கொரோனா தடுப்பூசி செலுத்தினாலும் விதிமுறைகளை கட்டாயம் கடைபிடிங்க - நடிகர் விவேக்

அரசு மருத்துவமனைகளில் திறமையான மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளனர். அவர்களை நம்பி பொதுமக்கள் அனைவரும் சீக்கிரமாக கரோனா தடுப்பூசியைச் செலுத்திக்கொள்ள வேண்டும் என்று நடிகர் விவேக் கூறியுள்ளார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: அரசு மருத்துவமனைகளில் திறமையான மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளனர். அவர்களை நம்பி பொதுமக்கள் அனைவரும் சீக்கிரமாக கரோனா தடுப்பூசியைச் செலுத்திக்கொள்ள வேண்டும் என்று நடிகர் விவேக் கூறியுள்ளார். சமூகப் பாதுகாப்புக்கு கண்டிப்பாக தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்றும் விவேக் கேட்டுக்கொண்டுள்ளார்.

நடிகர் விவேக் இன்று சென்னை, ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார். அப்போது, சுகாதாரத் துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பலரும் உடனிருந்தனர்.

தடுப்பூசி செலுத்திக்கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் விவேக், கொரோனா தடுப்பூசி குறித்து பலவித வதந்திகள் பொதுமக்களிடையே உலா வருகின்றன. கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வதால் நமக்கு எந்தவித ஆபத்தும் இல்லை. ஆனால், பாதுகாப்பு உண்டு என்று கூறினார்.

அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி

அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி

வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க அரசு மருத்துவமனையில் நான் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டேன். இந்தியாவில் ஒரு நாளுக்கு 2 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று ஏற்படுகிறது. தமிழகத்தில் ஒரு நாளுக்கு கிட்டத்தட்ட 7,000 பேருக்கு கொரோனா தொற்று ஏற்படுகிறது.

கொரோனா தடுப்பூசி

கொரோனா தடுப்பூசி

முகக்கவசம், கைகளை அடிக்கடி கழுவுதல், தனிமனித இடைவெளியும் ஆகியவைதான் மக்களுக்கு சமூகப் பாதுகாப்பு. ஆனால், கொரோனா தடுப்பூசி மட்டும்தான் மருத்துவ ரீதியான ஒரேயொரு பாதுகாப்பு. இதுதான் உயிரைக் காப்பாற்றுகின்ற பாதுகாப்பு. இதைச் செலுத்திக்கொண்டால் கொரோனா தொற்று வராது என்பதல்ல. வந்தாலும் உயிரிழப்பு இருக்காது.

தடுப்பூசி மேல் பழி போட வேண்டாம்

தடுப்பூசி மேல் பழி போட வேண்டாம்

இரு டோஸ் செலுத்திக்கொண்ட இரு வாரங்களுக்குப் பின்புதான் நோய் எதிர்ப்பு சக்தி நம் உடலில் உண்டாகும். அதுவரை நாம் பாதுகாப்பில்லாமல் இருந்து கொரோனா வந்தால் நாம் தடுப்பூசி மேல் பழியை போடக்கூடாது. தடுப்பூசி போட்டுக்கொண்டாலும் சமூகப் பாதுகாப்பு வளையத்துக்குள்தான் நாம் இருக்க வேண்டும்.

பக்க விளைவு இல்லை

பக்க விளைவு இல்லை

அரசு மருத்துவமனைகளில் திறமையான மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளனர். அவர்களை நம்பி பொதுமக்கள் அனைவரும் சீக்கிரமாக கொரோனா தடுப்பூசியைச் செலுத்திக்கொள்ள வேண்டும். நானும் அரசு மருத்துவமனையில்தான் தடுப்பூசி போட்டுக்கொண்டேன். ஊசி போட்டது போலவே தெரியவில்லை எந்த வலியும் இல்லை. யாருக்கும் எந்தப் பக்கவிளைவும் ஏற்படவில்லை என்பதுதான் அரசுத் தரப்பில் சொல்லப்படும் தகவல். சமூகப் பாதுகாப்புக்கு கண்டிப்பாக தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்றும் நடிகர் விவேக் கேட்டுக்கொண்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+