்ட சூழலில், வருகிற செப்டம்பர் 5-ந்தேதி ரேஷன் கடை ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளனர்.. தமிழகத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தின் கீழ் செயல்படும் 35,000 ரேஷன் கடை பணியாளர்கள் செப்டம்பர் 5ம் தேதி முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர்.

வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடப்போவதாக தமிழ்நாடு அரசு நியாய விலைக்கடை பணியாளர்கள் சங்க சிறப்பு தலைவர் அறிவித்துள்ளார். 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி திருவள்ளூரில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் ரேஷன் கடை பணியாளர் சங்க தலைவர் இந்த அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார். பணிப்பதிவேடு பராமரிப்பு, வங்கி மூலம் ஊதியம் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெறவுள்ளது.

கோரிக்கைகள்: தமிழக ரேஷன் ஊழியர்களை பொறுத்தவரை, அத்தியாவசிய பொருட்கள் அளவு, விலை மற்றும் கூடுதல் தொகையுடன் கூடிய ரசீது வழங்கும் வகையில் புதிய 4ஜி விற்பனை முனையம், 4ஜி சிம்கார்டுகள் வழங்கப்பட வேண்டும், விற்பனை முனையத்தில் 2 முறை விற்பனை பதிவு முறையை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்பட 21 அம்ச கோரிக்கைகளை, நீண்ட காலமாகவே வலியுறுத்தி வருகிறார்கள்..

அதுமட்டுமல்லாமல், ரேஷன் கடைகளை பொதுவிநியோக திட்டத்தின் ஒரே துறை நிர்வாகத்தின் கீழ் கொண்டு வர வேண்டும், பொது விநியோக திட்டத்துக்கென தனித்துறையை உருவாக்க வேண்டும், அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் சரியான எடையில் பொட்டலமாக வழங்க வேண்டும் என்பது உட்பட ஏராளமான கோரிக்கைகளை வலியுறுத்தி பலமுறை போராட்டங்களையும், மாவட்டங்களில் முன்னெடுத்து வருகிறார்கள்..

ரேஷன் அட்டைகள்: எனினும், இதற்கு நிரந்தர தீர்வு ஏற்படவில்லை.. அந்தவகையில், இப்போது மறுபடியும் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, போராட்டத்தை அறிவித்திருப்பது, ரேஷன்தாரர்களுக்கு கலக்கத்தை தந்துவருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+