சீமானுக்கு பெரும் பின்னடைவு-ஊர் ஊராக நீதிமன்ற படியேறனும்..பெரியார் வழக்கில் ஹைகோர்ட் அதிரடி உத்தரவு!
சென்னை: தமிழரின் தந்தை பெரியாரை இழிவாக விமர்சித்ததால் தமக்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகள் அனைத்தையும் ஒரே நீதிமன்றத்தில் விசாரிக்க கோரி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. இது சீமானுக்கு மிகப் பெரும் பின்னடைவாகும்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழர் தந்தை பெரியாரை மிக இழிவாக விமர்சித்து மேடைகளில் பேசினார். தந்தை பெரியார், தமிழ்நாட்டின் சீர்திருத்தவாதி அல்ல.. சீரழித்தவர் என்றார். பெரியார், தமிழை காட்டுமிராண்டி மொழி என்றார். தமிழ் மொழியை சனியன் என விமர்சித்தார்; தமிழ்நாட்டு பெண்களை விரும்பிய ஆண்களுடன் உறவு வைத்துக் கொள்ளலாம் என தவறாக வழிநடத்தினார் என ஆதாரமே இல்லாமல் பொய்யாக பேசினார் சீமான்.

இதன் உச்சமாக, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில், தந்தை பெரியார் தொண்டர்கள் மீது பிரபாகரன் தயாரித்து கொடுத்த வெடிகுண்டுகளை வீசுவேன் என கொலை மிரட்டலும் விடுத்தார் சீமான்.
சீமானின் இந்த பேச்சு பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. சென்னையில் சீமான் வீடு முற்றுகையிடப்பட்டு பெரும் போராட்டம் நடத்தப்பட்டது. இதேபோல மதுரை உள்ளிட்ட நகரங்களில் சீமானின் கொடும்பாவி எரிக்கப்பட்டது. தமிழ்நாட்டின் 60-க்கும் மேற்பட்ட காவல் நிலையங்களில் சீமானுக்கு எதிராக புகார்கள் கொடுக்கப்பட்டன; இதனடிப்படையில் வழக்குகளும் பதிவு செய்யப்பட்டன.
இந்த வழக்குகளின் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என சீமானுக்கு நேரிலும் சம்மன் கொடுக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து தம் மீது தொடரப்பட்ட இந்த வழக்குகள் அனைத்தையும் ஒரே நீதிமன்றத்தில் விசாரிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் சீமான் மனுத் தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் இன்று டிஸ்மிஸ் செய்தது.
சீமானுக்கு இது மிகப் பெரும் பின்னடைவாகும். சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவால் தற்போதைய நிலையில், வழக்கு பதிவு செய்யப்பட்ட அனைத்து இடங்களுக்கும் சீமான் நேரில் சென்று ஆஜராக வேண்டிய கடும் நெருக்கடியும் உருவாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.
-
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Next CM: தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் தெரியுமா? சித்தர் கணிப்பை பாருங்க! அப்போ விஜய்? -
அல்வா மாதிரி அள்ளிகிட்டு போன அண்ணியார்.. ஏக கடுப்பில் மாஜி மக்கள் நலக் கூட்டணி! திமுகவுக்கு சிக்கல்? -
எடப்பாடி கோட்டையில் திமுகவுக்கு ஷாக்! அதிமுகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ! -
கூட்டணியில் சொதப்பிய ஆதவ் அர்ஜுனா.. கண் சிவந்த விஜய்.. தவெகவில் உச்சகட்ட மோதல் -
வசமாக சிக்கும் டிரம்ப்.. ஈரான் கப்பல் தாக்கப்பட்ட விஷயத்தில் பெரிய மிஸ்டேக்! ரவுண்டு கட்டும் சட்டம் -
ட்விஸ்ட்! அதிமுக கூட்டணியில் தவெக? 40 சீட் தர எடப்பாடி தயார்! விஜய்க்கு வேற வழியே இல்லையா? -
விசிக முதல் தேமுதிக வரை.. திமுக கூட்டணியில் போர்க்கொடி உயர்த்திய 6 கட்சிகள்.. தொகுதி பங்கீட்டில் இழுபறி -
டிரம்ப்பை ஒன்றுகூடி அடிக்கும் வளைகுடா நாடுகள்.. அமெரிக்காவுக்கு பெரிய செக்! எதிர்பார்க்கவே இல்லை -
அமெரிக்க பாதுகாப்பில் பெரிய ஓட்டை! கச்சிதமாக வேலையை முடித்த ஈரான்! சீனா சொன்ன மேட்டர்! -
உலகப்போர் 3.. கிளைமேக்ஸை நோக்கிச் செல்கிறது ஈரான் போர்.. அமெரிக்கா கையில் எடுக்கும் அணுகுண்டு!












Click it and Unblock the Notifications